தபால் நிலையங்களில் வங்கி சேவை…!! மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைக்கிறார்.
நாகர்கோவில், இந்திய அஞ்சல் துறை, வங்கித்துறையில் கால்பதிக்கும் விதமாக “இந்தியா போஸ்ட் பேமண்ட் பேங்க் (இந்திய அஞ்சல் பணப்பட்டுவாடா வங்கி)“ என்ற பெயரில் அஞ்சல் வங்கி சேவை திட்டம் நாளை (சனிக்கிழமை) முதல் தொடங்கப்படுகிறது. பிரதமர் நரேந்திரமோடி இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தில் கணக்கை தொடங்க விரும்புபவர்கள் தங்கள் பகுதி தபால்காரர்களை வரவழைத்து தங்கள் வீட்டில் இருந்தபடியே கணக்கை தொடங்கலாம். கணக்கை தொடங்கியவர்கள் கணக்கில் இருக்கும் பணத்தைப்பெற வங்கியை நாடிச்செல்ல வேண்டியதில்லை. தபால்காரர்களை வீட்டுக்கு … Read more