இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்.. அறிவித்தது மத்திய அரசு… தமிழக அரசுக்கும் பாராட்டு…

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சிறப்பான நிர்வாகம் நடக்கும் மாநிலங்கள் எவை, எவை என்று மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டு இந்த ஆய்வு  மத்திய அரசின் நிர்வாகத் சீர்திருத்தத்துறையால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தமிழ்நாடு இந்தியாவிலே முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதில் மாநிலங்களில் நிலவும் சட்டம் ஒழுங்கு, பொதுமக்கள் பாதுகாப்பு, மாநில  உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் இதில்,  விவசாயம், தொழில் ஆகியவையும் இந்தக் கணக்கெடுப்பில் ஆய்வு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் எந்தெந்த மாநிலங்கள் … Read more

குடியுரிமை விவகாரத்தில் காங், தலைவர் சோனியாவை பொய்யின் மீது எழுச்சியை உண்டாக்கும் ஒரு நாஜியின் உண்மையான நாஜி மகளே என சு.சாமி கடுமையான சாடல்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர்  என அனைவரும்  போராட்டங்கள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்க்கு ஆதரவு அளித்த சோனியா காந்தியை நாஜியே என குறிப்பிட்டு கடுமையாக சாடல். இந்நிலையில், இந்தப் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் விதமாக  காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவரான சோனியா காந்தி காணொலி காட்சி மூலம் தனது ஆதரவை தெரிவித்தார். மேலும் அவர், பாரதிய ஜனதா கட்சியின் இந்த அரசு மக்களின் குரலுக்கு செவிசாய்ப்பது இல்லை  எனவும் … Read more

கங்கை கரை படியில் பிரதமர் மோடி தடுக்கி விழுந்த படிகளை விரைந்து இடிக்க உ.பி அரசு முடிவு..

வற்றாத ஜீவ நதியான கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தேசிய அமைப்பை மத்திய அரசு அமைத்தது. இதில் கலந்து கொண்டு திரும்பும் போது பிரதமர் மோடி தவறி விழுந்த படிகளை விரைவாக இடிக்க உத்திரபிரதேச அரசு முடிவு. அந்த  அமைப்பின் முதல் கூட்டம் உத்திரபிரதேசம் மாநிலம்  கான்பூரில் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. இந்த   கூட்டத்தை  முடித்துவிட்டு பிரதமர் மோடி கங்கை நதியில் படகுப் பயணம் செய்துவிட்டு  திரும்பிய போது கங்கை கரையின்  படியில்  ஏறும்போது சீரற்ற … Read more

தேசிய குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை…!!! அமித் ஷா தடாலடி அறிவிப்பு..!!!

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டம்  உறுதியாக அமலாகும். இந்த சட்டத்திலிருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று பாரதிய ஜனதா கட்சி தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா திட்டவட்டமாகத் தெரிவித்தார். இந்நிலையில், மகாராஷ்டிரம் மாநிலம் மும்பையில் இன்று நடைபெற்ற இந்தியப் பொருளாதாரக் கருத்தரங்கில்  இந்திய  உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது, ”மத்திய அரசு நாடாளுமன்றத்தில் திருத்தம் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ள குடியுரிமைச் சட்டம் சிறுபான்மையினருக்கு ஒருபோதும் எதிரானது அல்ல என்பதை … Read more

மோடி, அமித்ஷாவுக்கு அமெரிக்காவில் தடை…!!!குடியுரிமை சட்டதிருத்தத விவகாரத்தின் விளைவு…!!!

தற்போது இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால்  உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தடை விதிக்கும்படி அமெரிக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என அமெரிக்காவை சேர்ந்த, சர்வதேச மத சுதந்திர ஆணையம் எச்சரித்துள்ளது. இந்த  குடிமக்கள் சட்ட திருத்த மசோதாவிற்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச மத சுதந்திர ஆணையம்’ மத்திய அரசை நேரடியாகவே  எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே … Read more

அத்வானியும் மன்மோகனும் கூட புலம்பெயர்ந்து வந்தவர்கள் தான்…!!! அமித் ஷா பளீர்..!!!

லால் கிருஷ்ண அத்வானி, மன்மோகன் சிங் ஆகியோர் கூட புலம்பெயர்ந்து இந்தியா வந்தவர்கள் தான் என்று மக்களவையில் தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தின் போது உள்துறை அமைச்சர்  அமித் ஷா ஆக்ரோசமாக  பேசியுள்ளார். மாநிலங்களவையில் இன்று அமித் ஷா கடும் விவாதம். மக்களவையில் இன்று  மசோதாவை தாக்கல் செய்து  உள்துறை அமைச்சர்  கூறியதாவது குடியுரிமை சட்டம் என்பது  சிறுபான்மையினருக்கு 0.001%  கூட எதிரானது அல்ல.முன்னால் பிரதமர்  இந்திரா காந்தி பங்களாதேஷில் இருந்து மக்களை அழைத்து … Read more