மத்திய அரசனது முப்படைகளையும் அதன் பாதுகாப்பு அம்சங்களையும் இன்னும் மேம்படுத்தும் நோக்கில் போர் விமானங்கள், போர் வாகனங்கள், போர் ஆயுதங்கள், போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் என தரைப்படை, கடற்படை ,விமானப்படை இந்த முப்படைகளுக்கும் தேவையான உபகரணங்களை இந்திய அரசாங்கம் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி தரைப்படையை மேம்படுத்த 2600 போர் வாகனங்களும், 1700 ஆயுதம் தாங்கிய வாகனங்களும் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்து விமானப்படைக்கு 110 போர் விமானங்களும், வடக்கு மேற்கு இந்திய எல்லைப் பகுதிகளில் ராணுவ தளவாடங்கள் […]
ஜம்மு காஷ்மீர் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும் காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பின்னர் அங்கு பதட்டமான சூழ்நிலை இருந்து வருகிறது .இதனால் ராணுவம் அங்கு குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. காஷ்மீர் பிரிப்புக்கு பின்னர் பாக்கிஸ்தான் சில நகர்வுகளை நகர்த்தி வருகிறது .அதன் விளைவாக பாக்கிஸ்தான் இந்தியாவுடான வர்த்தக உறவை நிறுத்தியது அதன் பின்பு டெல்லியில் இருந்து லாகூர் செல்லும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் இரயிலை […]
இலங்கையிலிருந்து லட்சத்தீவுகள் நோக்கி ஐஎஸ் தீவிரவாதிகள் செல்வதாக ரகசிய தகவல் வெளியானதை அடுத்து இந்தியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு உலகையே உறைய வைத்தது.இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐஸ் அமைப்பு பொறுப்பேற்றது.இதனால் இலங்கையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ,இது தொடர்பாக புலனாய்வு அமைப்புகளும் விசாரணை நடத்தி வருகின்றது. இந்நிலையில் இலங்கையிலிருந்து லட்சத்தீவுகள் நோக்கி படகு ஒன்றில் 15-க்கும் மேற்பட்ட ஐஎஸ் தீவிரவாதிகள் செல்வதாக ரகசிய தகவல் வெளியாகி உள்ளது. கேரள கடல் எல்லை வழியாக ஐஎஸ் தீவிரவாதிகள் […]
தற்போது சீனா தென்சீனக் கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் விதமாக மிதவைகள், கப்பல்கள், செயற்கைக் கோள்கள், மற்றும் நீரில் ஊடுருவிச் செல்லும் கருவிகள் என அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பை இந்தியப் பெருங்கடல் மற்றும் தென் சீனக் கடல் பகுதியில் சீனா நிறுவியுள்ளது. இவற்றின் மூலம் அனுப்பப்படும் தகவல்கள் பராசல் தீவுகள், குவாங்டாங் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 3 மையங்களை வந்து சேரும்.தென்சீனக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில், சீனா தனது […]
ராமேஸ்வரம் அருகே உள்ள சேரன்கோட்டையில் இலங்கையை சேர்ந்த ஒரு மீனவ கப்பல் ஒன்று கவிழ்ந்து கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மீனவர்கள் அருகில் சென்று பார்த்தபோது அதில் யாரும் இல்லை. பின்னர் இதுகுறித்து கடற்படை காவல் படை அந்த படகை கைப்பற்றி அதனை கண்டு மீனவர்கள் யாரும் பயப்பட வேண்டாம் எனவும் கூறிவிட்டு சென்றனர். இதன் விசாரணை நடந்து வரகின்றனர்.
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவர்கள் பற்றியும், எதிர்காலத்தில் புயல் பாதிப்புக்களை உயிர்ச்சேதமின்றி எதிர்கொள்வது பற்றியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் ,நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான டி.கே.ரெங்கராஜன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பி.சம்பத் ஆகியோர் இந்திய கடற்படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சுவ்ரோஜோதி ராய் அவர்களை நேரில் சந்தித்து விவாதித்தனர்.
கப்பற்படை தினத்தை முன்னிட்டு 6 நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டும் பணி நேற்று தொடங்கப்பட்டது. இந்த நீர்மூழ்கி கப்பல்கள் அணுஆயுத தாக்குதல் திறன் கொண்டவை ஆகும். இத்திட்டம் தொடர்பாக, நேற்று டெல்லியில் கப்பற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் அளித்த பேட்டியில்: ‘அணு ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தும் திறனுள்ள 6 நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்கும் கனவு திட்டம் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கப்பற்படையின் பலம் அதிகரிக்கும். எந்த தாக்குதலையும் சமாளிக்கும் […]
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கடற்படை கமாண்டோ மகள் சுபாங்கி சொரூப் இந்திய கடற்படையின் முதல் பெண் விமான பைலட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கேரளாவில் உள்ள கண்ணூரில் “எழிமலா நேவல் அகாடமி” பயிற்சி மையத்தில் கடற்படை பயிற்சியை பெற்றார். அதேபோல் இதே பயிற்சி மையத்தில் படித்த மூன்று பெண்கள் கடற்படையின் ஒரு பிரிவான போர்தளவாடங்கள் ஆய்வாளரகத்துக்கு (என்.ஏ.ஐ.) முதல் பெண் அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் டெல்லியை சேர்ந்த அஸ்தா செகல், புதுச்சேரியை சேர்ந்த ஏ.ரூபா, கேரளாவை சேர்ந்த எஸ்.சக்தி மாயா ஆகியோர் ஆவர். […]