பிரதமர் இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று அதிபர் ஆரிப் ஆல்வி நாடாளுமன்றத்தைக் கலைத்தார். பிரதமர் இம்ரான் கான் அரசின் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த, பாகிஸ்தான் தேசிய சட்டசபையின் நடவடிக்கைகள் இன்று நடைபெற்ற நிலையில், பிரதமர் இம்ரான் கான் சட்டசபைக்கு வரவில்லை. இதனால், பாகிஸ்தானில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறாது என நாடாளுமன்ற துணை சபாநாயகர் காசிம்கான் அறிவித்திருந்தார். இதற்கிடையில், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும் என அதிபருக்கு பிரதமர் இம்ரான்கான் […]
பாகிஸ்தான்:MQM கட்சி ஆதரவை விலக்கிக் கொண்ட நிலையில் இம்ரான்கான் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. பாகிஸ்தானின் பொருளாதார வீழ்ச்சிக்கு பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.இதனையடுத்து,இம்ரான்கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. MQM கட்சி திடீர் அறிவிப்பு: இந்நிலையில்,பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு அளித்த ஆதரவை MQM கட்சி விலக்கிக் கொண்ட நிலையில்,எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக MQM கட்சி அறிவித்துள்ளது. இதன்காரணமாக இம்ரான்கான் அரசு […]
பாகிஸ்தானில் கடந்த சில வ்ருடங்களாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.இதற்கு முழு காரணமாக சொல்லப்படுவது பிரதமர் இம்ரான் கான் என்றும் அவரின் மோசமான அணுகுமுறையை இந்த நிலைமைக்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இம்ரான் கானுக்கு எதிராக ஆளும் கட்சினர் முதல் கூட்டணி கட்சியினரே எதிராக திரும்பியுள்ளனர்.இதனை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சியினர் நாளை நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வருகின்றனர்.இதற்கு முன்னரே இம்ரான் கான் பதவி விலகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் நடந்த […]
அமெரிக்கா – சீனா இடையே உருவாகும் விரிசலும் பாலமாக செயல்பட பாகிஸ்தான் விரும்புகிறது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத்தில் அமைதி மற்றும் வளர்ச்சியடைந்த தெற்கு ஆசியா எனும் தலைப்பில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த கருத்தரங்கில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்கள் பங்கேற்று உள்ளார். அதில் பேசிய பிரதமர், பனிப்போர் நோக்கி செல்லும் சூழ்நிலை உருவாகி இருப்பதாகவும், நாடுகள் குழுக்களாக உருவாகி வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு நாடுகள் குழுக்களாக […]
இந்தியா வழங்கும் 50,000 டன் கோதுமையை ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு செல்ல தனது அரசாங்கம் அனுமதிக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார். இஸ்லாமாபாத்தில் நிறுவப்பட்ட புதிய ஆப்கானிஸ்தான் இன்டர்-மினிஸ்டீரியல் ஒருங்கிணைப்பு பிரிவுக்கு (AICC) இன்று இம்ரான் கான் பயணம் செய்தார். முதல் உயர்மட்ட குழு கூட்டத்திற்கு இம்ரான் கான் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா மற்றும் தேசிய […]
ஆப்கானிஸ்தான் தூதரின் மகளை கடத்தியவர்களை 48 மணி நேரத்தில் கைது செய்ய பாகிஸ்தான் பிரதமர் உத்தரவிட்டுள்ளார். அண்டை நாடான பாகிஸ்தானில் பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் நஜிபுல்லா அலிகிலின் மகள் சில்சிலா அலிகில் நேற்று முன்தினம் மதியம் 1.30 மணியளவில் ஜின்னா சந்தை அருகே சில்சிலா அலிகில் கடத்தப்பட்டு இரவு 7 மணியளவில் காயமடைந்த நிலையில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் ஆப்கான் தூதரின் மகள் கடத்தலில் ஈடுபட்ட நபர்களைக் கைது செய்ய அனைத்து விதமான resources பயன்படுத்துமாறு உள்துறை […]
கிரிக்கெட்டில் வீரர்கள் பலரும் “நோபால்” வீசிவரும் நிலையில், கிரிக்கெட் வரலாற்றிலே இதுவரை “நோபால்” வீசாத 5 வீரர்கள் குறித்து காணலாம். கிரிக்கெட் என்பது, அனைவரும் அறிந்த ஒரு விளையாட்டாகும். இந்த விளையாட்டில் பல சாதனைகளை முன்னாள் ஜாம்பவான்களும், தற்பொழுதுள்ள வீரர்கள் படைத்து வருகின்றனர். அந்தவகையில், கிரிக்கெட்டில் வீரர்கள் பலரும் “நோபால்” வீசிவரும் நிலையில், கிரிக்கெட் வரலாற்றிலே இதுவரை “நோபால்” வீசாத 5 வீரர்கள் குறித்து காணலாம். 1. எல் கிப்ஸ் (L Gibbs): மேற்கு இந்திய அணியின் […]
கொரோனாக்கு எதிரான தடுப்பூசியை போட மக்கள் தயக்கம் காட்டி வரும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சீனாவின் தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் குறையதொடங்கிய நிலையில், தற்பொழுது மீண்டும் பரவத்தொடங்கியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதில் இந்தியா, ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள், உலகளவில் பல நாடுகளில் […]
எல்லை பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவதில்லை என இந்தியா முடிவு செய்துள்ளது – இம்ரான் கான் உலக முழுவதும் கொரோனா சூழலில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே போட்டி நடத்த வேண்டும் என்றும் அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை இருநாட்டு கொரோனா மீட்புப்பணிக்கு பயன்படுத்த வேண்டும் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அக்தர் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் நிகழ்ச்சி ஒன்றில் கூறுகையில், தற்போதுள்ள அரசாங்கத்துடன் இரு அணிகளும் கிரிக்கெட் விளையாடினால் […]
துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமானது தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு குழந்தை மற்றும் 2 விமானிகள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மற்றும் அருகிலுள்ள பிற மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கோர விபத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் உட்பட பலர் தங்கள் வருத்தங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கேரளா விமான விபத்து குறித்து […]
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் இம்ரான் கான் மற்றும் சச்சினை பற்றி கூறியுள்ளார். இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் கடந்த 1983-ல் இந்தியா நடந்த உலகக்கோப்பையை வென்றபோது அணியின் தலைவராக இருந்தார். அதற்கு பிறகு 1999 அக்டோபர் முதல் ஆகஸ்ட் 2000 வரை இந்தியத் தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். மேலும் அவர் இந்தியாவிற்காக செய்த சாதனை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். இந்நிலையில் சமீபத்தில் கபில் தேவ் அளித்த பேட்டி […]
இஸ்லாமாபாத்: பயங்கரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான் என்று அமெரிக்காவின் அறிக்கை அன்மையில் வெளியான அடுத்த நாளே, பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை தியாகி எனப் புகழந்த சம்பவம் சர்வதேச அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை பாகிஸ்தான் தொடர்பாக கடந்த புதனன்று வெளியிட்ட மதிப்பீடு அறிக்கை கூறியுள்ளதாவது: பாகிஸ்தான் இன்னமும் பயங்கரவாதிகளின் புகலிடமாக விளங்கி வருகிறது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானை குறிவைத்து செயல்படுகின்ற பயங்கரவாதிகளுக்கு எதிராக தீர்க்கமான […]
அல் கொய்தா தீவிரவாத அமைப்பு தலைவரான பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் ஒரு தியாகி என பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கூறினார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசுகையில், தீவிரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் எத்தனை உயிர்களை தியாகம் செய்துள்ளது. இருந்தும் உலக நாடுகளின் பார்வையில் பாகிஸ்தான் எவ்வாறு விமர்சிக்கப்பட்டது என தனது உரையினை நிகழ்த்தினார். அதில் அவர் மேலும் கூறுகையில், தீவிரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா நடத்திய போரில் பாகிஸ்தான் அமெரிக்காவிற்கு […]
பண பரிமாற்ற திட்டத்தில் இந்தியாவுக்கு உதவுவதாக பாகிஸ்தான் பிரதமர் அறிவித்த நிலையில், அவருக்கு இந்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் தக்க பதிலடி கொடுத்துள்ளார். பாகிஸ்தானில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அங்கு கொரோனவால் இதுவரை 1.25 லட்சத்துக்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,463க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அங்கு நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் அரசு திணறி வருகிறது. மேலும் […]
கொரோனா வைரஸ் காரணமாக இந்தாண்டு நடைபெற இருந்த கிரிக்கெட் தொடர்கள் அனைத்து ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். அந்தவகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி உலகக்கோப்பை தொடரின் ஆல்டைம் லெவனை தேர்வு செய்துள்ளார். இதில் முக்கிய வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் இம்ரான் கானுக்கு இடமில்லை. சச்சின் டெண்டுல்கரின் ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர். சாகித் அப்ரிடியின் ஆல்டைம் ஐபிஎல் லெவன் :- 1. தொடக்க வீரர்கள் […]
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானைச் சந்தித்தவருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.இதற்கு இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானும் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பவில்லை.அங்கு கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கு இடையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை சந்தித்து எத்தி அறக்கட்டளையின் தலைவர் ஃபைசல் எத்தி ஏப்ரல் 15 ஆம் தேதி ரூ.1 கோடி நிவாரண தொகை வழங்கினார். இந்நிலையில் தான் இம்ரான் கானுடனான சந்திப்பிற்கு பிறகு […]
டெல்லியில் அரங்கேறி வன்முறை சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் ஒரு பதிவை பதிவிட்டு உள்ளார்.அதில் “வெறுப்பு அடிப்படையிலான இனவாத சித்தாந்தங்கள் தலைதூக்கினால், அது ரத்தம் சிந்துதலையே ஏற்படுத்தும். என கூறினார். Today in India we are seeing the Nazi-inspired RSS ideology take over a nuclear-armed state of over a billion people. Whenever a racist ideology based on […]
முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும், தற்போதைய பாக்கிஸ்தான் பிரதமருமான இம்ரான்கான் அண்மையில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மாநாட்டிற்கு தனது மனைவி புஸ்ரா பிபியை கூட்டி வந்திருந்தார். ஆனால், யாரும் அவரது மனைவியின் முகத்தை பார்க்க முடியவில்லை. காரணம் அவர் மனைவி புஷ்ரா பிபி, தன் தலை முதல் கால் வரை துணியால் மறைக்கும்படி இஸ்லாமிய பெண்கள் உடுத்தும் ஆடை உடுத்தி வந்திருந்தார். இதனால் யாரும் இம்ரான் கானின் மனைவிமுகத்தை பார்க்கவில்லை. இதுகுறித்து இம்ரான்கான் வீட்டில் வேலை […]
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியுள்ளனர். முதலில் பேசிய நரேந்திர மோடி கடந்த 5 ஆண்டுகளில் தனது அரசு நிகழ்த்திய சாதனைகளையும், இனிமேல் செயல்படுத்தவுள்ள திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். அப்போது மோடி தூய்மை இந்தியா, காச நோய் இல்லாத நாடு, கழிப்பறை வசதிகள் குறித்து சிறப்பாக பேசினார். இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசத் தொடங்கினார். இம்ரான் கான் […]
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று நடைபெற்ற ஐ.நா சபையின் 74வது பொதுக்கூட்டத்தில் பல நாட்டுத் தலைவர்கள் பங்கேற்று தங்களது சிறப்பான உரையாற்றினர். இந்நிலையில் இன்று ஐ.நா. சபை கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது இந்திய வளர்ச்சி, பருவநிலை மாற்றம் பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியிருந்தார். இதையடுத்து பேசத் தொடங்கிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி குறித்து பல்வேறு குற்றங்களை சாட்டியுள்ளார். பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற […]