சென்னை : தமிழகம் முழுவதும் 9 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 36 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் நா.முருகானந்தம் வெளியிட்டார். இந்நிலையில், இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இந்தச் சந்திப்பின்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புதிய மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் உரையாற்றிய போது, இன்று முதல் மக்களுடன் நேரடி தொடர்பில் […]
டெல்லி: நடப்பு ஆண்டிற்கான யுபிஎஸ்சி (UPSC) தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. IAS, IFS, IPS உள்ளிட்ட 23 பதவிகளுக்கு இன்று (ஜனவரி 22) முதல் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மொத்தம் 979 குடிமைப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு மே 25ஆம் தேதி நடைபெறவுள்ளது. நாட்டின் மிக உயரிய பதவிகளுக்கான இந்தத் தேர்வை எதிர்நோக்கி காத்திருக்கும் தேர்வர்கள் https://upsconline .gov.in என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
சென்னை : தமிழக துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், அவருடைய செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரியான பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டிருப்பதாகவும், மேலும், சில முக்கிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, உயர்கல்வித்துறை புதிய செயலாளராக கோபால் ஐஏஎஸ் அவர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மின் வாரிய தலைவராக இருந்த ராஜேஷ் லக்கானி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் செயலாளராக […]
சென்னை : தமிழ்நாட்டில் மதுவிலக்குப் பிரிவு இயக்குனர் பொறுப்பு புதியதாக உருவாக்கப்பட்டு, அந்த பொறுப்பிற்கு ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகா நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை 10 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனை தொடர்ந்து, மேலும் 25 ஐஏஎஸ் அதிகாரிகள் தற்பொழுது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கைகளும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இன்று ஒரே நாளில் 40க்கும் மேற்பட்ட இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் நிர்வாக காரணங்களுக்காக […]
தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணல் அள்ளுவதாகவும், அதன் மூலம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாகவும் கூறி கடந்த செப்டம்பர் மாதம் அமலாக்கத்துறையினர் பல்வேறு தொழிலதிபர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கோடிக்கணக்கில் ரொக்க பணம், 1000 கிராம் அளவில் தங்க நகைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு இருந்தன. இந்த சோதனையை தொடர்ந்து, தமிழக நீர்வளத்துறை பதிலளிக்கவும், குறிப்பிட்ட 10 மாவட்ட ஆட்சியர்கள் பதில் கூறவும் அமலாகித்துறை சம்மன் அனுப்பியது. ஆட்டோ […]
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள், 16 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் மேலும் 11 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, […]
தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சுற்றுலாத்துறை மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக மேலாண் இயக்குநராகவும், வணிகவரி முதன்மை செயலர் தீரஜ்குமார் தகவல் தொழில்நுட்பத்துறை, டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மை செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குநர் ஜெயஸ்ரீ முரளிதரன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுபோன்று, பள்ளிக்கல்வித்துறை செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி குமரகுருபரனை நியமித்துள்ளது தமிழ்நாடு அரசு. […]
இன்று தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் 16 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை தமிழக தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா.ஐஏஎஸ் மற்றும் தமிழக உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா பிறப்பித்த உத்தரவின்படி பணியிட மாற்றப்பட்ட 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் பெற்றுள்ள விவரங்கள் பின்வருமாறு… தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த செந்தில்ராஜ்.ஐஏஎஸ், தற்போது சிப்காட் இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட […]
16 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அபூர்வா, ஹிதேஸ்குமார் மக்வானா, அதுல்யா, எஸ்.ஜே.சிரு, ஆபிரகாம், சரவண வேல்ராஜ், ஜான் லூயிஸ், செல்வராஜ், லில்லி, நந்தகோபால், கிரண் குராலா, பழனிசாமி உள்ளிட்ட 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தலைமை செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். விளையாட்டு துறை கூடுதல் செயலாளராக அதுல்ய மிஸ்ரா, வீட்டு வசதி துறை முதன்மைச் செயலாளராக அபூர்வா, பேரூராட்சிகள் இயக்குனராக கிரண் […]
IAS, IPS, IFS அதிகாரிகளுக்கான அரையாண்டு மற்றும் மொழித் தேர்வு தேதியை மாற்றம் செய்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு. IAS, IPS, IFS அதிகாரிகளுக்கான அரையாண்டு மற்றும் மொழித் தேர்வு (அக்டோபர்-2022 எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு) நடைபெறும் தேதியை மாற்றம் செய்து டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதன்படி, அக்டோபருக்கு பதில் நவம்பர் 1, 2, 3, 4, 5 & 10 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும் என்றும் விரிவான அட்டவணை http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனவும் […]
தமிழ்நாடு ஆட்சிப்பணியை உருவாக்குவது குறித்து பரிசீலிக்க தமிழக அஸ்ருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை. அனைத்து குரூப் 1 அதிகாரிகளும் ஐஏஎஸ் அந்தஸ்து பெற தமிழ்நாடு ஆட்சிப் பணியை உருவாக்க பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது. ஐஏஎஸ் அந்தஸ்து பெற அனைத்து குரூப் 1 அதிகாரிகளையும் இணைத்து தமிழ்நாடு ஆட்சிப்பணி உருவாக்க தமிழ்நாடு அரசுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. வருவாய் துறையினர் 7-8 ஆண்டுகளில் ஐஏஎஸ் அந்தஸ்து பெறும் நிலையில், பிறதுறைகளில் உயர்ந்த பதிவில் இருந்தாலும் […]
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியீடு. ஐஏஎஸ் மற்றும் குரூப்-1 தேர்வில் வெற்றி பெறும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க உத்தரவிட்டு, அதற்கான அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. அதன்படி, ஐஏஎஸ், குரூப்-1 தேர்வில் வெற்றி பெறும் மாற்றுத்திறனாளிகளில் ஊக்கத்தொகை பெற தகுதிவாய்ந்த 39 மாணவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு சிறப்புச் செயலாளர் எஸ்.நடராஜன் ஐஏஎஸ் அவர்கள் போக்குவரத்துத் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு,போக்குவரத்து ஆணையர் துணைப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தெரிவித்துள்ளார். தமிழக போக்குவரத்து துறை ஆணையராக நடராஜன் ஐஏஎஸ் அவர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அவர்கள் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: “திரு எஸ். நடராஜன், ஐஏஎஸ் (2005), அரசு சிறப்புச் செயலாளர், போக்குவரத்துத் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு,போக்குவரத்து ஆணையர் துணைப் […]
தமிழகத்தில் 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து தமிழகத்தில் பல்வறு மாற்றங்கள் மற்றும் நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டு கொண்டிருக்கின்றது. தற்பொழுதும் தமிழகத்தில் உள்ள 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு தமிழக தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். அதன் படி நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த பிரவீன் நாயர் ஊரக வளர்ச்சி மற்றும் கிராமப்புற வளர்ச்சித்துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் […]
தமிழகத்தில் 25 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம். 25 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு. தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது 25 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், சேலம் மாநகராட்சி ஆணையராக கிறிஸ்துராஜ், திருப்பூர் மாநகராட்சி ஆணையராக கிராந்தி குமார், நெல்லை மாநகராட்சி ஆணையராக விஷ்ணு […]
தமிழகத்தில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் சண்முகம் பிறப்பித்துள்ளார். அதன்படி, டாஸ்மாக் மேலாண் இயக்குநராக மோகன் நியமனம், வெங்கடேஷ் பள்ளிக் கல்வித்துறை ஆணையராக நியமனம், குடிசை மாற்று வாரிய மேலாண் இயக்குநராக கிர்லோஷ் குமார் நியமனம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் செயல் அலுவலராக கிராந்தி குமார் நியமனம், தமிழ்நாடு தொழிற்சாலைகள் முதலீட்டு கழகத்தின் மேலாண் இயக்குநராக சிஜி தாமஸ் வைத்யன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 750 இடங்களுக்கான சிவில் சர்வீசஸ் முதல் நிலைத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. IAS, IPS, IFS என்ற பதவிகளில் காலியாக உள்ள 750 இடங்களுக்கானளை சிவில் சர்வீஸஸ் முதல்நிலைத் தேர்வை ( Prelims ) மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ( UPSC ) நடத்துகிறது. நாடு முழுவதும் 72 நகரங்களில், 2569 மையங்களில் நடைபெறும் இத்தேர்வை 10.58 லட்சம் பேர் […]
தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகள் 5 பேருக்கு ஐ.ஏ.எஸ் அந்தஸ்து வழங்கி தலைமை செயலாளர் அரசாணை வெளியிட்டுள்ளார். ஆண்டுதோறும் தொடர்ந்து ஐ.ஏ.எஸ் பணியிடங்களில் ஏற்படும் காலியிடங்களுக்கு ஏற்பவும், மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு ஏற்பவும், தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ் உயர் அந்தஸ்து வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், தற்போது தமிழக அரசின் பல்வேறு துறைகளில் அதிகாரிகளாக உள்ள கணேசன், சங்கீதா, கிருஸ்துராஜ், பிரிந்தாதேவி மற்றும் அருணா ஆகியோருக்கு ஐ.ஏ.எஸ் உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனை தமிழக அரசின் தலைமை […]
தமிழகத்தில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமைமை செயலர் சண்முகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக தலைமை செயலர் சண்முகம் தற்போது ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, கோவை மாநகராட்சி ஆணையர் ஸ்வரன் குமார் ஜடாவத்.IAS தற்போது வேளாண் துறை துணைச்செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது, கோவை மாநகராட்சி ஆணையராக குமரவேல் பாண்டியன்.IAS நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்க்கு முன்னர், சென்னை மாநகராட்சி துணை ஆணையராக இருந்துவந்துள்ளார். கிருஷ்ணகிரி […]
இந்திய குடிமை சிவில் சர்வீஸ் தேர்வில் i.a.s. பணிக்கான தேர்வில் வெற்றி பெற்ற கண்பார்வை இழந்த பூர்ண சுந்தரி எனும் பெண்ணிற்கு சீமான் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்திய குடிமைப்பணி தேர்வான சிவில் சர்வீஸ் தேர்வில் ஐஐஎஸ் கான இடத்தில் வெற்றிபெற்றுள்ள மதுரையை சேர்ந்த பார்வையற்ற மாணவி பூரண சுந்தரிக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து சீமான் பேசும் பொழுது, பார்வை மாற்று திறனாளியான இவர் தனது அயராத […]