சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் மரணம் குறித்து விசாரணை, சுதந்திரமாக நடத்த வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு. கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சுவாதி கொலை வழக்கில் கைதான நெல்லையைச்சேர்ந்த ராம்குமார் சிறையில் மர்மமான முறையில் இறந்தார். இதனையடுத்து ராம்குமாரின் தந்தை, தன் மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக்கூறி மனித உரிமை ஆணையத்தை நாடியிருந்தார். இந்த நிலையில் வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணையம், தமிழக அரசுக்கு ராம்குமார் வழக்கை […]
குழந்தையின் கையில் இருந்த பிளாங்ஸ்டரை வெட்டும் போது, தவறுதலாக குழந்தையின் கட்டை விரல் வெட்டப்பட்டுள்ளது. மனித உரிமை ஆணையம், இது தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனர் 2 வாரங்களில் விளக்கமளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கணேசன்-பிரியதர்ஷினி என்ற தம்பதியினருக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தாய்ப்பால் கொடுக்காமல், ஊசி மூலமாக குளுக்கோஸ் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக கையில் குழந்தைக்கு பிளாஸ்டர் போடப்பட்டிருந்த நிலையில், குழந்தையின் உடல்நிலை சரியானவுடன் […]
கொரோனா பரவல் எதிரொலி காரணமாக சவூதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சப்ளை வேலைக்கு ரோபோக்கள் வைக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் கொரோனா பரவலானது கடந்த ஆண்டை விட,தற்போது மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்,சவூதி அரேபியாவின் ஜாசன் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலில் மனிதர்களுக்குப் பதிலாக சப்ளை வேலைக்கு ரோபோக்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த ரோபோக்கள்,வாடிக்கையாளர்களை மிகச் சிறப்பாக கவனித்துக் கொள்கின்றன.வாடிக்கையாளர்கள் என்ன ஆர்டர் செய்தார்களோ அவற்றை தாமதிக்காமல் உடனே கொண்டு […]
மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் தேர்வுக்கான கூட்டம், தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. தலைமைச் செயலகத்தில் நடந்துவரும் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி சபாநாயகர் தனபால் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தை புறக்கணிப்பதாக முதலமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மனித உரிமை ஆணைய தலைவர் பதவி ஓராண்டாக காலியாக உள்ளது. அடுக்கடுக்காக மனித உரிமை மீறல்கள் நடந்தாலும் தலைவர் பதவி நிரப்பப்படாமல் உள்ளது. ஆட்சி முடியும் தருவாயில் அவசரமாக நடக்கும் தேர்வு குழு […]
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் விநியோக தட்டுப்பாடு காரணமாக உயிரிழந்த விவகாரத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 3 பேர் கடந்த 22ஆம் தேதி உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள், 70 வயதுக்கு மேற்பட்ட 2 ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆவார். இவர்கள் உயிரிழப்புக்கு காரணம் குறிப்பிட்ட கொரோனா வார்டில் ஆக்சிஜன் […]
நோயாளியை கீழே தள்ளிவிட்ட விவகாரத்தில், மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குபதிவு. கிருஷ்ணகிரியில் உள்ள அரசு மருத்துவமனையில், மருத்துவமனை ஊழியர் பாஸ்கர் என்பவர், நோயாளி ஒருவரை சக்கர நாற்காலியில் இருந்து தள்ளிவிட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சுகாதாரத்துறை அமைச்சரின் உத்தரவின் படி ஊழியர் பாஸ்கர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து, ஆட்சியர் அவரை பணி நீக்கம் செய்தார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, மனித உரிமைகள் ஆணையம், தாமாக முன்வந்து […]
சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜும், பென்னிக்ஸும் சிறையில் உயிரிழந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், எஸ்பி குமார் தலைமையில் நெல்லை சென்ற மனித உரிமை ஆணையம் ஜெயராஜ், பென்னிக்ஸ் உடல்களை உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்கள் செல்வமுருகன், சுதன், பிரசன்னா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ்இருவரின் உடலில் இருந்த காயங்கள் குறித்து கேட்டதாக கூறப்படுகிறது. விசாரணை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிஎஸ்பி […]
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் சிறைக்காவலர்கள் வேல்முருகன், செந்தூர் ராஜா, மாரிமுத்து ஆகியோரிடம் மனித உரிமை ஆணைய அதிகாரிகள் விசாரணை. கோவில்பட்டி கிளைசிறையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு, சிபிசிஐடி காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு, சிபிஐக்கு மாற்ற மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மனித உரிமை ஆணையம், தாமாக முன்வந்து தந்தை-மகன் உயிரிழந்த […]
கைதிகள் வழுக்கி விழுவது குறித்து பதிலளிக்க சென்னை காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ். சென்னை மாநகர காவல்நிலையங்களின் குளியல் அறைகளில் விசாரணை கைதிகள் வழுக்கி விழுவது குறித்து பதிலளிக்க சென்னை காவல் ஆணையருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னையில் உள்ள காவல் நிலையங்களில் குளியலறைகளில் குற்றவாளிகள் வழுக்கி விழுந்தது தொடர்பாக எத்தனை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது என்றும் காவல்துறையினர் வழுக்கி விழுந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளதா என்ற கேள்விகள் எழுப்பட்டிருக்கிறது. மேலும் […]