ஆணவக்கொலைகள் தடுக்க தமிழக அரசு இதுவரை ஒரு துண்டு பிரசுரம் கூட அடித்து மக்களுக்கு தராதது வேதனையாக இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கடந்த 9 ம் தேதி உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து ஆணவக்கொலைகள் எதிராக வழக்குபதிவு செய்திருந்தது. நேற்று அந்த வழக்கின் விசாரணை நடந்து வந்த சூழலில் ஆஜரான நீதிபதி மணிகுமார் தமிழக அரசு இதுவரை ஒரு துண்டுப்பிரசுரம் கூட அடித்து ஆணவக்கொலைகளுக்கு எதிராக மக்களிடம் பேசாதது வேதனை அளிப்பதாக தெரிவித்து இருந்தனர். […]