சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு எதிர்த்து வருகிறது. இந்த சூழலில், தமிழ் திரைப்படங்களை இந்தியில் ஏன் டப்பிங் செய்ய வேண்டும்? என ஹிந்தி மொழிக்கு ஆதரவாக ஆந்திரா துணை முதல்வர் பவான் கல்யாண் பேசியது பேசுபொருளாக மாறியுள்ளது. பவான் கல்யாண், நேற்று ஜனசேனா கட்சியின் நிறுவன நாள் நிகழ்ச்சியில் பேசும் போது, “தனது கட்சி விழாவில் தமிழ், கன்னடம், மராத்தி, ஹிந்தி […]
சென்னை : தமிழகத்தில் மும்மொழி கொள்கை விவரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த விவகாரம் இன்னும் பெரிதாக வெடிக்க காரணமாக தர்மேந்திர பிரதான் பேசியது அமைந்தது. முதலில் பி என் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு கடைசி நேரத்தில் யூ- டர்ன் போட்டது. முதலில் சரி என்று கூறிவிட்டு இப்போது அதனை வைத்து அரசியல் செய்து தமிழக மாணவர்களின் வாழ்க்கையை நாசமக்கிறார்கள்” என பேசியிருந்தார். […]
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 அன்று சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. யுனெஸ்கோ (UNESCO) 1999ல் இந்த நாளை மொழிவழி உரிமைகளுக்காக உயிரிழந்தவர்களை நினைவுகூர அறிவித்த நிலையில், அப்போதிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தாய்மொழி தினம் என்பதால் சமூக வலைத்தளங்களில் அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் ” எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி! இலக்கியங்களில் […]
டெல்லி : கடந்த சனிக்கிழைமை வாரணாசியில் காசி தமிழ் சங்கமத்தின் மூன்றாவது பகுதி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்,“ புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக கல்வித்துறைக்கு நிதி தர இயலாது. தமிழ்நாடு அரசு, அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டால் நிதி விடுவிக்கப்படும்” என்று கூறியிருந்தார். இந்நிலையில், மும்மொழிக் கொள்கையை பிறமாநிலங்கள் ஏற்கும் போது தமிழ்நாடு மட்டும் ஏற்க மறுப்பது ஏன்? என அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது பெரிய […]
டெல்லி : இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமானLICயின் இணையதள முகப்பு பக்கமானது இன்று காலை முதல் இந்தி மொழியில் காணப்பட்டது. மேலும், மொழியை தேர்வு செய்யும் பட்டனில் கூட இந்தி மொழி இருந்ததால், இந்தி தெரியாத பயணர்கள் மிகவும் குழப்பம் அடைந்தனர். பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தில் இந்தி திணிக்கப்பட்டது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். […]
டெல்லி : இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி (LIC) நிறுவனத்தின் இணையதள பக்க முகப்பானது ஆங்கிலத்தில் தான் செயல்பட்டு வந்தது. மொழி தேர்வில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகள் இருக்கும். அதில் தேவை இருப்பின் இந்தி மொழி தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால், இன்று காலை முதல் LIC இணையதளம் முழுக்க இந்தி மொழியில் மட்டுமே இயங்கி வந்தது. மேலும், மொழி தேர்வு செய்யும் பட்டன் தேர்வும் இந்தி மொழியில் இருந்ததால், மொழி மாற்றம் செய்வதும் […]
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சி நடைபெறுவது இந்தி திணிப்பு எனப் பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. அரசியல் காட்சிகளின் தலைவர்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். குறிப்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் இந்தி மாத கொண்டாட்டம் வேண்டாம் எனவும் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதும் பிற […]
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று நடைபெறும் எனவும் , இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து இப்போது வரை இது இந்தி திணிப்பு எனப் பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. குறிப்பாக, இதனை பார்த்த தமிழ் ஆர்வலர்கள் கடும் கோபத்துடன் இந்தி பேசாத மாநிலங்களில் என்ன காரணத்துக்காக இந்தி […]
திருச்சி: மாநில அரசின் கல்வி கொள்கையில் பல்வேறு பகுதிகள் மத்திய கல்வி கொள்கையில் உள்ளது போல இருக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். தேசிய கல்வி கொள்கை, தமிழக அரசின் புதிய மாநில கல்வி கொள்கை, நீட் நுழைவு தேர்வு என்று பல்வேறு விவகாரங்கள் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு கருத்துக்களையும், மாநில அரசின் மீதான தனது விமர்சனங்களையும் முன்வைத்து பேசினார். அவர் கூறுகையில், திருச்சி […]
ஹிந்தியில் கேள்வி கேட்ட தொகுப்பாளரிடம், இயக்குநர் அட்லீ தமிழில் பதிலளித்த சம்பவம் சிரிப்பை வரவழைக்கிறது. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் சிஷ்யனாக இருந்து கொண்டு, ‘ராஜா ராணி’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, தற்போது ஷாருக்கானை இயக்கி பாலிவுட்டிலும் தனது முத்திரையை பதித்துவிட்டார். அவர் கடைசியாகஇயக்கிய ‘ஜவான்’ திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆனது என்றே சொல்லலாம். பாக்ஸ் ஆபிஸில் ரூ.1,100 கோடி வசூல் செய்திருந்தது. இதனையடுத்து, பிரபல […]
இந்தி தெரிந்தால் பெண்கள் ஆபத்திலிருந்து தப்பிக்கலாம் என்று பாஜக நிர்வாகியும், கார் & பைக் ரேஸ் வீராங்கனையுமான அலிஷா அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார். இந்தியை கட்டாயமாக்குவது குறித்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பொதுமக்களும்,சமூக இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் கருத்து தெரிவித்துவரும் நிலையில்,இந்தி தெரிந்துக்கொள்வதால் ஏற்படும் நன்மை குறித்து வித்தியாசமான கருத்து ஒன்றை பாஜக நிர்வாகி அதிஷா அப்துல்லா தெரிவித்துள்ளார். ஹைதராபாத், டெல்லி போன்ற நகரங்களில் பெண்கள் இரவில் பயணிக்கும் போது,யாராவது வந்து தொல்லை செய்தால் இந்தி […]
ஆன்மீகத்திற்கு எதிரானவர் கலைஞர் என சிலர் உருவாக்கபடுத்த பார்க்கின்றனர். திராவிடம் என்பது ஆன்மீகத்தையும், தமிழையும் பாதுகாக்கும் இடம். – அமைச்சர் எ.வ.வேலு. சேலத்தில் இந்தி எதிர்ப்பு விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்றார். அப்போது பேசிய எ.வ.வேலு, ‘ மத்திய அரசு பல்வேறு வகைகளில் இந்தியை திணிக்க பார்க்கிறது. அதன் ஒரு பகுதி தான் மத்திய அரசு, ஐஐடி பல்கலைக்கழகங்களில் இந்தி மொழியை பயிற்று மொழியாக மாற்ற முயற்சிப்பது. ‘ என குறிப்பிட்டார். மேலும், […]
மத்திய அரசை பொருத்தவரையில் இந்திக்கு தாய்ப்பால், மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பால் என்ற நிலையில் தான் செயல்பட்டு வருகிறது என அமைச்சர் ஏ.வ.வேலு பேச்சு. திமுக சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அமைச்சர் எ.வ.வேலு சிறப்புரையாற்றினார். இந்தி திணிப்பு தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. நாமும் தொடர்ந்து இந்தியை எதிர்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். மத்திய அரசை பொருத்தவரையில் இந்திக்கு தாய்ப்பால், மற்ற மொழிகளுக்கு […]
நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் இல்லை. ஆனால் சொந்த மொழிக்கு உயிரானவர்கள் என சீமான் பேச்சு. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேற்று சென்னை எழும்பூரில் இந்தி திணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார். இந்த ஆர்ப்பாட்டமானது கொட்டும் மழையில் நடைபெற்றது. அந்த மழையிலும் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய அவர் நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் இல்லை. ஆனால் சொந்த மொழிக்கு உயிரானவர்கள். இந்தி மொழியை எதிர்த்து இந்த போராட்டம் […]
நாளை நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் இந்தி எதிர்ப்பு பேரணி நடைபெறவுள்ளது. இதுகுறித்து சீமான் அவர்கள் வெளியிட்டுள்ள என் உயிரோடு கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! நாளை நவம்பர் 01 – ‘தமிழ்நாடு நாள் அன்று, சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டுத்திடலில் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இணைந்து முன்னெடுக்கும் மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்பதற்காக வருகை தரவிருக்கும் உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்க பெரும் ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் காத்திருக்கின்றேன். […]
தமிழை வளர்க்க எவ்வித முயற்சியும் எடுக்காமல் ஹிந்தியை எதிர்ப்பதால் என்ன பயன்? என அண்ணாமலை கேள்வி. திமுக சார்பில் நவம்பர் 4 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் இந்தி திணிப்பு எதிர்ப்பு பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘நேற்று பாஜக சார்பில் திமுகவின் போலி ஹிந்தி எதிர்ப்பு நாடகத்தை தோலுரிக்கும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழை வளர்க்க […]
மத்திய அரசின் இந்தி திணிப்பு என்று கூறுவது வாக்கு வங்கியின் அரசியலுக்காகவே என ஜி.கே.வாசன் ட்வீட். இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்று அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கு அரசியல் பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நேற்று மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் […]
இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது என மநீம ட்வீட். மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. இதுகுறித்து மநீம தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. அலுவல் மொழி […]
இந்தி மேலாதிக்கம் நம்மை ஆள்வதை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என முதல்வர் ட்வீட். மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். அமித்ஷா குழுவின் பரிந்துரைகள், இந்தி பேசாத மாநில மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும். இந்திமொழி திணிப்பு தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கிறது. தமிழினத்தை தமிழரை பண்பாட்டை காக்கும் போராட்டமாக தொடர்ந்து கொண்டே இருக்கிறோம். அனைத்து இந்திய தேர்வுகளையும் இந்தி மயமாக்க துடிக்கிறார்கள். இந்தி தெரியாதவர்கள் மத்திய அரசின் […]
நாங்கள் இந்தியை திணிக்கவில்லை என தமிழிசை பேட்டி. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு நிகழ்வில் தமிழிசை கலந்து சௌந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசியவர் நாங்கள் இந்தியை திணிக்கவில்லை பாராளுமன்றத்தை பொறுத்த அளவில் ஒரு சிலர் மட்டுமே மட்டுமே செய்துள்ளனர். உங்களுக்கு எவ்வளவு தாய் மொழி பற்று இருக்கிறதோ அதே அளவு தாய் மொழி பற்று எங்களுக்கும் உள்ளது. எங்களுக்கும் உள்ளது. இதை நியாயப்படுத்தி பேசினால், உடனே என்னை இந்தி இசை என்று சொல்வதை ஒத்துக்கொள்ள மாட்டேன் […]