லெபனான் : தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் உயிரிழ்ந்தனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர். தெற்கு லெபனானில் உள்ள நகோராவை இணைக்கும் சாலையில் மோட்டார் சைக்கிள் மீது, இஸ்ரேலிய ஆளில்லா விமானம் மூன்று வான்வெளி ஏவுகணைகளை ஏவியதாக லெபனான் இராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர். கடந்த நான்கு நாட்களாக இஸ்ரேலிய விமானப்படை ஒரு நாளைக்கு 15 தாக்குதல்களுக்கு மேல் தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாக குற்படுகிறது.
Hezbollah : லெபனான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லா அமைப்பு வடக்கு இஸ்ரேல் மீது 100க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு முதல் தாக்குதல் சம்பவம் நடந்து வருகிறது. இருதரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. Read More – மக்களவை தேர்தல்..! 2ஆம் கட்ட […]
லெபனான் போராளிக் குழுவான ஹிஸ்புல்லா, வடக்கு இஸ்ரேலில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுத் தளத்தைத் தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் நேற்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இஸ்ரேலிய இராணுவம் இந்த தாக்குதலை ஹிஸ்புல்லா சுட்டி காட்டி “மற்றொரு போர்” என எச்சரித்துள்ளது. சமீபத்தில், பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹமாஸின் மூத்த தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே பதற்றங்கள் அதிகமாகியுள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா கடந்த சனிக்கிழமையன்று மெரோன் மலையில் உள்ள தளத்தை தாக்கியதாக […]
ஹமாஸை ஆதரிக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மணிப்பூர் ராணுவ வீரர் காயமடைந்துள்ளார். கடந்த 7ம் தேதி இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான குண்டுகளை வீசி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலில் ஈடுபட்டனர். அன்றில் இருந்து இன்று வரை இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே யுத்தம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் – பாலஸ்தீன போர் தொடர்ந்து வருகிறது. இந்த போரில் இருநாடுகளிலும் 5000-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது, இஸ்ரேல்-ஹமாஸ் […]