கேரளா கடற்கரையில் 1,200 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்..6 பேர் கைது!

1,200 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை ஏற்றிச் சென்ற படகை கேரளக் கடற்கரையில் வளைத்து பிடித்த போலீஸ். இந்திய கடற்படை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) ஒருங்கிணைந்த நடவடிக்கையில், கேரளாவின் கொச்சி கடற்கரையில் சுமார் ரூ.1,200 கோடி மதிப்புள்ள 200 கிலோ ஹெராயின் ஏற்றிச் சென்ற படகை தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, NCB துணை இயக்குநர் ஜெனரல் SK சிங் கூறுகையில், படகு பறிமுதல் செய்யப்பட்டு, 6 ஈரானிய பணியாளர்கள் NDPS … Read more

சர்வதேச போதைப்பொருள் கும்பலை முறியடித்து, ரூ.60 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

டெல்லி போலீசார், சர்வதேச போதைப்பொருள் கும்பலை முறியடித்து, ₹60 கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் 2 பேரை கைது செய்தனர். டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு வியாழன்(செப் 23) அன்று ஒரு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைக் கண்டுபிடித்து, குழுவின் இரண்டு முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர். பீகாரின் முசாபர்பூரில் இருந்து கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அபிஷேக் ராஜா மற்றும் நிஜாமுதீன் என தெரியவந்துள்ளது. மேலும் குற்றவாளிகளிடமிருந்து 60 கோடி ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ ஹெராயின் மற்றும் … Read more

குஜராத் துறைமுகத்தில் 350 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 350 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டன. முந்த்ரா துறைமுகத்தில் குஜராத்தின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவை(ஏடிஎஸ்) சேர்ந்த அதிகாரிகள்  மற்றும் வருவாய் புலனாய்வு துறை (டிஆர்ஐ) நடத்திய கூட்டு சோதனையின்  போது ₹350 கோடி மதிப்பிலான 70 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது. அதிகாரிகளை ஏமாற்றுவதற்காக துணி ரோல்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த கடத்தல், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) இருந்து அனுப்பப்பட்டு பஞ்சாபிற்கு கொண்டு செல்லப்பட்டது என்று குஜராத் … Read more

குஜராத் : 730 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் …!

குஜராத் மாநிலத்தில் 730 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  குஜராத் மாநிலத்தில் 120 கிலோ எடையுள்ள ஹெராயின் எனும் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக குஜராத் போலீஸ் துணை சூப்பிரண்டு அதிகாரி கே.கே.படேல் கூறுகையில், 120 கிலோ எடையுள்ள ஹெராயின் எனும் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பான வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதே போல நேற்று இரண்டு கிலோ எடையுள்ள ஹெராயின்  கைப்பற்றப்பட்டது. … Read more

பஞ்சாப் : இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் 8 ஹெராயின் பாக்கெட் பறிமுதல்!

பஞ்சாபில் இந்தியா – பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் 8 ஹெராயின் பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பஞ்சாபில் உள்ள ஃபெரோஸ்பூர் செக்டார் பகுதியில் உள்ள நெல் வயலில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை பகுதியில் சந்தேகத்துக்கு இடமான எட்டு பாக்கெட்டுகளை எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த பாக்கெட்டுகளில் போதை பொருள் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் குச்சி வடிவில் இருந்ததாகவும், மூன்று மஞ்சள் நிறத்திலும், ஐந்து வெள்ளி நிறத்திலும் இருந்ததாகவும் எல்லை … Read more

மும்பை துறைமுகம் : 125 கோடி மதிப்புள்ள 25 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!

மும்பை துறைமுகத்தில் 125 கோடி மதிப்புள்ள 25 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில்  போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கப்பலில் இருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட சிலரையும் போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால், தொடர்ந்து அம்மாநில அதிகாரிகள் போதை பொருள் தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் … Read more

குஜராத்தில் கைப்பற்றப்பட்ட ரூ.9,000 கோடி மதிப்புள்ள ஹெராயின்..!

குஜராத்தில் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து ரூ.9,000 கோடி மதிப்புள்ள ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளது.  வருமானவரி புலனாய்வு இயக்குனரகம் குஜராத்தின் கட்ச் நகரின் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து ரூ.9,000 கோடி மதிப்பிலான ஹெராயின் கொண்ட கொள்கலன்களை கைப்பற்றியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும், இவை ஆப்கானிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்காக சரக்குகளை நிறுத்திய அதிகாரிகள், சோதனையின் போது​டால்கம் பவுடர் என்ற போர்வையில் கோடிக்கணக்கான மதிப்புள்ள மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதை கண்டுபிடித்துள்ளனர். மேலும், இவை ஆந்திராவின் விஜயவாடாவில் அமைந்துள்ள … Read more

பரபரப்பு: தூத்துக்குடியில் ஹெராயின், துப்பாக்கிகள் பறிமுதல்.!

தூத்துக்குடியில் கடல்பகுதியில் இந்திய எல்லைக்கு அருகே படகில் இருந்து ஹெராயின் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்திய எல்லைக்குள் சுற்றித்திரிந்த படகில் சோதனை செய்தபோது 30 டன் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் படகில் இருந்து 10 கைத் துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்து கடலோர காவல்படை விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் இருந்து இலங்கை வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. படகில் இருந்த இலங்கையை சேர்ந்த 6 பேரை பிடித்து இந்திய … Read more

ஹெராயின் வைத்திருந்த வழக்கு.. இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் கைது!

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுசங்க, ஹெராயின் வைத்திருந்தாக கைது செய்யப்பட்டார். இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுசங்க. 25 வயதாகும் இவர், 2018 ஆம் ஆண்டு இலங்கை சர்வதேச கிரிக்கெட் அணியில் இணைந்தார். மேலும், தனது அறிமுக போட்டியிலே அவர் ஹட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். இந்நிலையில், ஷெஹான் மதுசங்கா லாக்டவுன் நேரத்தில் கார் ஓட்டிவந்தார். அவரை பலானா என்ற இடத்தில் இலங்கை காவல்துறையினர் அவரை மடக்கினர். அப்பொழுது அவரை … Read more

ஹெராயின் போதைப்பொருள் விற்ற 3 பேர் கைது.!

பள்ளிக்கரணை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது  கல்லூரி மாணவனிடம் இருந்து ஹெராயினை போலீசார் கைப்பற்றினர்.  பின்னர் வியாசர்பாடி எம்.கே.பி. நகரில் ஹெராயின் விற்ற 3 பேரை போலீசார்  கைது செய்தனர்.  சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஹெராயின், போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு  தகவல்கள் கிடைத்தது. இந்நிலையில்  தென் சென்னை போலீஸ் இணை கமிஷனர் மகேஸ்வரி தலைமையிலான ஒரு தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது போலீசார் … Read more