பல கோடிகளை மோசடி செய்த கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள் கைது. கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியில் தீட்சிதர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ் மற்றும் எம்.ஆர்.ஸ்வாமிநாதன் சகோதரர்கள். இவர்கள் இருவரும் நிதிநிறுவனம் நடத்தி வந்தனர். தங்களிடம் முதலீடு செய்தால் அதனை இரட்டிப்பாக திரும்பி தருவோம் என்று கூறி மக்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி பலரிடம் நிதி வசூல் செய்துள்ளனர். இவரிடம் செல்வந்தர்கள், வர்த்தகர்கள் மற்றும் பலர் பல கோடிகளில் முதலீடு செய்துள்ளனர். இந்நிலையில் கும்பகோணம் பகுதியை சேர்ந்த தம்பதியான […]