மாற்றுதிறனாளிகள் மற்றும் அவர்களது துணையாளர் ஒருவர் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்…! அரசாணை வெளியீடு…!

மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவருடன் செல்லும் துணையாளர் ஒருவரும் அரசு பேருந்தில் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்யலாம். மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக பதவியேற்றதிலிருந்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். இந்த நிலையில்,  மாற்றுத்திறனாளிகள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவருடன் செல்லும் துணையாளர் ஒருவரும் அரசு பேருந்தில் கட்டணமின்றி … Read more

ஹத்ராஸ் வடு மறைவதற்குள் குஜராத்தில் மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

ஹத்ராஸ் வடு மறைவதற்குள் குஜராத்தில் மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம். குஜராத்தின் பனஸ்காந்தா அடுத்த டீசாவில் என்ற பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுமியான 12 வயது சிறுமி இரண்டு நாட்களுக்கு முன்பதாக காணமல் போனார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், அச்சிறுமி அப்பகுதியிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ’12 வயது சிறுமி முதலில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டார்.’ தெரிவித்துள்ளனர். தற்போது, ​​இந்த வழக்கில் ஒரு குற்றவாளியை போலீசார் கைது … Read more

இடம்மாறி வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிற்கு சென்றே நிதி வழங்க நடவடிக்கை!

இடம்மாறி வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிற்கு சென்றே நிதி வழங்க நடவடிக்கை. தமிழகத்தில்  கொரோனா வைரஸ் தீவிரமாக  பரவுவதை  கட்டுப்படுத்த கடந்த 2 மாத காலமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அடையாள அட்டை வைத்திருக்கும் 13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று அவர்களுக்கான ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி … Read more

மாற்றுத்திறனாளியின் சடலத்தை தூக்கி சென்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்!

மாற்றுத்திறனாளியின் சடலத்தை தூக்கி சென்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர். இன்று உலகம் முழுவதும், கொரோனா அச்சத்தால் நிறைந்துள்ள நிலையில், எந்த மனிதர்களோடும் மக்கள் எளிதில் பழகுவதற்கும், அவர்களுக்கும் உதவுவதற்கும் தயக்கம் காட்டி தான் வருகின்றனர்.  இந்நிலையில், வந்தவாசி அருகே, கரும்பு தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில், மாற்றுத்திறனாளி ஒருவர் சிக்கிக் கொண்ட நிலையில், அவர் தன்னை காப்பாற்றி கொள்ள இயலாத நிலையில் உயிரிழந்துள்ளார்.  இந்நிலையில், அங்கிருந்த மக்கள் கொரோனா அச்சத்தின் காரணமாக, அவரை தூக்குவதற்கு மறுத்துள்ளனர். இதனையடுத்து, … Read more

மாற்றுத்திறனாளிகளின் அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்பவருக்கு பாஸ் கொடுங்கள்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை தடுப்பதற்கு இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் மக்கள் கூடும் வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.  இதனால், குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கான கடைகள் திறக்கப்படுகிறது.  இந்நிலையில், தாசில்தார்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள், மாற்றுத்திறனாளிகளுக்காக அத்தயாவசிய தேவைகளை பெற வெளியே செல்வோருக்கு பாஸ் கொடுக்க அறிவுறுத்துங்கள் என மாற்றுத்திறனாளிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. 

முன்னாள் ராணுவ வீரர்களின் பென்சனில் கைவைத்த ஸ்டேட் வங்கி.!

உடல் ஊனமுற்ற ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு, வருமான வரி பிடித்தம் கூடாது என ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது, உச்சநீதிமன்றம். ஆனால் அதை மீறுகிறது ஸ்டேட் வங்கி என புகார் எழுந்துள்ளது. இதனிடையே வருமான வரி பிடித்தம் செய்யக்கூடாது என கடந்த 2019ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உச்சநீதிமன்ற உத்தரவை ராணுவ தலைமையகம், நிதித்துறைக்கு ஏற்கனவே அனுப்பிவைத்தது. இருந்தபோதிலும் அதிகார எல்லையை மீறுகிறதா, ஸ்டேட் வங்கி? என்றும் குறைந்த வைப்புத்தொகை வைத்ததாக பல கோடி ரூபாயை பிடித்த ஸ்டேட் … Read more

ஏழ்மையும், உடல் குறையும் உடைத்தெறிந்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தமிழ்நாட்டு ‘தங்க’ மங்கை.!

சேலம் மாவட்டத்தில் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி சிறு வயதில் இருந்து சுபாஷினிக்கு ஜூடோ விளையாட்டில் ஆர்வம் அதிகம். பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கான காமன்வெல்த் ஜூடோ போட்டியில் இந்தியாவுக்காக தங்கம் வென்றார் சுபாஷினி. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சின்னதாண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி – அம்மாசி தம்பதியினரின் மகள் சுபாஷினி. பிறவிலேயே பார்வை இல்லாததால் இவருக்கு உடன் பிறந்தவர்கள் இருவர். அவர்களுக்கும் பார்வை இல்லாததால் மாற்றுத் திறனாளிகளுக்கான தங்கும் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். தற்போது … Read more

கடல் நீச்சலில் சாதனை படைத்தார் மாற்றுத்திறனாளி மாணவர் தடை அதை உடை சபாஷ் !!

கடலூரில் மாற்றுத்திறன் படைத்த இளைஞர் ஒருவர் கடலில் 5 கி.மீ. வரை நீந்தி சாதனை படைத்துள்ளார். தேசிய மாணவர் படையை சேர்ந்த 40 மாணவ, மாணவிகள் புதுவையில் இருந்து பெருங்கடல் சாகச பாய்மர படகு பயணத்தை தொடங்கினர். 450 கி.மீ. தொலைவுக்கான இந்தக் பயணத்தை ஜூலை 12ஆம் தேதி ஆரம்பித்தனர். இந்தப் பயணம் இன்று கடலூர் முதுநகரில் நிறைவு பெற்றது. இந்நிலையில், சென்னை வடபழனியைச் சேர்ந்த ஸ்ரீ ராம் நிவாஸ் என்ற மாணவர் இன்று கடலூர் முதுநகரில் இருந்து கடலூர் வெள்ளிக் … Read more