குஜராத் வைர வியாபார நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக கார்கள் வழங்கும் விழாவில், பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்து கொள்கிறார். குஜராத் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த விஜய் ரூபானி முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். அங்குள்ள சூரத் நகரில் வைர வியாபாரம் செய்து வருபவர் சாவ்ஜி டோலாகியா. இவரது வைர நிறுவனத்தின் ஆண்டு வருமானம் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாயாகும்.தனது நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் ஊழியர்களுக்கு இவர் ஒவ்வொரு ஆண்டும் […]
பள்ளி உரிமையாளர் ஒருவருக்கு வந்த பார்சலில் வெடிகுண்டு இருந்தது. இதற்கு முன்னாள் மாணவர் ஒருவரின் சதிச்செயலே காரணம் என தகவல் வெளியாகி உள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் உப்லட்டா நகரில் ஸ்ரீகிருஷ்ணா பள்ளி என்ற தனியார் பள்ளி உள்ளது. அந்த பள்ளியின் உரிமையாளர் வித்தல் டொபாரியாவுக்கு கூரியரில் ஒரு பார்சல் வந்தது. அது பரிசுப்பொருள் போன்று அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அனுப்பியவர் முகவரியில், முன்னாள் மாணவர் என்றும், பள்ளி உரிமையாளருக்கு நன்றி தெரிவிக்கும்வகையில் அனுப்பி இருப்பதாகவும் எழுதப்பட்டு […]
குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் 5 குழந்தைகளுடன் பெண் ஒருவர் கிணற்றில் குதித்த சம்பவம் நடந்து இருக்கிறது. பாவ்நகர் மாவட்டத்தில், பாஞ்ச் பிப்லா கிராமத்தை சேர்ந்தவர் கீதா பாலியா. இந்தப் பெண்ணுக்கு 5 குழந்தைகள் இருந்தன. அவர் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து வந்திருக்கிறார்.இந்த நிலையில் இவர் நேற்று அங்குள்ள ஒரு கிணற்றில் தன் 5 குழந்தைகளையும் வீசி விட்டு தானும் குதித்து விட்டார். இதைக் கண்ட கிராமவாசிகள் சிலர், அவர்களைக் காப்பாற்றும் நோக்கத்தில் உடனடியாக கிணற்றில் […]
குஜராத்தில் தங்கி வேலை செய்யும் வெளிமாநில தொழிலாளர்கள் இரவோடு இரவாக கூட்டம் கூட்டமாக அம்மாநிலத்தை விட்டு வெளியேறி வருகின்றன. கடந்த சில மாதங்களாக குஜராத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. பொது இடங்களில் வைத்து இவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் வீடியோக்களாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி, குஜராத் மாநிலம் சபர்கண்டா மாவட்டத்தில் 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். […]
குஜராத் எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் ரூ. 45 ஆயிரம் உயர்த்தப்பட்டதற்கு சட்டசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. குஜராத் எம்.எல்.ஏ.க்கள் தற்போது மாதாந்திர ஊதியமாக 70 ஆயிரம் ரூபாய் பெற்று வருகின்றனர். இவர்களுக்கான சம்பளத்தை உயர்த்த வேண்டும் என கடந்த ஆண்டு மசோதா கொண்டு வரப்பட்டது. அந்த மசோதா நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில், குஜராத் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை உயர்த்தும் சட்ட மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் குஜராத் சட்டசபை எம்.எல்.ஏ.க்களின் மாதாந்திர வருமானம் ரூ..45,589 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. […]
25 மாநிலங்களில் 50 பெண்களை ஏமாற்றி பண மோசடி செய்த கல்யாண மன்னனை போலீசார் கைது செய்தனர். குஜராத் மாநிலம் சந்த்கேடா நகரை சேர்ந்தவர் சித்தார்த் மெஹ்ரா (வயது 42) இவரது தந்தை ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இந்த நிலையில் சித்தார்த் என்பவர் மேட்ரிமோனி மூலம் ரூ.50,000 பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றி விட்டதாக இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன்படி, சித்தார்த் […]
ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று எஞ்சின் இல்லாமல் பயணிகளுடன் 10 கிலோ மீட்டர் தூரம் ஓடிய சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து ஒடிசாவின் பூரி நகருக்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. திட்லாகர் ((Titlagar)) ரயில் நிலையத்தில் மேலும் சில பெட்டிகளை இணைப்பதற்காக ரயில் எஞ்சின் கழற்றப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக ரயில் பின்னோக்கிச் சென்றது. இவ்வாறு எஞ்சின் இல்லாமல் பெட்டிகள் மட்டும் 10 கிலோ மீட்டர் தூரம் சென்றன. […]
குஜராத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக அரசு 99 இடங்கள் மட்டுமே கைப்பற்றினாலும், ஆட்சியை தக்கவைத்துள்ளது. தற்போது ஆட்சியமைக்க முதல்வரை தேர்ந்தெடுத்து விட்டது. தற்போதைய குஜராத் முதல்வர் விஜய் ரூபானியே மீண்டும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல் நிதின் பட்டேல் துணை முதல்வராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 99 எம்எல்ஏகளுடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பின்னர் இந்த அறிவிப்பை அருண் ஜெட்லி வெளியிட்டார்.
குஜராத் சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றுள்ள தலித் இயக்க தலைவர் ஜிக்னேஷ் மேவானி “இந்திய பிரதமர் நரேந்திர மோடி இனிமேலும் நாட்டுமக்களை தனது பொய், புரட்டு பேச்சுக்களால் ஏமாற்றுவதை நிறுத்திக் கொண்டு இமயமலைக்கு சென்று தவ வாழ்க்கை வாழவேண்டும்” என்று கடுமையாக சாடியுள்ளார். இதனால் சங்கி ஆதரவாளர்கள் கடுமையாக கொதித்து எழுந்து ஜிக்னேஷ் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரவேண்டும் என்று கூக்குரல் எழுப்பி வருகின்றனர். ஆனால் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குறித்து […]
குஜராத்தில் பிஜேபி தனது ஆட்சியை தக்கவைத்து கொண்டது.இதனையடுத்து குஜராத்தின் நவ்ரான்பூராவில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.இதனைத் தொடர்ந்து பதவியேற்பு விழா நடைபெறும் விளையாட்டு மைதானத்தில் குஜராத் டிஜிபி பிரமோத்ஜா ஆய்வு நடத்தியுள்ளனர்.
குஜராத் தேர்தலில் ஆளும் பாஜக 99 இடங்களை கைபற்றியுள்ளது. ஆளும் கட்சியை எதிர்த்து சுயேட்சையாக வட்காம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியடைந்த ஜிக்னேஷ் மேவானி தனது வெற்றியை குறித்து பேட்டி ஒன்றில், ‘நாடு மாற்றத்தை விரும்புகிறது, அதற்கு தயாராகிவிட்டது. அதனால்தான் 150 இடங்களை கைப்பற்றும் என உறுதியாக கூறிய பாஜகவால் 99 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது’ என கூறினார். மேலும் படிக்க dinasuvadu.com
பாகிஸ்தானோடு சேர்ந்து அகமது பட்டேல் என்ற இஸ்லாமியரை முதல்வராக்க சதி! பாகிஸ்தான் தூதர்,பாகிஸ்தான் அமைச்சர், மணிசங்கர ஐயர்,மன்மோகன்சிங்,முன்னாள் குடியரசு துனை தலைவர் அனைவரும்ஒன்று சேர்ந்து என்னை கொல்ல சதி! பட்டேல் ஜாதிய இளைநரை நிர்வாண படத்தில் இனைத்து நீல படத்தை பரவலாக திரையிட்டது! நான் தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் என் மீது தாக்குதல்! கோவில் வேண்டுமா மசூதி வேண்டுமா? என்று நீலிக்கண்ணீர்,போலிப்பரப்புரையாக இதுவரை எந்தப் பிரதமரும் செய்திராதவகை யில் தரம் தாழ்ந்த பிரச்சாரமே காணப்பட்டது. […]
குஜராத் தேர்தல் முன்னிலை நிலவரம் : பாஜக : முன்னிலை- 2 வெற்றி-96 காங்கிரஸ்: முன்னிலை-5 வெற்றி-76 சுயேச்சை : முன்னிலை-1 வெற்றி-2 இமாச்சல் பிரதேஷம் தேர்தல் முன்னிலை நிலவரம் : பாஜக : முன்னிலை-12 வெற்றி-32 காங்கிரஸ் : முன்னிலை-3 வெற்றி-17 சுயேச்சை : முன்னிலை-1 வெற்றி-3
குஜராத் எலக்ஷன் முன்னிலை-182 பாஜக – 101 காங்கிரஸ்-77 மற்றவை-4 இமாச்சல் பிரதேஷ் முன்னிலை நிலவரம் :68 பாஜக- 40 காங்கிரஸ்-24 மற்றவை- 4
குஜராத்தில் நாளை ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் பாஜக மந்திரி ஒருவர் குஜராத் தேர்தலில் பாஜக தோல்வி அடையும் என கருத்து தெரிவித்துள்ளார். மராட்டிய மாநிலத்தில் உள்ள பாஜக எம்.பி சஞ்சய் காகடே கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ‘குஜராத்தில் பாஜக நீண்ட காலமாக ஆட்சியில் இருப்பது பாஜகவை பாதிக்கும். மேலும், முஸ்லிம் மக்கள் பாஜக நீண்ட காலமாக ஆட்சியில் நீடிக்க விரும்பவில்லை. குஜராத் முதல்-மந்திரியாக மோடி இருக்கும் போது மாநிலத்தின் பிரச்சனைகளை குறித்து கவனம் […]
குஜராத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் 9ஆம் நடைபெற்றது. அதில் சுமார் 68சதவீத வாக்கு பதிவு நடைபெற்றது. இன்று இரண்டாம் கட்ட வாக்குபதிவு பகல் 12 மணிவரை சுமார் 39 சதவீத வாக்கு பதிவானது. இன்று பிரதமர் நரேந்திர மோடி அவரது சொந்த தொகுதியில் வரிசையில் நின்று வாக்களித்தார். அப்போது சுற்றி இருந்தவர்கள் மோடி மோடி என கூச்சலிட்டனர். பிறகு வாக்களித்துவிட்டு அவர்களிடம் பேசிவிட்டு மோடி சென்றார். வாக்களித்துவிட்டு, பிரதமர் மோடி வீதி […]
குஜராத்தில் இறுதி கட்ட வாக்குபதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை இல்லாத பரபற்பப்பை தற்போது கூட்டிவருகிறது. அனைத்து வாக்குசாவடிகளிலும் போலிஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டு கண்காணிக்கபடுகிறது. இந்நிலையில் தற்போது 12 மணிவரை நடந்த வாக்குபதிவில் 39 சதவீத வாக்குபதிவு நடந்துள்ளது. இதுவரை நடந்த வாக்குபதிவுகள் எந்த வித அசம்பாவிதமும் நடக்கவில்லை எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இரண்டு கட்டமாக நடந்த வாக்குபதிவுகளுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 18ஆம் தேதி நடக்க உள்ளது.
22 ஆண்டுகளாக தொடர்ந்து பாஜகவின் ஆட்சியில் செயல்பட்டு வரும் குஜராத் மாநிலத்தில் தற்போது இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதில் முதல் கட்ட தேர்தல் கடந்த டிசம்பர் 9 ஆம் தேதியன்று நடைபெற்றது. இந்நிலையில் அடுத்து இறுதிகட்ட தேர்தல் இன்று (டிசம்பர் 14) நடைபெற்று வருகிறது. குஜராத்தில் இன்று மொத்தம் உள்ள 182 தொகுதியில் மீதம் உள்ள 93 தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் கட்ட தேர்தலில் 68 சதவீத வாக்குகள் பதிவானது. […]
குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று பிரதமர் சபர்மதி ஆற்றிலிருந்து ஒரு கடல் விமானத்தில் இப்போது பறந்து கொண்டிருக்கிறார். இந்த விமானம் தண்ணீரிலிருந்து டேக் ஆஃப் ஆகிப் பறக்கும். 125 கோடி இந்தியர்களுக்கு இந்த விமானம் பயனளிக்கும் என்கிறார் அவர். வளர்ச்சியின் அடையாளமாக இது காட்டப் படுகிறது. அனைத்து டெலிவிஷன் சானல்களும் குதூகலாமாகக் குதித்துக் கொண்டிருக்கின்றன. சில சானல்களில் இதற்கு காங்கிரஸ் என்ன பதில் சொல்லப்போகிறது; இதுதான் வளர்ச்சி என்று கூவிக் கொண்டிருக்கின்றன. கடல் விமானத்தில் […]
“ராமர் கோயிலா அல்லது மசூதியா – எது உங்களுக்கு வேண்டும் என்பதை தீர்மானியுங்கள்” – குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் நரேந்திர மோடி இப்போது மேடைக்கு மேடை முழங்குவது. பல மதத்தவர்கள் வாழும் ஒரு நாட்டின் பிரதம மந்திரி மதச்சார்பற்றவராக இருக்கவேண்டும் – அல்லது அப்படியாவது வெளியே காட்டிக் கொள்ளவேண்டும். ஆனால் இவர் இப்படி வெளிப்படையாகவே தான் ஒரு இந்துத்துவ வாதிதான் என்று பறை சாற்றுகிறார்.இந்திய அரசியலமைப்புச்சட்டம் மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதியைக் காலில் போட்டு மிதித்துக் கொண்டே இவரெல்லாம் […]