சூப்பர் ஸ்பெஷாலிட்டிபடிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கி சேர்க்கை நடத்தலாம் என அனுமதி. தமிழகத்தில் நடப்பாண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சூப்பர் ஸ்பெஷாலிட்டிபடிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கி சேர்க்கை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கி 15 நாட்களில் இந்தாண்டு […]
தமிழக அரசின் 50% இடஒதுக்கீடு விவகாரத்தில், இந்தாண்டு மருத்துவர்களுக்கு சலுகை கிடையாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு. தமிழ்நாட்டில் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில், தொலைதூர பகுதிகளிலும், ஊரகப் பகுதிகளிலும் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்த நிலையில், மத்திய அரசு 2000வது ஆண்டின் மருத்துவ மேற்படிப்பு விதிகளை காரணம் காட்டி ஒதுக்கீட்டை ரத்து செய்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவு […]
அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. தமிழ்நாட்டில் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில், தொலைதூர பகுதிகளிலும், ஊரகப் பகுதிகளிலும் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்த நிலையில், மத்திய அரசு 2000வது ஆண்டின் மருத்துவ மேற்படிப்பு விதிகளை காரணம் காட்டி ஒதுக்கீட்டை ரத்து செய்தது. இதனையடுத்து, இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் 50 சதவீத […]
அரசு மருத்துவர்கள் பணியிட மாற்ற கலந்தாய்வுக்கு இடைக்காலத்தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 860 மருத்துவ பணியாளர்களை கட்டாய இடமாற்றம் செய்ய பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அரசு மருத்துவர்கள் சரவணபிரியா மற்றும் நிம்மி ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். விதிகளை பின்பற்றாமல் மூத்த மருத்துவர்களுக்கு மட்டும் கலந்தாய்வு நடத்தப்படுவதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டது. இதை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசு மருத்துவர்கள் பணியிட மாற்ற கலந்தாய்வுக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.