கோதாவரி ஆற்றில் மூழ்கி 4 இளைஞர்கள் உயிரிழப்பு..!

தீபாவளி தினத்தன்று முலுகு மாவட்டத்தில் கோதாவரி ஆற்றில் நான்கு இளைஞர்கள் மூழ்கி உயிரிழந்தனர். சனிக்கிழமை மாலை நண்பரின் பிறந்த நாளைக் கொண்டாட சென்றபோது இந்த விபரீதம் நடந்துள்ளது. இரண்டு பேரின் சடலங்கள் சனிக்கிழமையன்று மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ளவை நேற்று காலை மீட்கப்பட்டன. இறந்த 4 பேரும் ராயவரபு பிரகாஷ் (19), தும்மா கார்த்திக் (19), கே அன்வேஷ் (20), எஸ் ஸ்ரீகாந்த் (20) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். முலுகுவில் உள்ள வெங்கடபுரம் கிராமத்தின் ரங்கராஜபுரம் காலனி அருகே … Read more

கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து! 12 பேர் உயிரிழப்பு! 30 பேரை காணவில்லை!

நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் கோதாவரி ஆற்றங்கரைக்கு அதிகமாக வந்திருந்தனர். ஆந்திர மாநிலம், தேவிபட்டினத்தில் உள்ள கோதாவரி ஆற்றங்கரையில் உள்ள பொச்சம்மா கோயிலிலிருந்து பாபிகொண்டாலு என்ற இடத்திற்கு சுற்றுலா பயணிகள் படகு மூலம் சென்றுள்ளனர். அதில் 63 சுற்றுலாப்பயணிகளும், 9 பேர் அந்த சுற்றுலா கப்பலில் பணியாற்றும் பணியாளர்கள் சேர்த்து மொத்தம் 72 பேர் இருந்துள்ளனர். அளவிற்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றதால் பாதி வழியிலேயே படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் உயிர் காக்கும் … Read more

கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து! இதுவரை 7 பேர் உயிரிழப்பு! 27 பேரை காணவில்லை!

ஆந்திர மாநிலம் தேவிபட்டினத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் 60 பேர் படகு சவாரி செய்துள்ளனர். அப்போது அவர்கள் சென்றுள்ள சுற்றுலா படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகில் பயணித்த 61 பேரும் நீரில் மூழ்கினர். இதில் 27 பேர் காப்பாற்றப்பட்டுவிட்டனர். மீதம் உள்ள 34 பேரில்  உயிரிழந்த 7 பேரின் உடல்கள் மீட்கபட்டுள்ளன. இன்னும் நீரில் மூழ்கிய 27 பேரை  மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.