கள்ளக்குறிச்சி திமுக எம்.பி கவுதம் சிகாமணிக்கு சொந்தமான ₹8.60 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. அந்நிய செலாவணி விதிகளை மீறி வெளிநாடுகளில் முதலீடு செய்த புகாரில் அடிப்படையில், அந்நிய செலாவணி சட்டத்திற்கு புறம்பாக வெளிநாட்டு முதலீடுகளை வாங்கியதால் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. திமுக எம்.பி. கவுதமசிகாமணிக்கு சொந்தமான நிலங்கள், வர்த்தக வளாகங்கள் உள்ளிட்ட அசையா சொத்துக்களை பறிமுதல் செய்யவும், எம்.பி கவுதம் சிகாமணியிடம் விசாரணை நடத்தவும் அதிகாரிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது.