போக்குவரத்து ஊழியர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்…! ஓபிஎஸ் கோரிக்கை….!

போக்குவரத்து ஊழியர்களையும் முன்களப்பணியளர்களாக அறிவிக்க வேண்டும் என ஓபிஎஸ் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருப்பினும், மக்களுக்கு பணி செய்வதற்காக, தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல்,   மருத்துவர்கள், காவல்துறையினர், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள் என பலரும் பணிபுரிந்து வருகின்றனர். இதனையடுத்து, மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள், பத்திரிக்கையாளர்கள் போன்றோரை முன்களப்பணியாளர்களாக அறிவித்துள்ளது போல, போக்குவரத்து ஊழியர்களையும் முன்களப்பணியளர்களாக அறிவிக்க வேண்டும் என ஓபிஎஸ் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், … Read more

ஊடகத்துறையினர் அனைவரும் முன்களப் பணியாளர்களாகவே கருதப்படுவர் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

ஊடகத்துறையினர் அனைவரும் முன்களப் பணியாளர்களாகவே கருதப்படுவார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா பரவலுக்கு எதிரான போரில் செய்தித்தாள்,காட்சி,ஒலி ஆகிய ஊடகங்களில் பணிபுரிவோர் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் என்று வருகின்ற மே 7 ஆம் தேதி தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மகத்தான மக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய் இருப்பது ஊடகத்துறையே.ஏனெனில்,கடுமையான மழை மற்றும் வெயிலிலும் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் … Read more