பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகள் தோன்றிய நிலையில் பிரான்ஸ் அதிபர் மேக்ரோன்  பரிசோதனை மேற்கொண்டார்.சோதனையின் முடிவில் அவருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.பாதிப்பு உறுதியான நிலையில் 7 நாட்கள் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல்.மேலும் அலுவல் பணிகள் மற்றும் நடவடிக்கைகளை தொடர்ந்து கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.