வெளிநாடுகளில் இலவசமாக கிடைக்கக்கூடிய கருப்பு பூஞ்சை நோய்க்கான ‘அம்போடெரிசின்-பி’ மருந்தை இறக்குமதி செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சருக்கு எம்.பி.சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில்,கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களை பிளாக் பங்கஸ் என்ற கருப்பு பூஞ்சை நோய் தாக்குகிறது.அதாவது,கொரோனா நோயாளிக்கு ஸ்டீராய்டு மருந்து அதிக அளவில் கொடுக்கப்படுவதால் இந்த நோய் ஏற்படுகிறது. இதனால்,கண்,மூக்கு உள்ளிட்ட பகுதிகள் பாதிப்படைகிறது.மேலும், மூளையை தாக்கி செயலிழக்க வைத்து உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது.மேலும்,தமிழகத்தில் இதுவரை […]