Sambar : காய்கறியே இல்லாமல் சாம்பார் வைப்பது எப்படி?

Sambar

நமது வீடுகளில் நாம் அடிக்கடி சாம்பார் வைப்பது வழக்கம். அந்த வகையில், பொதுவாக நாம் சாம்பார் வைக்கும் போது, பீன்ஸ், உருளைக்கிழங்கு அவரைக்காய், கத்தரிக்காய், முருங்கைக்காய் என காய்கறிகளை போட்டு தான் சாம்பார் வைப்பதுண்டு. தற்போது இந்த பதிவில், காய்கறியே இல்லாமல் சாம்பார் வைப்பது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை  பருப்பு – 2 கப் கடுகு – சிறிதளவு சின்ன வெங்காயம் – 10 பெரிய வெங்காயம் – 2 வரமிளகாய் – 4 தக்காளி … Read more

Biryani : பிரியாணி பிரியரா நீங்கள்..? பிரியாணி சாப்பிட்ட பின் இதை சாப்பிட மறந்திராதீங்க..!

Biriyani

இன்று குழந்தைகள் முதல்  முதியவர்கள் வரை பெரும்பாலானோர் பிரியாணி பிரியர்களாக தான் இருக்கிறார்கள். பிரியாணி பொதுவாக அதிக கலோரிகள் மற்றும் கொழுப்புகளைக் கொண்டுள்ளது. அதிகப்படியான பிரியாணி சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும். சர்க்கரை நோய் பிரச்னை உள்ளவர்கள், பிரியாணியை அதிகமாக சாப்பிடுவதால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. பிரியாணி செரிமானமாக சற்று கடினமாக இருக்கும். அதிகப்படியான பிரியாணி சாப்பிடுவது ஜீரணக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும். பிரியாணி சுவையானது என்றாலும் அதனை அடிக்கடி சாப்பிடுவதால், உடல் ஆரோக்கியத்திற்கு … Read more

Thyroid : தைராயிடு பிரச்னை உள்ளவரா நீங்கள்..? அப்ப மறந்தும் இதெல்லாம் சாப்பிட்றாதீங்க..!

thyroid

தைராய்டு என்பது கழுத்தில் உள்ள  ஒரு வகையான சுரப்பி. இது தைராக்ஸின் மற்றும் ட்ரையோடோதைரோனின் ஆகிய இரண்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. இந்த ஹார்மோன்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்துவதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. தைராய்டு நோய் என்பது தைராய்டு சுரப்பி சரியாக செயல்படாததினால் ஏற்படக்கூடியது ஆகும். இது இரண்டு வகைப்படும். அவை, ஹைப்போதைராய்டிசம், ஹைப்பர் தைராய்டிசம் ஆகும். ஹைப்போதைராய்டிசம் என்பது தைராய்டு சுரப்பி போதுமான அளவு ஹார்மோன்களை உற்பத்தி செய்யவில்லை என்றால் ஏற்படக்கூடியது. ஹைப்பர் … Read more

Bitter Gourd : வீட்டில் உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட மறுகிறார்களா..? அப்ப இப்படி செய்து கொடுங்க..!

Bitter guard

நம் அனைவரின் வீட்டிலும், பாகற்காய் சாப்பிடாதவர்கள் சிலர் இருப்பார்கள். ஏனென்றால், பாகற்காய் என்றாலே கசப்பு சுவை கொண்டது என்பதால்,  சாப்பிட விரும்புவதில்லை. ஆனால், பாகற்காய் என்பது ஒரு ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி ஆகும். பாகற்காயில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது. தற்போது இந்த பதிவில், சாப்பிட மறுப்பவர்கள் கூட விரும்பி சாப்பிடக்கூடிய அளவுக்கு அசத்தலான பாகற்காய் … Read more

Weight loss : உடல் எடையை குறைக்க என்ன சாப்பிடலாம்னு யோசிக்கிறீங்களா..? இதோ சூப்பர் டிப்ஸ்..!

WeightLoss

இன்று பெரும்பாலானோர் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று உடல் எடை பிரச்சனை தான். இந்த பிரச்சனைக்கு மிக முக்கிய காரணம் நமது உணவு பழக்கவழக்கமும், வாழ்க்கைமுறையும் தான். நமது முன்னோர்கள் நோய் நொடியின்றி, நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ மிக முக்கியமான காரணமாக இருந்தது அவர்களது உணவு பழக்கவழக்கங்கள் தான். இன்று நமது முன்னோர்கள்  உணவுப்பழக்கவழக்கத்தை பின்பற்றுகின்றோமா என நமக்கு நாமே கேள்வி எழுப்பினால், இல்லை என்ற பதில் தான் வரும். எனவே நாம் நமது உடல் எடையை … Read more

Food : என்னது.. வீட்டிலேயே சாம்பார் பொடி செய்யலாமா..? அது எப்படிங்க…?

SAMBAR

நமது வீடுகளில் நாம் அடிக்கடி சாம்பார் வைப்பது வழக்கம். சாம்பாருக்கு பருப்பு, காய்கறிகள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு சாம்பார் மசாலாவும் முக்கியமானது. இந்த மசாலாவை நாம் கடைகளில் தான் வாங்குவதுண்டு. ஆனால், நாம் இந்த மசாலாவை கடைகளில் விலைகொடுத்து வாங்குவதை விட, வீட்டிலேயே சுத்தமாக சுவையாக தயார் செய்யலாம். தற்போது இந்த பதிவில் வீட்டிலேயே சாம்பார் மசாலா போடி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை  உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன் கடலை பருப்பு … Read more

Food : நீங்கள் குழந்தைக்கு பால் கொடுக்கும் பெண்ணா..? அப்ப கண்டிப்பா இதை சாப்பிடுங்க..!

Feeding

குழந்தை பெற்ற பெண்கள் குறைந்தது, குழந்தைக்கு 1 வயது வரையாவது தாய்ப்பால் கொடுப்பதுண்டு. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம். ஏனென்றால் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தாய்ப்பால் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. ஆனால், இன்று சிலர் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது தங்களது அழகை கெடுப்பதாக கருதுகின்றனர். மேலும், சிலருக்கு குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு பால் இருப்பதில்லை. இதற்கு காரணம் நமது உடலில் உள்ள சத்து குறைபாடு தான். தற்போது இந்த பதிவில் குழந்தைக்கு தாய்ப்பால் சுரக்க … Read more

Food : அப்பளத்தை வைத்த துவையல் செய்யலாமா..? அது எப்படிங்க..?

appalam

அப்பளம் என்றாலே நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவதுண்டு. இந்த அப்பளத்தை வட்டமாகவோ அல்லது வேறு வடிவிலோ நாம் செய்வதுண்டு. இந்த அப்பளத்தை நாம் செய்யக்கூடிய உணவுடன் செத்து சாப்பிடுவதுண்டு. இந்த அப்பளத்தை சாம்பார், தயிர் சாதம், ரசம், பொரியல் போன்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் வித்தியாசமான முறையில், அப்பளத்தை வைத்து துவையல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை  அப்பளம் – 4 கறிவேப்பிலை சின்ன வெங்காயம் … Read more

அறநிலையத்துறை சார்பில் உணவு வழங்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு

மதவாத சக்திகள் தலைதூக்கினால் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முதலமைச்சர் தயங்கமாட்டார் என அமைச்சர் சேகர்பாபு பேச்சு. பெருமழை காலத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவினால் அறநிலையத்துறை சார்பில் உணவு தயாரித்து வழங்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு சென்னையில் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், மதவாத சக்திகள் தலைதூக்கினால் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முதலமைச்சர் தயங்கமாட்டார். தமிழக அரசு மதம், சாதி சார்ந்தது அல்ல, ஆளுநர் வேலை இல்லாமல் ஏதாவது பேசி கொண்டிருக்கிறார் என்றும் கூறினார். இதனிடையே, … Read more

“இரு வேளை மட்டுமே உணவு;இனிதான் மோசமான விஷயங்கள்” – எச்சரிக்கும் இலங்கை பிரதமர்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு,அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இலங்கை மக்கள் அகதிகளாக பிற நாடுகளில் தஞ்சை அடைந்து வருகின்றனர்.அவ்வப்போது,கடல் வழியாக பிற நாடுகளுக்கு அகதிகளாக செல்லும் சிலர் கைதும் செய்யப்படுகின்றனர். இந்நிலையில்,இலங்கை மக்கள் தினமும் இரு வேளை உணவு மட்டுமே உண்ணும் நிலை உருவாகும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.இது தொடர்பாக,இலங்கை கல்லூரியில் நிகழ்வில் பேசிய பிரதமர் ரணில் … Read more