ராமேஸ்வரம் : கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அத்துடன் 5 விசைப்படகுகள், மீன்கள், வலைகளை பறிமுதல் செய்த கடற்படையினர் அவர்களை தலைமன்னார் கடற்கரை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த மாதத்தில் 29 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது கவனிக்கத்தக்கது. தொடர்ந்து தமிழ்நாட்டு மீனவர்களிடம் எல்லை மீறும் இலங்கையை ஒன்றிய அரசு கண்டிப்பது இல்லை […]
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருப்பது மீனவ கிராமங்களில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர், ஒரு படகில் கடலில் இரவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படை, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி, 10 பேரை கைது செய்ததோடு, படகையும் பறிமுதல் செய்து எடுத்து சென்றது. கைதான 10 மீனவர்களும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். விசாரணை […]
இலங்கை : தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 13 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்துள்ளனர். முதற்கட்டமாக அவர்கள் காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் என தெரிய வந்துள்ளது. ஏற்கனவே, ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்கள் தனுஷ்கோடி அருகே 25.01.2025 அன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர். […]
சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இரண்டு விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர். நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை நள்ளிரவில் கைது செய்தது. சென்னையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விமான நிலையம் – விம்கோ நகர் வழித்தடத்தில் 18 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது. மேலும், வடோல்கேட் – விம்கோ நகர் டிப்போ வரை […]
புதுச்சேரி: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில், தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி அதற்கடுத்த இரு தினங்களில் நகரக்கூடும். இதன் காரணமாக இன்று (டிச,17) முதல் 19ம் தேதி வரை தமிழக மற்றும் புதுச்சேரி கடலோரப்பகுதிகளில் குறாவளிக்காற்று […]
சென்னை : தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வருகின்ற 21-ஆம் தேதி வாக்கில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, 23-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விசைப்படகுகள், நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் […]
ராமேஸ்வரம் : நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, பருத்தித்துறை அருகே இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றுள்ளனர். அத்துடன் ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். தற்போது, சிறைபிடிக்கப்பட்ட 12 மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படையினர் அழைத்து சென்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு (நவ.,10) 23 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இன்று 12 பேர் சிறைபிடிப்பால் தமிழக […]
புதுச்சேரி பட்ஜெட் 2024 : மத்திய பட்ஜெட் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டதற்கு பிறகு இன்று யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் 2024-2025 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது இந்த பட்ஜெட்டை புதுச்சேரி நிதித்துறையை கையாளும் முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரி சட்டமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடிக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார். 2024 – 2025ஆம் நிதியாண்டிற்கான புதுச்சேரி பட்ஜெட்டிற்கு 12,700 […]
உத்தரபிரதேசம் : ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற ஒருவரை மீட்ட மீனவர் கரைக்கு வந்த பிறகு கன்னத்தில் பளார் என அறைந்த வீடியோ வைரலாகி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் சுல்தல்பூரில் காதல் ஜோடி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியாகி மீனவர்கள் சிலர் காதல் ஜோடியை மீட்டனர். அப்போது, காதலனை மீட்டு கரைக்கு கொண்டு வந்தவுடன் மீனவர் “தற்கொலை செய்யவா நினைக்கிறாய் ” உயிரோட […]
சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 14 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியக் கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இருந்து 5 நாட்டுப் படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் பறிமுதல் செய்தனர். மேலும், கைதான இலங்கை மீனவர்கள் தற்போது […]
நேற்று வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிசம்பர் 2-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெறும் என கூறப்பட்ட நிலையில், வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளது. இந்த புயலுக்கு மிக்ஜாம் […]
வங்கக்கடலில் புதியதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், இது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகம், மற்றும் புதுச்சேரியில் வரும் டிசம்பர் 3ஆம் தேதி வரையில் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..! இந்த நிலையில், தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு அந்தமான் கடல் […]
தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், புதியதாக காற்றழுத்த தாழ்வு நிலை வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் பகுதி வங்கக்கடலில் புதியதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது எனவும், இது வரும் 29ஆ தேதி வரை நிலை கொண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அடுத்த 48 மணிநேரத்தில் புயலாக […]
ஏறக்குறைய இரண்டு வாரங்களாக காணாமல் போனதாக கூறப்படும் மீனவர் ஒருவர், அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவில், லைஃப் படகில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். அக்டோபர் 12 ஆம் தேதி மாலை வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள கிரே துறைமுகத்தில் இருந்து 43 அடி உயர கப்பலில், ஒரு குழு வழக்கம் போல் மீன் பிடிக்க சென்றுள்ளது. அப்போது, திடீரென ஒரு மீனவர் காணமால் போனதாகவும், காணாமல் போன அந்த நபரை மீட்கும் பணி தீவிரமாக […]
நேற்று முன்தினம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தில் இருந்து, 500-க்கும் மேற்பட்ட விசைப்படகில், 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மற்றும் அவர்கள் வைத்திருந்த 5 படகுகளை பறிமுதல் செய்ததோடு, 27 மீனவர்களையும் கைது செய்தனர். இந்த நிலையில், இலங்கை கைதை எதிர்த்து, மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பாம்பன் சாலை […]
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 24 மீனவர்களை இலங்கை கடற்படை விடுதலை செய்துள்ளது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது வாடிக்கையாகி வரும் நிலையில், இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் 29ஆம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 24 மீனவர்களை கைது செய்தனர். இதனையடுத்து, இன்று இலங்கை நீதிமன்றம் அவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்துள்ளது. இந்த நிலையில் […]
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் இருந்த சிறுவன் உட்பட 14 காரைக்கால் மீனவர்களை விடுதலை சமீப காலமாக இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 14ம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் இருந்த சிறுவன் உட்பட 14 காரைக்கால் மீனவர்களை விடுதலை செய்து இலங்கை […]
சென்னை உட்பட ஆறு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், சென்னை உட்பட ஆறு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், […]
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 14 பேருக்கும் வரும் 21-ஆம் தேதி வரை சிறை தண்டனை நேற்று எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்த நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 14 பேருக்கும் வரும் 21-ஆம் தேதி வரை சிறை தண்டனை வழங்கி பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வவுனியா சிறையில் உள்ள 15 மீனவர்களை இலங்கை மன்னார் நீதிமன்றம் விடுவித்து உத்தரவு. சமீப காலமாக இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 5-ஆம் தேதி கச்சத்தீவு அருகே 14 வயது சிறுவன் உட்பட 15 ராமேஸ்வர மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், வவுனியா சிறையில் உள்ள 15 மீனவர்களை , இலங்கை மன்னார் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது.