இந்தியாவின் முதல் திருநங்கை மருத்துவராக போகும் முதல் திருநங்கை தூத்துக்குடியை சேர்ந்த தாரிகா பானு. இவர் சென்னை அம்பத்தூர் காமராஜர் அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் படித்தவர். தமிழ்நாட்டில் மூன்றாம் பாலினத்தவர் என்று பதிவு செய்து பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியது முதலில் இவர்தான். பள்ளிப்படிப்பை தொடர்ந்து இவர் மருத்துவ கல்லூரியில் சேர அனுமதி மறுக்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் இடஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவ கல்லூரியில் இடம் வேண்டும் என கோரப்பட்டது. […]