வெளிய துாக்கிட்டு போங்க அந்த நாய-தொண்டரை பார்த்து ராஜா டெண்ஷன்

பெரம்பலுார் : பெரம்பலுாரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. துணை பொதுச் செயலர் ராஜா அக்கட்சியின் தொண்டரை நாய் என்று திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை கண்டித்து பெரம்பலுார் மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. துணை பொதுச் செயலர் ராஜா பங்கேற்றார். ஆர்ப்பாட்டத்திற்கு என்று பெரம்பலுார் காந்தி சிலை முன்பாக மேடை  ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. மேடையில் … Read more

#விடியவிடிய போராட்டம்- விடியற்காலையில் தேநீருடன் துணைத்தலைவர்!!

நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வேளாண்மை விளைபொருட்கள் வர்த்தக மசோதா, விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா ஆகிய இரு மசோதாக்களும் நேற்று முன்தினம் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பிய நிலையில் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட சில கட்சிளின் உறுப்பினர்கள் துணைத் தலைவரின் இருக்கைகே சென்று முற்றுகையிட்டு கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் சபை … Read more

செப்.,24 நாடு தழுவிய போராட்டம்-காங்.அறிவிப்பு!

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் செ.,24ம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. வேளாண் மசோதாவை எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி, இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர் கட்சிகள் தொடர்ந்து தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றது. இந்நிலையில், ஏ.கே.அந்தோணி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில்  பிரியங்கா வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டார். கூட்டத்தில் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இக்கூட்டத்திற்கு பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த … Read more

#வேளாண் மசோதா-இன்று மாநிலங்களவையில் விவாதம்!!

மத்திய அரசு வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியது.ஆனால் இம்மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய தொழில்துறை அமைச்சர் அகாலி தளத்தை சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பதவி விலகினார். மேலும் பஞ்சாப்,ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில்  விவசாயிகள் மசோதாக்களை எதிர்த்து போராட்டி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில் வேளாண் மசோதாக்கள் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெறுகிறது. மக்களவையில் நிறைவேறிய நிலையில் மாநிலங்களவையிலும் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.