நீர்நிலை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு தடை. சென்னையில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அரசின் மேல்முறையீடு வழக்கில் உயர்நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறியதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு இருந்த நிலையில், இதனை விசாரிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.