தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பின் மின் கட்டண உயர்வு..! இன்று முதல் அமல்..!

8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு இன்று அமலுக்கு வந்தது.  தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பின் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி  தெரிவித்திருந்தார்.  மேலும்,அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும்  தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மின் கட்டண உயர்வை திரும்ப பெறுமாறு, அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து மின்சார வாரிய இணையதளத்தில் மின் கட்டணம் … Read more

3,419 கோடி ரூபாயாக வந்த ஒரு மாத மின்கட்டணம் மருத்துவமனையில் வீட்டு உரிமையாளர்

ஒரே மாதத்தில் ரூ.3,419 கோடி மின்கட்டணம், அதிர்ச்சியடைந்த வீட்டு உரிமையாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேசத்தின் குவாலியரில் உள்ள ஷிவ் விஹார் காலனியில் வசிக்கும் பிரியங்கா குப்தா, ஜூலை மாதம் தனது வீட்டிற்கு வந்த மின் கட்டணம் ரசீது பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அந்த ரசீதில் ஒரு மாதத்தில் ரூ.3,419 கோடி மின்சாரம் பயன்படுத்தப்பட்டதாக வந்துள்ளது. மேலும், அதிர்ச்சியடைந்த வீட்டு உரிமையாளரான பிரியங்காவின் மாமனார்  மின்கட்டண ரசீதை பார்த்த அதிர்ச்சியில் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து … Read more

மே மாத மின் கட்டணத்தை எப்படி கணக்கிடுவது?- இணையதளத்தில் மின் வாரியம் விளக்கம்…!

மே மாத மின் கட்டணத்தை எப்படி கணக்கிடுவது? என்று இணையதளத்தில் தமிழக மின்சார வாரியம் விளக்கமளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது மிகத் தீவிரமடைந்த நிலையில்,கடந்த 2 வாரங்கள் பொது முடக்கம் அமலில் இருந்தது.பின்னர்,மீண்டும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து,கொரோனா அச்சம் மற்றும் ஊரடங்கு காரணமாக,மின்சார வாரிய ஊழியர்கள்,மே மாதத்துக்கான மின் கணக்கீடு செய்ய வீடுகளுக்கு நேரில் செல்வதை தவிர்த்தனர். இதனால்,நுகர்வோரே தங்களது மின் பயன்பாட்டை புகைப்படம் எடுத்து,வாட்ஸ்அப் மூலம் மின் வாரியத்திற்கு  … Read more

#BREAKING: மின் கட்டண நிர்ணய நடைமுறைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி.!

மின் கட்டண நிர்ணய நடைமுறைக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மின் கட்டணம் வழக்கத்தைவிட அதிகமாக வசூலிப்பதாக பல புகார்கள் எழுந்துள்ளது. இதையடுத்து, வழக்கறிஞர் எம்.எல்.ஸ் ரவி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த வழக்கில், பொது முடக்க காலத்தில் நான்கு மாதங்களுக்கு சேர்த்து மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதால்,  வழக்கத்தைவிட மின் கட்டணம் உயர்ந்துள்ளது. எனவே … Read more

இந்த 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த.. இன்றே கடைசி நாள்.!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல்நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மின் கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில்  கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. இதனால்,  இந்த நான்கு மாவட்டங்களில் ஊரடங்கு கடுமையாக கடைபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக மின் கட்டணம் செலுத்த மாற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது இந்த மாவட்டங்களுக்கு அதிக கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. அதன்படி,  ஜூலை 15-ஆம் தேதி அதாவது … Read more

கூவத்தூர் கோஷ்டிக்கு மக்கள் தீர்ப்பு விரைவில் ஷாக் அடிக்கும்-உதயநிதி ஸ்டாலின்.!

தமிழகம் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக  மின்சாரப் பயன்பாடு குறித்த கணக்கெடுப்பை எடுக்கப்படாமல் இருந்தது. இதனால், முந்தைய மாதங்களில் கட்டிய கட்டணத்தையே கட்ட அரசு கூறியது. இந்நிலையில், நான்கு மாதங்களுக்கு சேர்த்து மின்சாரப் பயன்பாடு குறித்த கணக்கெடுப்பை எடுத்ததால் கட்டணத்தில், முன்பு செலுத்திய தொகை கழித்துக்கொள்ளப்பட்டு மீதத் தொகை வசூலிக்கப்படும் எனவும் மின் வாரியம் தெரிவித்திருந்தது. கட்டணம் அதிகமாக வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் விளக்கம் … Read more

மின் கட்டண வழக்கு .! தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு.!

ஊரடங்கு காலத்தில் முந்தைய மின் கட்டண தொகையின் அடிப்படையில் புதிய மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஊரடங்கால் வீடுகளில் பயன்படுத்தப்பட்ட மின்சார யூனிட்டின் அளவு யாருக்கும் தெரியாது என தமிழக அரசு தரப்பில்  விளக்கம் கொடுக்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெற்றே மின் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது என தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி இருந்ததால் மின் … Read more

மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு.!

கொரோனாவால் இந்தியா முழுவதும் 21 நாள்களுக்கு  ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழக்தில் ஊரடங்கு  வரும் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கு மின் வாரியம் மே 6-ம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது. ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டதால் மின்சார வாரியம் கால அவகாசம் வழங்கியுள்ளது.அதன்படி மார்ச் 25 முதல் ஏப்ரல் 30 வரை செலுத்த வேண்டிய … Read more