ரஜினிகாந்த் : சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் தேர்தலில் வெற்றிபெற்றவர்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு சென்றார். செய்தியாளர்களை சந்தித்த போது ” பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்ற திமுக தலைவர் எனது அருமை நண்பர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். மத்தியில் மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளதற்கு பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள். அதைப்போல, ஆந்திராவில் அமோக வெற்றி பெற்ற அருமை நண்பர் சந்திரபாபு நாயுடுவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்” எனவும் […]
டெல்லி: மக்களவை தேர்தலுக்கு பின்னர் அதிகளவு பரபரப்பாக இயங்கி வரும் இடமாக டெல்லி தற்போது மாறி வருகிறது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தற்போது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் (NDA), காங்கிரஸ் உள்ளடக்கிய இந்தியா (I.N.D.I.A) கூட்டணியும் இன்று டெல்லியில் வெவ்வேறு இடங்களில் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ், சரத் பவார், அபிஷேக் பானர்ஜி ஆகியோர் கார்கே இல்லத்திற்கு வந்துள்ளனர். […]
டெல்லி: மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகி இந்திய அரசியல் களத்தை பரபரப்பாக மாற்றியுள்ளது. யாருக்கும் பெரும்பான்மை இல்லாத சூழலில் கூட்டணி ஆட்சி அமையும் சூழல் உருவாகியுள்ளது. இதில் பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் அங்கம் வகித்து இருக்கும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆகியயோர் பாஜக ஆட்சியமைப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதில் இருவருமே , முன்னர் பாஜகவை அரசியல் ரீதியாக எதிர்த்த தலைவர்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை. தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், […]
மக்களவை தேர்தல் : நேற்று வெளியான மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 240 தொகுதிகளில் வென்றுள்ள பாஜக, தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளது. இதனையடுத்து, டெல்லியில் உள்ள நரேந்திர மோடி இல்லத்தில் பாஜக கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக தேசிய ஜன நாயக கூட்டணித் தலைவர்கள் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கூட்டத்தில் நிதிஷ்குமார், சந்திரபாபு […]
பாலகிருஷ்ணா : சினிமா நட்சத்திரம் நந்தமூரி பாலகிருஷ்ணா, ஆந்திர பிரதேசத்தின் ஹிந்துபூர் தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனையை எட்டியுள்ளார். பாலகிருஷ்ணா, தனது தந்தை மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனர் என்.டி. ராமா ராவ் அவர்களின் மரபைப் பின்பற்றி இந்த வெற்றியை தக்கவைத்துள்ளார். ஹிந்துபூர் தொகுதியில் 2014 முதல் 2024 வரையிலான மூன்று தேர்தல்களிலும் வெற்றி பெற்று, தனது குடும்பத்தின் அரசியல் செல்வாக்கை உறுதிப்படுத்தியுள்ளார். என்.டி. ராமா ராவ், ஹிந்துபூர் தொகுதியை 1985 […]
மக்களவை தேர்தல் : நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 240 தொகுதிகளில் வென்றுள்ள பாஜக, தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளது. இதனையடுத்து, டெல்லியில் இன்னும் சற்றுநேரத்தில் பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக தேசிய ஜன நாயக கூட்டணித் தலைவர்கள் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் மாலை 4 மணிக்கு […]
மகாராஷ்டிரா: நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தலைமையிலான I.N.D.I.A கூட்டணி அதிக தொகுதிகளை கைப்பற்றியது. மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 9 தொகுதிகளை மட்டுமே பாஜக கைப்பற்றி இருந்தது. காங்கிரஸ் 13 தொகுதிகளையும் சிவசேனா (உத்தவ் தாக்கரே) 9 தொகுதிகளையும் , சரத் பவாரின் NCP 8 தொகுதிகளையும் வென்று இருந்தன. இதனை அடுத்து, இன்று PTIயில் வெளியான தகவலின்படி, மகாராஷ்டிரா துணை முதல்வராக உள்ள பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் , இனி […]
பாஜக : உத்தரப்பிரதேச லோக்சபா தேர்தலில், பாஜக 41.37% வாக்கு சதவிகிதத்துடன் 33 இடங்களை பெற்றது, பாஜகவுவுக்கு இது பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி 33.59% வாக்கு சதவிகிதத்துடன் 37 இடங்களை கைப்பற்றியது, இது அவர்களது வலிமையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் 9.46% வாக்கு சதவிகிதத்துடன் ஆறு இடங்களை பெற்றது, இதுவும் ஒரு நல்ல முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. ஆனால், மாயாவதி தலைமையிலான பஹுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) 9.39% வாக்கு சதவிகிதத்தைப் […]
பிரதமர் மோடி: மக்களவை தேர்தல் நிறைவு பெற்றதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 17வது அமைச்சரவை கலைக்கப்பட உள்ளது. ஜூன் 16ஆம் தேதியுடன் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவை பதவி காலம் நிறைவு பெறுகிறது. இந்நிலையில், தற்போது டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி தனது ராஜினாமா கடிதத்தையும், 17வது அமைச்சரவையை கலைப்பதற்கான பரிந்துரை கடிதத்தை குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் வழங்கினார். ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங் ஆகியோரும் உடன் […]
நிதிஷ் குமார்: நேற்று வெளியான மக்களவை தேர்தல் முடிவுகள் நாட்டில் பல்வேறு பரபரப்பான அரசியல் களத்தை உருவாகியுள்ளன. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி குறித்த பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருகின்றன. இன்று பாஜக தலைமையிலான NDA கூட்டணியும், காங்கிரஸ் அங்கம் வகிக்கும் I.N.D.I.A கூட்டணியும் டெல்லியில் ஆலோசனை நடத்துகின்றனர். அதில் கலந்து கொள்ள பிரதான கட்சிகள் டெல்லிக்கு விரைந்துள்ளன. முன்னதாக, டெல்லி செல்வதற்கு முன்னர் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, […]
மக்களவை தேர்தல் : தூத்துக்குடி தொகுதியில் 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி பெற்றுள்ளார். தூத்துக்குடியில், கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர். இந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அண்ணாமலை எனக்கு என்ன தகுதி இருக்குனு எப்பவும் கேப்பாரு, மீண்டும் தான் மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த தகுதியை பெற முடியாத அண்ணாமலை தலைவராகத் தொடர்வது பாஜகவிற்கு நல்லதல்ல எனவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜகவிற்கு இடமே இல்லை, தாமரை மலராது என […]
மக்களவை தேர்தல் : நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை இல்லாததால், பாஜக 3வது முறையாக ஆட்சியமைக்க சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆகியோரின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த சூழலில், மற்ற கட்சிகளை ஒன்றிணைக்க NDA மற்றும் I.N.D.I.A கூட்டணி கட்சியினர் முயற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில், டெல்லியில் இன்று மாலை நடக்கும் பாஜக கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க ஜேடியு தலைவர் நிதிஷ் குமார் டெல்லிக்கு விமானத்தில் பயணித்தார். அதே விமானத்தில் இந்தியா கூட்டணி கூட்டத்துக்கு […]
சரத் பவார்: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனதால், கூட்டணி ஆட்சி அமையும் நிலை உருவாகியுள்ளது. இப்படியான சூழலில், மற்ற கட்சிகளை ஒன்றிணைக்க NDA மற்றும் I.N.D.I.A கூட்டணி கட்சியினர் முயற்சி செய்து வருகின்றனர். INDIA கூட்டணியில் பிரதான கட்சியாக செயல்பட்டு வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், நேற்று நிதிஷ் குமார் (ஐக்கிய ஜனதா தளம்) மற்றும் சந்திரபாபு நாயுடு (தெலுங்கு தேசம்) ஆகியோரிடம் I.N.D.I.A கூட்டணிக்கு […]
சென்னை : மக்களவை தேர்தலில் ஒரு தொகுதியில் பதிவாகும் வாக்குகளில் 6இல் 1 பங்கு வாக்கு பெறவில்லையெனில், வேட்பாளர் டெபாசிட் செய்த வைப்புத் தொகையை இழக்க வேண்டியிருக்கும். அதன்படி, தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் சீமானின் நாம் தமிழர் கட்சி டெபாசிட்டை இழந்துவிட்டது. இருந்தாலும், அரசியல் அங்கீகாரம் பெருமளவிற்கு எட்டு சதவீதம் வாக்குகள் பெற்றிருந்தது. இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ‘நாம் தமிழர் கட்சி அரசியல் அங்கீகாரம் பெருமளவிற்கு எட்டு சதவீதம் […]
நரேந்திர மோடி: நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது ” மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற (பிரதமர் மோடி) உங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு இந்திய வரலாற்றில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் நாற்காலியில் அமர்ந்த முதல் […]
ஒடிசா: நடந்து முடிந்த மக்களவை தேர்தலோடு ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலும் நிறைவு பெற்று முடிந்த நிலையில், இரு மாநிலங்களிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள 147 தொகுதிகளில் பாஜக 78 தொகுதிகளை வென்று ஆட்சியை முதல் முறையாக கைப்பற்றியுள்ளது. அடுத்து நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் 51 இடங்களிலும், காங்கிரஸ் 14 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. ஒடிசா மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் உருவானதை அடுத்து, தனது […]
மக்களவை தேர்தல் : தூத்துக்குடி மற்றும் திருவள்ளூர் தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர். அதன்படி, தமிழ்நாட்டிலே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் வெற்றிபெற்றார். அங்கு சசிகாந்த் செந்திலை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட்டை இழந்தனர். அதே போல், தூத்துக்குடி தொகுதியில் திமுகவின் நட்சத்திர வேர்பாளர் கனிமொழி 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். இங்கும், இவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட்டை […]
நாதக: மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று அதற்கான வாக்கு எண்ணிக்கையும் முடிவடைந்துள்ள நிலையில், தமிழக மக்களவை தகுதிகளான 39 தொகுதிகளிலும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. மேலும், நடைபெற்று முடிந்த இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி மொத்தம் 8.19% சதேவீத வாக்குகளை பெற்றுள்ளது. தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறுவதற்கு ஒரு கட்சிக்கு 8% வாக்குகள் தேவை என்ற நிலையில் தற்போது, 8.19% வாக்குகளை பெற்று நாம் தமிழர் கட்சியானது அங்கீகாரம் பெற்றுள்ளது. […]
சந்திரபாபு நாயுடு: மக்களவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் அனைவரது பார்வைகளும் மற்ற மாநில கட்சிகள் பக்கம் திரும்பியுள்ளது. இதில் குறிப்பாக , சந்திரபாபு நாயுடு (தெலுங் தேசம்) மற்றும் நிதிஷ் குமார் (JDU) ஆகியோரின் ஆதரவு பாஜவுக்கா அல்லது மாற்று கூட்டணிக்காக என்ற கேள்வி எழுந்தது. இந்தசூழலில், இன்று ஆந்திர பிரதேசம் அமராவதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சந்திரபாபு நாயுடு தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளார். அதில், மக்களவை தேர்தலில் 16 இடங்களை பெற்றுள்ளது […]
மக்களவை தேர்தல் : இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரனாவத் காங்கிரஸ் கட்சியின் விக்ரமாதித்ய சிங்கை எதிர்த்து 74,755 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நடிகரும், அரசியல்வாதியுமான சுரேஷ் கோபி, கேரளாவில் திருச்சூரில் பாஜக சார்பில் போட்டியிட்ட நிலையில், 74,686 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வி.எஸ்.சுனில் குமார் போட்டியிட்டார். நடிகை ஜூன் மாலியா திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நிலையில், […]