Tag: #Election Commission

தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையை வெளியிட்ட தேர்தல் ஆணையம்…!!

தமிழகத்தில் மொத்தம் 5.87 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அவர்களில் ஆண் வாக்காளர்கள் –சுமார் 2.93 கோடி பெரும், பெண் வாக்காளர்கள் –சுமார் 2.99 கோடி பெரும், மூன்றாம் பாலினம் –சுமார் 5,040 பெரும் உள்ளனர் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

#Election Commission 1 Min Read
Default Image

ஆர்.கே.நகர் தேர்தல் பல கட்டுபாடுகளை விதித்த தேர்தல் ஆணையம்…!

ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகளையும் வெளியிட தேர்தல் ஆணையம் தடை.அதேபோன்று சமூக வலைதளங்களில் தேர்தல் விளம்பரங்கள் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்து வெளியேறி வருகின்றனர்.வேட்பாளருக்கு ஆதரவாகவோ, எதிராகவோ குறுஞ்செய்தி வெளியிட்டாலும் நடவடிக்கை என பல கட்டுபாடுகளை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.

#Chennai 2 Min Read
Default Image

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து என்பது பொய்யான செய்தி :தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து என வெளியாகும் செய்தி உண்மையில்லை என மறுத்துள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி. ஆர்.கே .நகர் இடைதேர்தலில் என்ன செய்தாலும் பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் தடுக்கவே முடியாது. ஆனால் அதற்குப் பதில். “அந்த ஏரியாவில் ஆறாயிரம் ருபாய் கொடுத்தார்கள். எங்கள் ஏரியாவில் நாலாயிரம் ரூபாய்தான் கொடுத்தார்கள்.பாக்கி இரண்டாயிரம் ரூபாயை இடைத்தரகர்கள் அமுக்கிவிட்டார்கள்” என்று ஏராளமான வாக்காளர்கள் புகார் செய்த வண்ணம் உள்ளார்கள்.இவ்வாறு அதிமுக மீது திமுகவினரும் ,அதிமுக மீது தினகரன் அணியும் […]

#ADMK 3 Min Read
Default Image

ஆர்.கே. நகர் வாக்காளர்களுக்கு எழும்பூரில் பணப்பட்டுவாடா…

ஆர்.கே. நகர் வாக்காளர்களுக்கு எழும்பூரில் பணப்பட்டுவாடாவானது அதிமுகவின் முன்னாள் எம்.பி. பாலகங்கா வீட்டில் வைத்து   தைரியமாக அப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு கொடுக்கபடுகிறது.ஆர்.கே. நகரில் பண மழைதான் பொழிகிறது. சென்னை எழும்பூரில் உள்ள முன்னாள் எம்பி. பாலகங்கா அடையாள அட்டையுடன் 300க்கும் மேற்பட்டோர் தலா ரூ. 6000 பணம் பெற்று செல்கின்றனர் என வீடியோ பதிவு வெளிவந்துள்ளது.

#ADMK 1 Min Read
Default Image

திமுகவினர் சாலைமறியல் : பணபட்டுவாடா புகார்

ஆர்கே நகர் இடைதேர்தல் களம் படு பயங்கரமாக இயங்கி வருகிறது. வேட்புமனு தாக்கல் ஆரம்பித்து தற்போது வரை இன்னும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே பணபட்டுவாடா புகார் காரணமாக தான் ஆர்கே நகர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது அங்கு பாதுகாப்பு பலபடுத்தபட்டு தொகுதிக்குள் வரும் ஒவ்வொரு வாகனமும் சோதனைக்கு உட்பட்டு தான் உள்ளே அனுமதிக்கபடுகிறது. தற்போது திமுகாவை சேர்ந்த முன்னாள் அமைச்சர், பூங்கோதை , ஆலடி அருணா, ஆகியோர் அதிமுகவினர் பணபட்டுவாடா செய்வதாக கூறி சாலை மறியலில் […]

#ADMK 2 Min Read
Default Image

ஆர்.கே நகர் ; வயிற்றில் பணம் கட்டி வைத்திருந்த அதிமுக நிர்வாகி பச்சையப்பன் கைது…!

சென்னை ஆர்.கே. நகரில் வாக்காளருக்கு கொடுப்பதற்காக வயிற்றில் பணத்தை கட்டி வைத்திருந்த அதிமுகவை சேர்ந்த பச்சையப்பன் என்பவர் கைது செய்யப்பட்டார்.இதனை தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் அவரை விசாரணை செய்து வருகின்றனர்.கடந்த தேர்தலை போல இந்த தேர்தலிலும் பணம் சும்மா பூந்து விளையாடுது போல….???

#ADMK 1 Min Read
Default Image

பிரதமர் மோடி மீது புகார் அளித்த காங்கிரஸ்

குஜராத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் 9ஆம் நடைபெற்றது. அதில் சுமார் 68சதவீத வாக்கு பதிவு நடைபெற்றது. இன்று இரண்டாம் கட்ட வாக்குபதிவு பகல் 12 மணிவரை சுமார் 39 சதவீத வாக்கு பதிவானது. இன்று பிரதமர் நரேந்திர மோடி அவரது சொந்த தொகுதியில் வரிசையில் நின்று வாக்களித்தார். அப்போது சுற்றி இருந்தவர்கள் மோடி மோடி என கூச்சலிட்டனர். பிறகு வாக்களித்துவிட்டு அவர்களிடம் பேசிவிட்டு மோடி சென்றார். வாக்களித்துவிட்டு, பிரதமர் மோடி வீதி […]

#BJP 2 Min Read
Default Image

அர்கே நகர் : தொப்பிக்கு போட்டிபோடும் 29 சுயேட்சைகள்

ஆர்கே நகர் இடைதேர்தல் அறிவிக்கப்பட்டு பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஆர்கே நகர் தேர்தலில் TTV.தினகரன் அவர்கள் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டார். தற்போது மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அதே தொப்பி சின்னம் வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டார். ஆனால் இதே தொப்பி சின்னத்தை ஆர்கே நகரில் போட்டியிடும் சக சுயேச்சை வேட்பாளர்களும் வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் முறையிடுகின்றனர்.  இந்நிலையில், சின்னம் ஒதுக்கீடு குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் […]

#Election Commission 4 Min Read
Default Image

ஆர்.கே.நகர் தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்புமனு ஏற்பு

ஆர்.கே.நகர் தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்புமனு ஏற்ற்றது தேர்தல் ஆணையம்…. மாலை 5 மணியளவில் நடிகர் விஷால் இடைதேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்திருந்த வேட்புமனுவில் விஷாலுக்கு ஆதரவு தெரிவித்து முன்மொழிந்து கையெழுத்திட்ட வேலு என்பவரது கையெழுத்து பொய் எனக்கூறி அவரது வேட்புமனு செல்லாது எனகூறி தள்ளுபடி செய்தது தேர்தல் ஆணையம் இதனையடுத்து,தனக்கு ஆதரவாக முன்மொழிந்து கையெழுத்திட்ட நபரது குடும்பத்தை ஆளும்கட்சியை சேர்ந்த சிலரின் மிரட்டல் காரணமாக நான் எனது கையெழுத்து போலி எனக்கூறி எழுதி கொடுக்க வேண்டிய […]

#ADMK 2 Min Read
Default Image

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பரப்புறைக்கு கடும் கட்டுப்பாடு

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பிரசாரத்திற்கு கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது தேர்தல் ஆணையம். வீதிகளில் கட்சியினர் உட்கார தடை, வீடுகளில் கட்சி பூத் அமைக்க தடை, வீடு வீடாக சென்று ஓட்டு கேட்க மாலை 5மணி முதல் இரவு 9 மணி வரை தடை என பல தடைகளை விதித்துள்ளது. ஆர்கே நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்கவே இத்தகைய கடும் நடவடிக்கைகள் எடுக்க படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

#Election Commission 1 Min Read
Default Image

முடக்கியவனே கொடுத்து விட்டாண்டி..!

இரட்டை இலையை மீட்டுவிட்டோம் என்று ஒபிஎஸ் குதூகலிக்கிறார்! முடக்கியதே இவர்தானே! இவரைப் போலவே தேர்தல் ஆணையத்திலும் “நியாயவான்கள்” நிறைந்திருக்கிறார்கள்! ஒபிஎஸ் சோடு 12 எம்எல்ஏக்கள் போய்விட்டதால் முடக்கினோம் என்றவர்கள் தினகரனோடு 20 எம்எல்ஏக்களே இருப்பதால் ஒபிஎஸ் உள்ள அணியிடம் கொடுத்து விட்டோம் என்கிறார்கள் ! இவர்களை இயக்குவது யார் என்பது சின்னப் பிள்ளைகளுக்கும் தெிரிகிறது. “முடக்கியவனே கொடுத்து விட்டாண்டி” என்று புதுப் பாட்டு பாடுகிறார்கள். –Ramalingam Kathiresan   இரட்டை இலையை ஜெயிச்சுட்டாங்களாமாம்.. அந்த இலையில் உயிரே இல்லை பாவிகளே.. –Bala G

#ADMK 2 Min Read
Default Image