ஓஎன்ஜிசி கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் – இபிஎஸ்

Edappadi Palanisamy

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் சோதனை கிணறுக்கான அனுமதி கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் சோதனைக் கிணறுகளை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஓஎன்ஜிசி நிறுவனம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையத்திடம் கேட்டுள்ள அனுமதியை உடனடியாக இந்த திமுக அரசு நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். தமிழகத்தில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டங்களால் நிலத்தடி நீரும், … Read more

திமுக வார்டு உறுப்பினர் மீது நடவடிக்கை தேவை! இல்லையெனில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – இபிஎஸ்

Edappadi K Palaniswami

மேட்டுப்பாளையம் அதிமுக நகரமன்ற உறுப்பினர்களை தாக்கிய திமுக வார்டு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், மேட்டுப்பாளையம் நகர மன்றக் கூட்டத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கழக நகர மன்ற வார்டு உறுப்பினர்களைத் தாக்கிய, திமுக வார்டு உறுப்பினர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காத திமுக அரசின் காவல் துறைக்கு கடும் கண்டனம். மேட்டுப்பாளையத்தில் நிலவும் பிரச்சனைகள் குறித்து கழக வார்டு உறுப்பினர்கள், மேட்டுப்பாளையம் நகர மன்ற … Read more

நெல்லையில் பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல்.! இபிஎஸ் கடும் கண்டனம்.!

ADMK Chief Secretary Edappadi Palanisamy

நெல்லை மாவட்டம் மணிமூர்த்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தாமிரபரணி ஆற்றில் நேற்று முன்தினம் மாலையில் குளித்து கொண்டிருந்த சமயம், அங்கு வந்த ஒரு கும்பல், இந்த இரு இளைஞர்களிடமும் அவர்கள் சாதி பற்றி கேட்டுள்ளனர். அப்போது இந்த இளைஞர்கள் பட்டியலினத்தை சேர்த்தவர்கள் என்றவுடன், அவர்களை தாக்கி அவர்களிடம் இருந்த பணம் , செல்போன் உள்ளிட்ட பொருட்களை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். பாதிக்கப்பட்ட இரு இளைஞர்களையும் பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அந்த இளைஞர்கள் … Read more

தேவர் ஜெயந்தியை அரசு விழாவாக அறிவித்தவர் எம்ஜிஆர்.! பசும்பொன்னில் இபிஎஸ் பேட்டி.! 

Edappadi Palanisamy visit Muthuramalinga thevar

இன்று அக்டோபர் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது தென் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டும் இந்த நிகழ்வு , முத்துராமலிங்க தேவர் பிறந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலை முதலலே அரசியல் தலைவர்கள் நேரில் வந்து தங்கள் மரியாதையை செலுத்தி வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் வந்து நேரடியாக மரியாதை செலுத்திய பின்னர், அதிமுக … Read more

பங்காரு அடிகளார் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி!

Bangaru Adigalar

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் (82) திடீரென மாரடைப்பால் கடந்த 19-ஆம் தேதி காலமானார். பங்காரு அடிகளார்  நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பங்காரு அடிகளார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவருமே இரங்கல் தெரிவித்து இருந்தனர். இதில், ஆளுநர் தமிழிசை, முதல்வர் மு.க.ஸ்டாலின், டாக்.ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதேவேளையில்,  ஆன்மீக தலைவர்கள் … Read more

எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் : உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் மனு.!

Madras High Court - Edappadi Palanisamy

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக சார்பாக, ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சராக அறிவிக்கப்பட்டு, அதன் பிறகு அவர் ராஜினாமா செய்து, பின்னர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வரானார். பல்வேறு அரசியல் நகர்வுக்கு பின்னர் ஒன்றிணைந்த எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் , முறையே தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் என்ற பொறுப்பில் இருந்து வந்தனர். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக 66 இடங்களை கைப்பற்றி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக அமர்ந்தது. அப்போது எதிர்கட்சி தலைவராக எடப்பாடி … Read more

தமிழ்நாடு முதலமைச்சர் பற்றி குறை சொல்வதா? – இபிஎஸ்-க்கு டி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம்!

TKSElangovan

ஆரியம், திராவிடம் பற்றி ஆளுநர் பேசிய பேச்சு குறித்த கேள்விக்கு ‘புராணம் படிக்கவில்லை’ என்று பயந்து பதில் அளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ‘சாதனை நாயகர்’ தமிழ்நாடு முதலமைச்சர் பற்றி குறை சொல்வதா? என்று திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், ஏறத்தாழ மூன்றாண்டு காலம் முதலமைச்சர் பதவியில் இருந்து மக்களைப் பற்றி கவலைபடாமல், தன்னையும், தனது அடிபொடிகளையும் வளமாக்கிக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி ஒரு மூட்டை பொய்களை … Read more

பாஜகவுக்கு இபிஎஸ் துரோகம் செய்துள்ளார் – டிடிவி தினகரன்

TTV DHINAKARAN

அதிமுக ஆட்சியை காப்பாற்றி கொடுத்த பாஜகவிற்கு எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துள்ளார் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.  நெல்லையில் இன்று அமமுக கழக மகளிரணி துணைச் செயலாளர் சண்முககுமாரி அவர்களின் இல்ல திருமண விழாவை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமை ஏற்று  நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்போம். அப்போது யாருடன் … Read more

சூழ்நிலை காரணமாக பாஜகவுடன் கூட்டணி.! இபிஎஸ் பேச்சு.! 

ADMK Chief Secretary Edapadi Palanisamy

இன்று சேலம், ஓமலூரில் அதிமுக கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக – பாஜக கூட்டணி பற்றியும், திமுகவின் கையெழுத்து இயக்கம் பற்றியும் உரையாற்றினார். அவர் பேசுகையில், தங்கள் கொள்கையை எந்த வகையிலும் விட்டுக்கொடுக்காத கட்சி என்றால் அது அதிமுக தான். கூட்டணி என்பது சூழ்நிலை காரணமாக அமைந்தது. அப்படி தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்தோம். ஆனால் அதற்காக கொள்கையை விட்டுக்கொடுக்கவில்லை. அது … Read more

எடப்பாடி பழனிசாமி பெரும் வீழ்ச்சியை சந்திக்கப் போகிறார் – டிடிவி தினகரன் பேட்டி

TTV DHINAKARAN

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்  தலைமையில் நடைபெற்றது. இதற்கு முன்பு செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிடிவி தினகரன், பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அமமுக இருக்கும். ஒருவேளை கூட்டணியில் அமமுக இருக்க முடியாது என்ற சூழ்நிலை வந்தால் தேர்தலில் தனித்து நிற்கவும் தயார். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக போன்ற தேசிய கட்சிகளுடன் கூட்டணியில் அமமுக இருக்கலாம். எங்கள் லட்சியம் நிறைவேறும் வரை … Read more