கொரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம் நிதியுதவி!

கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவலானது மிகத் தீவிரமாகப் பரவி வரும் நிலையில்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன்காரணமாக,பல மாநிலங்களில் இரவு நேர மற்றும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,கொரோனா தடுப்பு பணிகளுக்காக மக்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் தங்களால் இயன்ற நிதியுதவியை அளித்து வருகின்றனர். அந்த வகையில்,நடிகர் சிவகார்த்திக்கேயன் தமிழக … Read more

ம.பி: 250 ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொடுத்தற்காக தலை குனிந்து வணங்கி நன்றி தெரிவித்த அமைச்சர்..!

ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்கு மத்தியில்,தனியார் நிறுவனம் ஒன்று ஆக்ஸிஜன் வழங்கியதற்காக மத்திய பிரதேச எரிசக்தி அமைச்சர் பிரதும்ன்யா சிங் தோமர் தலை குனிந்து வணங்கி நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தார்.இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச எரிசக்தி மந்திரி பிரதும்ன்யா சிங் தோமர்,ஏப்ரல் 24 ஆம் தேதியன்று மலான்பூரில் உள்ள சூர்யா என்ற தனியார் நிறுவனத்திடம்,மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுவது குறித்து கலந்துரையாடினார். இதைத் தொடர்ந்து சூர்யா நிறுவனம் அமைச்சரின் வேண்டுகோளை ஏற்றுகொண்டது.அதன்பிறகு,நிறுவனம் தங்கள் ஆலையை மூடிவிட்டு … Read more

ஆதரவற்றவருக்கு சிறுநீரக தானம் செய்த பெண் – பிரதமர் மோடி பாராட்டு!

ஆதரவற்ற ஒருவருக்கு தனது சிறுநீரகத்தை தானம் செய்ததாக பெண்மணி ஒருவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தை அடுத்து, பிரதமர் மோடி அப்பெண்மணிக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். 48 வயதுடைய மனோஷி ஹல்தார் எனும் பெண் கொல்கத்தாவில் வாழ்ந்து வருகிறார். இவர் உறுப்பு தானம் குறித்த பிரதமர் மோடி அவர்களின் உரையால் கவரப்பட்டு, 2014 ஆம் ஆண்டில் ஆதரவற்ற ஒருவருக்கு தனது சிறுநீரகத்தை தானம் செய்துள்ளார். மேலும் இது குறித்து பிரதமர் மோடிக்கு கடந்த சில மாதங்களுக்கு … Read more

பிச்சை எடுத்த தொகையை கோவில்கலுக்கு நன்கொடையாக அளித்த பிச்சைக்காரர்.. குவியும் பாராட்டுக்கள்..!

ஆந்திரா மாநிலம், விஜயவாடா பகுதியை சேர்ந்தவர், யாதி ரெட்டி. கூலி வேலை பார்த்து வந்த இவர், வயது முதிவு காரணமாக அங்குள்ள ஒரு கோவிலில் பிச்சை எடுக்க தொடங்கினார். 71 வயதாகும் இவர், கடந்த 7 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்துள்ளார். இவர் பிச்சை எடுத்து வந்த பணத்தில் சுமார் 1 லட்ச ரூபாயை சாய் பாபா கோவிலுக்கு நன்கொடையாக வழங்கினார். இதுகுறித்து அவர் கூறுகையில், அவர் கடந்த 7 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வருவதாகவும், அந்த … Read more