மருத்துவர் சாந்தா அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரின் இறுதி சடங்குகளின் போது ”காவல்துறை மரியாதை” அளிக்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,மருத்துவர் சாந்தா அவர்களை இழந்து வாடும் சென்னை அடையாறு புற்று நோய் சிகிச்சை மையத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய மக்கள் […]
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.அப்போலோ மருத்துவமனையில்இதய நோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிர்பிரிந்தது.புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் பணிக்கு தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் மருத்துவர் சாந்தா.சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் 67 ஆண்டுகளாக பணியாற்றியவர் மருத்துவர் சாந்தா.