உலகின் பில்லியனர் ஜோடிகளான கேட்ஸ் தம்பதிகள் 27 வருடங்களுக்குப் பிறகு தற்போது விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ள நிலையில், இதுகுறித்து அவர்கள் மூத்த மகள் ஜெனிபர் கேட்ஸ் அவர்கள் தனது இணையதள பக்கத்தில் மனம் திறந்துள்ளார். உலகின் பணக்கார ஜோடிகளில் ஒருவரான பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் ஆகிய இருவரும் 27 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு தற்பொழுது விவாகரத்து செய்துகொள்ள போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 27 வருட திருமண வாழ்க்கைக்கு பின்பதாக மீண்டும் […]
கரப்பான் பூச்சி பயத்தால் 18 முறை வீடு மாறிய தம்பதியினர். சில பெண்களுக்கு பூச்சிகள் என்றாலே சற்று பயமும், அலட்சியும் உண்டு. அந்த வகையில், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வசித்துவரும் ஒருவர், தனது மனைவிக்கு கரப்பான் பூச்சி குறித்த பயம் இருப்பதால் மிகப்பெரிய இன்னல்களுக்கு ஆளாகி உள்ளார். அவர் திருமணமான, அதாவது 2017-ம் ஆண்டு திருமணத்திற்கு பின்பு தான் அவருக்கு கரப்பான்பூச்சி குறித்த பயம் இருப்பது தெரியவந்துள்ளது. சமையலறையில் கரப்பான் பூச்சி இருப்பதை கண்ட பின் […]
மனைவியின் சம்மதமின்றி விவாகரத்து செய்யக் கூடிய தலாக் முறை எப்படி முஸ்லீம் ஆணுக்கு செல்லுமோ, அதே போல பெண்களும் கணவணின் சம்மதமின்றி குலா முறையில் விவாகரத்து செய்து கொள்வது சட்டப்படி செல்லும் என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மனைவியின் சம்மதமின்றி ஆண்கள் தங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் தங்கள் மனைவியை தலாக் எனும் முறையில் விவாகரத்து செய்து கொள்வது முஸ்லிம்களிடையே வழக்கம். இவ்வாறு தலாக் முறையில் கணவன் விவாகரத்து செய்து கொண்டால், இதை வாபஸ் பெறுவதற்கு கணவன் […]
கணவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறியதை பொய் என நினைத்து, அதை வீடியோவாக பதிவு செய்த மனைவி மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேற்கு வங்கத்தில் திருமணமாகிய 4 மாதத்தில் தம்பதிகள் இருவருக்கு இடையேயான முரண்பாடான வாழ்க்கை தற்போது ஒரு உயிரையே மாய்த்துள்ளது. மேற்குவங்கத்தில் வசித்து வரக்கூடிய அமோன் ஷா எனும் 25 வயதுடைய நபர் நேஹா எனும் 21 வயதுடைய பெண்ணை கடந்த டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளார். […]
விவாகரத்துக்குப் பிறகு, கணவரின் சம்பளம் இந்த காலகட்டத்தில் அதிகரித்தால் மனைவிக்கு ஜீவனாம்சம் அதிகரிக்க உரிமை உண்டு என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஹரியானாவில் பஞ்ச்குலாவில் வசிக்கும் வருண் ஜகோட்டா,இவருக்கும் இவர் மனைவிக்கும் இடையே விவாகரத்து நடைபெற்றுள்ளது.இவர் தனது மனைவிக்கு மாதம் 20,000 ரூபாய் ஜீவனாம்சம் வழங்கி வந்துள்ளார்.இந்நிலையில் சமீபத்தில் வருனின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.இதனால் அவரது மனைவி தனக்கான ஜீவனாம்சம் தொகையை உயர்த்த வேண்டும் என்று குடும்ப நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். இதனை […]
10 திருமணம், 9 விவாகரத்துக்கு பிறகும், தனக்கான ஏற்ற துணையை கண்டறிய இன்னும் திருமணம் செய்வேன் என கூறும் 55 வயது பெண். தற்போதைய காலகட்டத்தில் ஒருவரை காதலித்து திருமணம் செய்வதும், விருப்பமில்லாமல் போனால் விவாகரத்து பெற்று கொண்டு வேறொருவரை திருமணம் செய்து கொள்வதும் வழக்கமாகி விட்டது. ஆனால், 2 திருமணத்துக்கு பின் இந்த கதையா தொடர முடியாது, அவ்வாறு செய்கையில் சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழ முடியாது. இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த காஸ்ஸி எனும் 55 […]
கணவர் தன்னிடம் சண்டை போடாமல் அளவுக்கு அதிகமான அன்பை தனக்கு காட்டுவதாக கூறி மனைவி விவாகரத்து கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள சம்பத் மாவட்டத்தில் உள்ள பெண் ஒருவர் கணவர் தன்னிடம் சண்டை போடாமல் அளவுக்கு அதிகமான அன்பை வெளிப்படுத்துவதால் தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கோரி ஷரியா நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் எனக்கு திருமணமாகி 18 மாதங்களாகியதாகவும், ஆனால் தனது கணவர் என்னிடம் ஒரு நாள் சண்டை போட்டதில்லை […]
கணவருக்கு ரூ. 25 லட்சம் வரதட்சணையாக வழங்காததால் வாட்ஸ்அப்பில் மனைவிக்கு கால் செய்து மூன்று முறை தலாக் கூறி விவகாரத்து செய்து விட்டதாக கூறியுள்ளார். கடந்த 2001-ஆம் ஆண்டு திருமணம் செய்த கொண்ட மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலை சேர்ந்த இந்த தம்பதியினர் 2013ல் கணவர் வேலை இடமான பெங்களூருக்கு குடி பெயர்ந்துள்ளனர். இந்த நிலையில் கணவர் 42 வயதான மனைவியிடம் வீட்டாரிடம் இருந்து வரதட்சணை வாங்கி வந்தால் மட்டுமே தன்னுடன் இருக்க முடியும் என்று மிரட்டியுள்ளராம். […]
கணவரின் அதிக அன்பால் விவாகரத்து கேட்டு நீதிபதிகளை குழப்பத்துக்குள்ளாகியுள்ள பெண்ணின் செயல் உத்தரபிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சம்பால் எனும் மாவட்டத்தில் பெண் ஒருவர் தனக்கு விவாகரத்து வேண்டும் என ஷரியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் பெண்ணின் விவாகரத்துக்கான காரணம் என்ன என்று அறிந்த நீதிபதிகள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். அதாவது அந்தப் பெண்ணின் கணவர் அவளை அதிகமாக நேசிப்பதாலும், அவளுடன் சண்டை இட்டுக் கொள்வதில்லை எனும் காரணத்திற்காகவும் அந்தப் பெண் திருமணமான 18 […]
வளர்ப்பு நாயை பிரிக்க மனதில்லாமல் விவாகரத்து பெற்ற தம்பதியினர் செய்த அட்டகாசமான செயல். இன்று விவாகரத்து பெரும் பல தம்பதியினர் விவாகரத்து பெற்ற பின், நீ யாரோ, நான் யாரோ என்று சென்று விடுகின்றனர். ஆனால், மும்பையில், குழந்தை இல்லாத வங்கி பணியாளரும், அவரது மனைவியும் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக தெருநாய்கள் இரண்டை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப காரணங்களால் தற்போது சிறு பிரச்சினை ஏற்பட்டதால் கடந்த பிப்ரவரி மாதம் […]
டெல்லியில் மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக குற்றவாளிகளாக ராம்சிங், ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங், வினய்ஷர்மா, பவன்குப்தா, அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டு 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான். குற்றவாளியான ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். மீதமுள்ள முகேஷ்சிங், வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு […]
கணவர் 10 நாளாக குளிக்கவில்லை அதனால் தனக்கு விவாகரத்து கொடுங்கள் என மனைவி புகார் அளித்துள்ளார். அந்த பெண்ணிற்கு ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது. 2 மாத அவகாசத்தை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் கமிஷனர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் விஷாலி மாவட்டத்தில் வசித்து வரும் மனிஷ் ராம் – சோனி தேவி எனும் இளம் தம்பதி கடந்த 2017இல் திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு குழந்தை இல்லை. இதில் மனிஷ் ராம் மனைவி சோனி தேவி […]
திலீப் அளித்த பேட்டியில், மஞ்சு வாரியர் மீது எனக்கு கோபம், விரோதம் இல்லை. பொருத்தமான கதை அமைந்தால் அவருடன் சேர்ந்து நடிப்பேன் என கூறினார். திலீப் கனவில் வேண்டுமானால் என்னுடன் நடிக்கலாம்.ஆனால் நிஜத்தில் அது நடக்கவே நடக்காது அவருடன் நடிக்க மாட்டேன் என கூறினர். மலையாளத்தில் மஞ்சுவாரியர் முன்னணி நடிகைகளில் ஒருவர்.இவர் சமீபத்தில் தமிழில்நடித்த “அசுரன் “திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.கடந்த 1998-ம் ஆண்டு நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மீனாட்சி என்ற […]
சமீபத்தில் நடந்த கலாட்டா நட்சத்திர விருது விழாவில் பேசிய திவ்யதர்ஷினி பெண்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் , தனது வாழ்வில் நடந்த சில நிகழ்வுகளை பேசினார். அப்போதுநம் வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஏன் கல்யாணமான உறவு கூட முறியலாம், வேறு எந்த உறவுகள் வேண்டுமானாலும் தள்ளி போகலாம்என கூறினார். சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி என்றால் அது திவ்யதர்ஷினி தான். இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. டிடி தனது நண்பரான ஸ்ரீகாந்தை கடந்த 2014-ம் ஆண்டு […]
மதுரை திருநகரை சார்ந்தவர் வேலுசாமி( 82) இவரது மனைவி கஸ்தூரி. வேலுச்சாமி வேளாண்மை துறை அலுவலகத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். இந்த தம்பதிகளுக்கு கடந்த 1962-ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாலையம்பட்டியில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் மதுரை குடும்ப நல நீதிமன்றத்தில் வேலுச்சாமி வழக்கு ஓன்று தொடுத்தார். அதில் கஸ்தூரியிடம் இருந்து விவாகரத்து கேட்டு வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை […]
நடிகர் மனோஜ் மஞ்சு பிரபலமான தெலுங்கு நடிகரும், ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரான நடிகர் மோகன் பாபுவின் மகனும் ஆவார். இவர் அதிகமாக தெலுங்கு படங்களில் தான் நடித்துள்ளார். இவர் 2015-ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான பிரணிதியை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால், மனோஜ் இதுகுறித்து எதுவும் பேசாமல் மௌனம் காத்து வந்தார். இதனையடுத்து தற்போது இவர் தாங்கள் […]
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள மாணிக்கம்பாளையத்தை சேர்ந்தவர் குமார்.இவர் எலெக்ட்ரிக் கடை வைத்துள்ளார். இவருக்கும் சாரதி என்பவருக்கும் கடந்த 14 வருடத்திற்கு முன் திருமணம் நடந்துள்ளது. திருமணமான அடுத்த ஒரு வருடத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் சாரதி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து உள்ளார். உறவினர்கள் பேசியும் சராதி சமாதானம் ஆகவில்லை. இந்நிலையில் குமார் யாருக்கும் தெரியாமல் கடந்த 3 வருடங்களுக்கு […]
புவியில் மனிதராய் பிறந்த எல்லோரின் வாழ்விலும் முக்கியமான கட்டமாக திகழ்வது திருமணம் எனும் விஷயமாகும்; பலரின் வாழ்வு மாறிப்போவது இந்த ஒரு தருணத்தில் தான். திருமணம் எனும் பந்தத்தில் இணையும் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் வாழ்க்கை முழுதும் துணையாய் இருந்து, வாழ்ந்து வாழ்வில் நிறைவு பெறுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு விஷயம் இது. இத்திருமண உறவில் ஏற்படும் எல்லா பிரச்சனைகளையும் போக்க உதவும் ஒரு எளிய வழி பற்றி இங்கு படித்து அறியலாம். திருமண உறவு திருமண உறவில் […]
பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு அல்லது காதலால் திருமண உறவில் இணையும் தம்பதியர்களும் சரி, காதல் உறவில் இருக்கும் காதலர்களும் சரி தங்களுக்குள் ஒருவரை ஒருவர் அடிக்கடி சீண்டி கிண்டல் செய்து கொள்வர். அப்படி ஜோடிகள் புரியும் சீண்டல் கேலிகள் பல மனமுதிர்ச்சி இல்லாத நபர்களின் வாழ்வில் பெரும் ஊடலை விளைவித்து அவர்களுடைய உறவையே உருக்குலைத்துள்ளது; ஆனால் ஜோடிகள் நல்ல மனமுதிர்ச்சி மற்றும் புரிதல் உடன் இருந்தால் இந்த சீண்டல்கள் அவர்களுக்கு நல்ல பலன்களைத் தருகிறது. இந்த பதிப்பில் தம்பதியர் […]
உச்சநீதிமன்றம் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, 6 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்ற சட்டவிதியை தளர்த்தி, ஒரு தம்பதிக்கு விவாகரத்து வழங்கியுள்ளது. டெல்லியில் 2016ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்ட அந்த தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நண்பர்களாக பிரிந்து விடுவது என்று இருவரும் புத்தி சுவாதீனத்தோடு முடிவு எடுத்திருக்கிறார்கள் என்பதை ஏற்பதாக கூறி, விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 142ஆவது பிரிவு வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, நீதிபதிகள் குரியன் ஜோசஃப், எஸ்.கே.கவுல் […]