அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், தன் மீது பொய் வழக்கு போடப்பட்டதாகக் கூறியும், தனது இடத்தில் இயங்கும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டார். நாகர்கோவில் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ வான நாஞ்சில் முருகேசன், தற்போது அக்கட்சியின் எந்த பொறுப்பிலும் இல்லை. ஒழுகினசேரியில் இவருக்கு சொந்தமான இடத்தில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்குகிறது. அங்குள்ள பாரை முருகேசன் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு டாஸ்மாக் நேரம் முடிந்த பின் விற்பனை நடந்ததாகவும், போலி மதுவகைகள் […]