சுகாதாரத்துறை செயலாளர் தகவலை மாற்றி கூறியதாக இணையத்தில் அவதூறு பரப்பிய அடையாள தெரியாத நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர் சந்திப்பின் போது கொரோனாவுக்கு பாதிக்கப்பட்ட முதல் நபர் பிப்ரவரி மாதமே கண்டறியப்பட்டதாகவும், மற்றொரு முறை மார்ச் மாதத்தில் முதல் நபர் வந்ததாக மாற்றி கூறினார் என்று அடையாளம் தெரியாத நபர்கள் வீடியோ வெளியிட்டு சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பரப்பியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் […]
ஜம்மு-காஷ்மீரில் அரசு உத்தரவை மீறி விபிஎன் மூலம் இணையத்தில் தவறான தகவல்களை பதிவிட்ட நபர்கள் மீது காஷ்மீர் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது எந்த அசபாவிதங்களும் நடைபெறாமல் இருக்கு அங்கு செல்போன் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டது. ஆனால் தற்போது அங்கு அசபாவிதங்கள் குறைந்ததால் இணையதள சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதில் அரசால் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட சில சமூக வலைதள பக்கங்களை பயன்படுத்த மட்டுமே மக்களுக்கு அனுமதி […]