மனிதனின் வரலாற்றை கொண்டு தாம் தீர்ப்பு வழங்குவதில்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார். நாளையுடன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் பிரிவு உபசார விழா நடைபெற்றது.இதில் பேசிய மனிதனின் வரலாற்றை கொண்டு தாம் தீர்ப்பு வழங்குவதில்லை என்றும், அவர்களது நடவடிக்கைகளை பொறுத்தே தமது தீர்ப்பு அமையும்.அதேபோல் தீர்ப்பு வழங்கும்போது பணக்காரன், ஏழை என தான் பார்ப்பதில்லை என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.