#BREAKING: பண்டிகை கொண்டாட்டம் – கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு உத்தரவு!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட தமிழக அரசு அனுமதி மறுப்பு. தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 15-ஆம் தேதி வரை நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கில் பல்வேறு பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள கொரோனா பரவக் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சமய விழாக்களை முன்னிட்டு மதசார்பான ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்த தடை உள்ளது. தமிழ்நாட்டில் வருகிற 15ம் தேதி வரை கொண்டாடப்படவுள்ள சமய … Read more

#Breaking:மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு…! இவற்றிற்கெல்லாம் தொடர்ந்து தடை…?

தமிழகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பரவலைக் கட்டுப்படுத்த கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில்,நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 12-7-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தின் கொரோனா நோய்த் தொற்று நிலையைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு 12-7-2021 முதல் 19-7-2021 காலை 6.00 மணி வரை தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.அதன்படி, மாநிலங்களுக்கிடையே தனியார் … Read more

#BREAKING: தமிழகத்தில் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கில் ஒரு சில தளர்வுகளும் அளிக்கப்பட்டது. ஆனாலும், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோன பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் அங்கு முழு ஊரடங்கு  இன்று இரவு  வரை அமலில் உள்ளது. ஏற்கனவே தளர்வுகளுடன் கூடிய 5-ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், தமிழகத்தில்  ஜூலை மாதம் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு … Read more

சென்னையை தவிர பிற மாவட்டங்களில் என்னென்ன தளர்வுகள்.? – தமிழக அரசு அறிவிப்பு.!

தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் இன்றுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கு ஜூன் 30 ஆம் தேதி வரை நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசின் அறிவித்து, அதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இந்த நிலையில் மத்திய அரசு அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் 5 ஆம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 30 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, … Read more

#Breaking: நாடு முழுவதும் ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிப்பு – மத்திய அரசு.!

நாடு முழுவதும் ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் 4 கட்டங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த 4 ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைய இருக்கும் நிலையில், ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜூன் 1 தேதி முதல் 30 தேதி வரை படிப்படியாக தளர்வுகளுக்கான அறிபவிப்புகள் UNLOCK 1.0 என்று … Read more

ஊரடங்கு நீட்டிப்பு? – மருத்துவ நிபுணர்களுடன் மீண்டும் இன்று முதல்வர் ஆலோசனை

மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக்கு பின் பொதுமுடக்கம் நீட்டிப்பு பற்றி அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் பொதுமுடக்கம் நாளையுடன் முடிவடைய இருக்கும் நிலையில், மருத்துவ நிபுணர்களுடன் இன்று மீண்டும் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக்கு பின் பொதுமுடக்கம் நீட்டிப்பு பற்றி அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியர்களுடன் நேற்று ஆலோசனை நடத்திய நிலையில், இன்று மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.  இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுமுடக்கம் நீடிக்கப்படலாமா? நீட்டித்தால் … Read more

மாஸ்கோவில் மே 31 வரை ஊரடங்கு  நீட்டிப்பு.!

மாஸ்கோவில் மே 31 வரை ஊரடங்கு  நீட்டிக்கப்பட்டுள்ளன என மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியான் தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் கொரோனா வைரசால் 177,160 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1,625 பேர் உயிரிழந்து உள்ளனர்.இன்று மட்டும் 88பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில்,  ரஷ்யாவின்  தலைநகர்  மாஸ்கோவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மே 31 வரை ஊரடங்கு  நீட்டிக்கப்பட்டுள்ளன என்று மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியான் தெரிவித்தார். மே  12 பிறகு நடைமுறையில் உள்ள சில நடவடிக்கைகளுக்கு தளர்வு கொடுக்கப்படும் என … Read more

உருப்படியான நிவாரணத் திட்டம் அறிவிக்காதது அதிர்ச்சியளிக்கிறது – திருமாவளவன் அறிக்கை

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உருப்படியான நிவாரணத் திட்டம் அறிவிக்காதது அதிர்ச்சி அளிக்கிறது என்றும் முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்களுக்கும் வெளிமாநிலங்களைச்சார்ந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் போதிய நிவாரண அறிவிப்பை விரைந்து அறிவிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் அறிக்கையில், தமிழக முதல்வரின் அறிவிப்பில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மீண்டும் ரூ.1,000 வழங்கப்படும் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு மே மாதத்திற்கான … Read more

நாளை விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் – பிரதமர் மோடி

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு இன்றுடன் நிறைவு பெறுவதாக இருந்ததது. இந்த ஊரடங்கை நீட்டிக்க கோரி பல்வேறு மாநில முதல்வர்களும், மருத்துவ நிபுணர்களும் அரசிடம் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் பிரதமர் மோடி கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு நீடிப்பது தொடர்பாக நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது, கொரோனாவை ஒழிக்க நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து போராடி வருகிறோம் என்றும் ஊரடங்கு உத்தரவால் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டதை என்னால் … Read more

#LIVE : மக்களின் சிரமத்தை உணர்கிறேன் – பிரதமர் மோடியின் உரை.!

ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடையும் நிலையில், தற்போது பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது. இதனிடையே ஒடிஷா, பஞ்சாப் மஹாராஷ்டிரா, தமிழகம், புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கபட்டுள்ளது. எனவே ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடையும் நிலையில், கொரோனாவை தடுக்க ஊரடங்கு நீடிப்பது தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். கொரோனாவை ஒழிக்க … Read more