ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் எவ்வித பாதுகாப்பு குறைபாடும் இல்லை – சிபிஆர்எஃப்

ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை நடை பயணம் போது பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாக கூறும் காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு CRPF மறுப்பு தெரிவித்துள்ளது.  டிசம்பர் 24ம் தேதி டெல்லியில் நடைபெற்ற ஒற்றுமை யாத்திரையின் போது, ராகுல் காந்தி நடை பயணத்தில் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டதாக காங்கிரஸ் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதுகுறித்து CRPF தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை நடை பயணம் போது பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாக கூறும் காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு … Read more

மோசமான செயல்…தொடர்ந்து ஹிந்தியில் பேசுறாங்க..செம கடுப்பான சித்தார்த்.!

பிரபல நடிகர் சித்தார்த் நேற்று தந்து இன்ஸ்டா கிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அந்த பதிவில் ” நேற்று நானும் என்னுடைய பெற்றோர்களும் மதுரை விமான நிலையத்தில் ‘CRPF’ அதிகாரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்கு ஆளானோம். அங்கிருந்த ‘CRPF’  அதிகாரிகள் என்னுடைய பெற்றோர்களிடம் பையிலிருக்கும் நாணயங்களை எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அவர்கள் முழுக்க முழுக்க ஹிந்தியில் தான் பேசினார்கள். நான் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று கூறினேன். அவர்கள் அதெல்லாம் கேட்காமல் தொடர்ந்து … Read more

#Breaking:குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந் சின்காவுக்கு ‘Z ‘ பிரிவு பாதுகாப்பு!

எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந் சின்காவுக்கு,மத்திய அரசு ‘Z’ பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்தியாவின் 15 வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற நிலையில்,அவரின் பதவிக்காலம் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இதனால்,அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுவுள்ளது. இதனை முன்னிட்டு,குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பாஜக சார்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் … Read more

தமிழகத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் உயிரிழப்பு!

சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் உயிரிழப்பு. ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரில் ஏற்பட்ட சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் உயிரிழந்துள்ளார் என தகவல் கூறப்படுகிறது. உயிரிழந்த எம்என் மணி திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே, உள்ள அதிமஞ்சரைப்பேட்டையை சேர்த்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது. தமிழக வீரர் எம்என் மணி உள்பட சிஆர்பிஎப் வீரர்கள் 12 சென்ற பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. ஹைடர்போரா என்ற இடத்தில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த வீரர் மணி … Read more

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் காயம்..!

காஷ்மீரின் ஷோபியான் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் காயமடைந்தார். தெற்கு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் ஜைனாபோரா கிராமத்தின் கிரால் செக் பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது இன்று காலை நான்கு பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு சிஆர்பிஎஃப் வீரர்  காயமடைந்தார். இந்த தாக்குதலில் 178 பட்டாலியனைச் சேர்ந்த கான்ஸ்டபிள் அஜய் குமார் காயமடைந்தார். காயமடைந்தவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதை அடுத்து, படையினரும் … Read more

சிஆர்பிஎஃப் உதவி கமாண்டன்ட் காலியிடத்திற்கு விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாள்..!

சிஆர்பிஎஃப் உதவி கமாண்டன்ட் காலியிடத்திற்கு விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாள், தகுதியும் ஆர்வமுமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சிபிஆர்எஃப் உதவி கமாண்டன்ட் 2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு செயல் முறையை மத்திய ரிசர்வ் போலீஸ் படை கடந்த ஜூன் 23ஆம் தேதி தொடங்கியது. இன்றுடன் சிபிஆர்எஃப்  விண்ணப்பிக்கும் செயல்முறை மூடப்பட உள்ளது. எனவே தகுதியானவர்கள் மற்றும் விருப்பமுள்ளவர்கள் crpf.gov.in எனும் இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த சிபிஆர்எஃப் பணிக்கான ஆட்சேர்ப்பு செயல்முறையில் உடல் தர சோதனை, எழுத்துத்தேர்வு, விரிவான … Read more

மரத்தில் தொங்கிய நிலையில் சிஆர்பிஎப் வீரர் உடல் !

மத்திய பிரதேசத்தில் சிஆர்பிஎப் வீரர் உடல் மரத்தில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட நிலையில் ,அவர் தற்கொலை செய்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் காந்த்லா பகுதியில்  சி.ஆர்.பி.எப் வீரரான ராஜீவ் பணியில் இருந்து விடுப்பில் இருந்து வந்துள்ளார். ஐந்து நாட்களுக்கு முன்பு காந்த்லா பகுதியில் உள்ள தனது சொந்த ஊரிற்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் கடந்த சனிக்கிழமை மாலை ஒரு மரத்தில் தூக்கில் தொங்கியபடி அவர் உடல் மீட்கப்பட்டது.இதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை ‘என்று  காவல்துறை ஒரு … Read more

காஷ்மீரில் கையெறி குண்டு தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர் காயம்..!

தெற்கு காஷ்மீர் மாவட்டமான அனந்த்நாக் நகரில் இன்று தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர் ஒருவர் காயமடைந்தார். இன்று அனந்த்நாக் பிஜ்பெஹாரா மருத்துவமனைக்கு அருகே பாதுகாப்பு படையினர் மீது அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசினர். இந்த தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர் 40-வது பட்டாலியனைச் சேர்ந்த பாட்டீல் பர்மகர் என்பவர் காயமடைந்தார், காயமடைந்தவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். குண்டுவெடிப்பு போது ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக தீவிரவாதிகள் … Read more

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர் காயம்..!

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கங்கூ அருகே இன்று காலை பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்த சிஆர்பிஎஃப் வீரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பயங்கரவாதிகள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தற்போது தெரியவில்லை.

#BREAKING: பயங்கரவாதிகள் தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட சிஆர்பிஎஃப் வீரர் உயிரிழப்பு.!

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பிஜ்பெஹாரா பகுதியில் நெடுஞ்சாலை பாதுகாப்பில் இருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் இன்று  திடீர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.  சிஆர்பிஎஃப் மீதான பயங்கரவாத தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட ஒரு  சிஆர்பிஎஃப் வீரர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து , இவர்களை பிஜ்பெஹாரா மருத்துவமனையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த குழந்தைக்கு ஆறு வயது என கூறப்படுகிறது. இதற்கிடையில், புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோராவின் டிரால் பகுதியில் … Read more