சிபிஐ சோதனை நடத்தப் போவது குறித்து தமிழக உளவுத்துறை அதிகாரிகளால் முன்கூட்டியே கண்டுபிடிக்க முடிய வில்லை. இதனால் உளவுத் துறையின் தலைமை அதிகாரியை, அவருக்கு மேலுள்ள அதிகாரியும் அரசியல்வாதி ஒருவரும் கூப்பிட்டு கண்டித்துள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன. இதனால் மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் இருப்பதற்காக சிபிஐயின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணியில் தமிழக உளவுத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குட்கா விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனையை தொடர்ந்து, முன்னாள் காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் […]