தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பது குறித்து முதலமைச்சர் தலைமையில் நாளை நடைபெறும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 3-ம் தேதி முதல் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்ற அறிவிப்பும் வெளியானது. அதற்கான செய்முறை தேர்வுகள் வரும் 16-ம் தேதி […]
சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு 1,500-ஐ கடந்துள்ள நிலையில், அனைத்து வார்டுகளிலும் சிறப்பு காய்ச்சல் முகாம்களை அதிகரிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. அந்தவகையில் நான் ஒன்றுக்கு 3,500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் அதிகபட்சமாக சென்னையில் தினசரி பாதிப்பு 1,500-ஐ கடந்துள்ளது. இதன்காரணமாக சென்னையில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், […]
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,000-ஐ நெருங்குகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை வீச தொடங்கியது. அந்தவகையில் இன்று கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 4,000-ஐ நெருங்கவுள்ளது. இன்று ஒரே நாளில் 80,535 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டத்தில், 3,972 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக 9,11,110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,459 பேருக்கு தொற்று […]
தமிழகத்தில் மேலும் 3,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,99,807 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்பொழுது கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. அந்தவகையில், இன்று ஒரே நாளில் 82,791 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டத்தில் 3,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,99,807 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 395 பேருக்கு தொற்று உறுதியானது. மேலும், 1,344 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு […]
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து, முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு என்று வீண் வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் தற்பொழுது கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இதன்காரணமாக பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டு, கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வுகளை மேற்கொண்டபின் செய்தியாளர்களை சந்தித்தார். […]