சாதியும் வேண்டாம்,மதமும் வேண்டாம் ,கொரோனா போரில் வெற்றிமட்டுமே தேவை என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,நாம் அனைவரும் சாதி ,மதம் மற்றும் வர்க்க வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ,கொரோனவை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற பொதுவான நோக்கத்தோடு இந்தியராக ஒன்றுபடுவதற்கு வாய்ப்பு உள்ளது.இந்த எண்ணத்தின் முக்கிய மையம் இரக்கம், மற்றவர்கள் மீதான அக்கறை மற்றும் தியாகம் ஆகியவை ஆகும்.நாம் அனைவரும் ஒன்றாக இருந்து இந்த போரில் […]
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக டெல்லியில் உள்ள ஆரம்ப பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் சீனாவை அச்சுறுத்தி வருகிறது. சீனாவை மட்டும் அல்லாது உலகில் உள்ள பல நாடுகளையும் இந்த வைரஸ் அச்சுறுத்தி வருகிறது.இந்தியாவில் தற்போது வரை 30-பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக டெல்லியில் உள்ள ஆரம்ப பள்ளிகளுக்கு நாளை முதல் மார்ச் 31-ஆம் தேதிவரை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.