தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 461 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 461 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் இன்று 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 537 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று உயிரிழப்பு ஏதும் இல்லை. தமிழகம் முழுவதும் 5,339 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.