சென்னை : இந்திரா காந்தி போலவே ராகுல் காந்தியும் கொல்லப்படுவார் என்று பா.ஜ.க.வினர் மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், ஜனநாயக நாட்டில் மிரட்டல், வன்முறைக்கு இடமில்லை என்பதை மீண்டும் உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியும் இருக்கிறார். சமீபத்தில், எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியை குறித்து, பாஜக தலைவர் ஒருவர்,” அவரது பாட்டிக்கு நேர்ந்த கதி தான் அவருக்கும் நேரும் எனவும் அவரது நாக்கை வெட்டுபவர்களுக்கு 11 லட்சம் ரூபாய் […]
டெல்லி : கடந்த சில தினங்களுக்கு முன்னர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்களின் டெல்லி இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இல்லத்தில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்வில் பிரதமர் கலந்து கொண்டது பேசுபொருளாக மாறியது . இந்த சந்திப்பு குறித்து காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு மூத்த வழக்கறிஞர்களும் நாட்டின் பிரதமர், உச்சநீதிமன்ற நீதிபதி வீட்டிற்கு தனிப்பட்ட […]
சென்னை : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோவை வந்திருந்தார். அப்போது சிறுகுறு தொழிலதிபர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்வில் அன்னப்பூர்ணா சீனிவாசன், நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்தது முதல் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு வரையில் சமூக வலைதளத்தில் டாப் ட்ரெண்டில் இருக்கிறார் நிர்மலா சீதாராமன். ஸ்வீட் – காரம் : கடந்த சில தினங்களுக்கு முன்னர், கோவையில் நடைபெற்ற சிறுகுறு, நடுத்தர மற்றும் ஹோட்டல் தொழிலதிபர்கள் உடனான […]
சென்னை : கோவையில் நடைபெற்ற தொழிலதிபர்கள் நிகழ்வில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்னபூர்ணா சீனிவாசன், வெவ்வேறு உணவு பொருட்களின் மீது வெவ்வேறு ஜி.எஸ்.டி வரிகள் விதிக்கப்பட்டு வருகிறது எனக்கூறி அதனை முறைப்படுத்த வேண்டுமென கோரிக்கை வைத்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து , இன்று காலையில் கோவை நட்சத்திர ஹோட்டலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் , அன்னபூர்ணா சீனிவாசன் மன்னிப்பு கோரினார். இந்த நிகழ்வு தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகியானது. […]
டெல்லி : சர்வதேச ஒலிம்பிக் தொடரில் மல்யுத்த போட்டியில் குறிப்பிட்ட பிரிவின் கீழ் எடை கூடியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். உடன் மலியுத்த வீரர் பஜ்ரங் புனியாவும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஹரியானவை சேர்ந்த வினேஷ் போகத், ஹரியானா சட்டமன்ற தேர்தலில் ஜூலானா (Julana) தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக களமிறங்குகிறார். இவர் நேற்று தனது வேட்புமனுவை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் […]
அமெரிக்கா : காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி தற்போது அமெரிக்க பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறார். இவர் வாஷிங்டன்னில் உள்ள தேசிய பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று (செவ்வாய்) பேட்டியளித்து இருந்தார். அப்போது இந்திய அரசியல் விவகாரங்கள் குறித்து பல்வேறு கருத்துக்களை கூறினார். இந்தியா – சீனா விவகாரம் : அப்போது இந்தியா – சீனா எல்லை பிரச்சனை குறித்து பேசிய ராகுல் காந்தி , இந்திய எல்லைக்கு உட்பட்ட லடாக்கில் […]
அமெரிக்கா : காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தற்போது அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார். பின்னர், வாஷிங்டன் டிசியில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் நடந்த நேர்காணலில் பங்கேற்ற ராகுல் காந்தி, இந்திய அரசியல் பற்றி பல்வேறு கருத்துக்களை கூறினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி பற்றி கூறுகையில் , “பிரதமர் மோடியை நான் வெறுக்கவில்லை. ஆனால் அவர் கொண்டுள்ள கருத்தியலை நான் […]
டெல்லி : காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். டெக்சாஸ் மாகாணத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது பாஜக, பிரதமர் மோடி , ஆர்எஸ்எஸ் பற்றி தனது விமர்சனங்களை முன்வைத்தார். அவர் பேசுகையில், “இந்தியா என்பது ஒற்றை கருத்த்தை கொண்டு செயல்படுகிறது என ஆர்.எஸ்.எஸ் நம்புகிறது. இந்தியா பல்வேறு கருத்துக்களை கொண்டு செயல்படுகிறது நாங்கள் நம்புகிறோம். ஜாதி, மொழி, மதம், இனம் என வேறுபாடின்றி […]
டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வேட்பாளராக களமிறங்க உள்ளார் என நேற்று அறிவிக்கப்பட்டது. வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் தங்கள் விளையாட்டில் இருந்து விலகி முழுநேர அரசியலில் களமிறங்கியுள்ளனர். வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் நேற்று காங்கிரஸில் இணைந்தது குறித்தும், ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வினேஷ் போகத் களமிறங்கியது […]
டெல்லி : ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பாக இன்னும் ஹரியானா மாநில தேர்தலில் யார் போட்டியிட உள்ளனர் என்ற இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படாமல் இருக்கிறது. இப்படியான சூழலில் தான், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோர் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை அண்மையில் சந்தித்தனர். இதனால், ஹரியானா […]
டெல்லி : கடந்த ஒலிம்பிக் தொடரில் மல்யுத்த போட்டியில் இறுதி போட்டி வரை சென்று 100 கிராம் எடை கூடியதால் பதக்கத்தை இழந்தார் வினேஷ் போகத். பதக்கத்தை இழந்தாலும், இந்திய மக்கள் மத்தியில் பதக்கம் வென்ற வீராங்கனைக்கான வரவேற்ப்பை அவர் பெற்றார். பதக்கத்தை இழந்த வினேஷ் போகத், தன்னால் இதற்கு மேல் போராட வலிமையில்லை எனக் கூறி மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்பிறகு, வினேஷ் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் […]
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மாநிலத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது ஓய்வு நேரங்களில் முதல்வர், ஓட்டுனரில்லாத காரில் பயணிப்பது, சைக்கிள் ஓட்டுவது போன்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. சிகாகோ பயணத்தின் போது, அங்குள்ள சாலையில் மகிழ்ச்சியாக தனியே சைக்கிள் பயணம் செய்யும் வீடீயோவை தனது எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அந்த வீடியோவுக்கு பதிலளிக்கும் விதமாக காங்கிரஸ் இளம் […]
டெல்லி : ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் வரும் அக்டோபர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 90 சட்டமன்ற தொகுதிக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இங்கு கடந்த 2014 மற்றும் 2019 என கடந்த 2 தேர்தல்களிலும் வெற்றிபெற்று பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. கடந்த முறை கூட்டணி பலத்துடன் ஆட்சியை பிடித்த பாஜகவும், வெற்றிக்கு அருகாமை வரை வந்து ஆட்சியை கைப்பற்ற தவறிய காங்கிரசும் இந்த முறை பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் […]
டெல்லி : தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை சமயத்தில் மேற்கொண்ட தற்காப்புக் கலை பயிற்சி வீடியோவை காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது. ஹாக்கி விளையாட்டின் ஜாம்பவான் மறைந்த மேஜர் தியான் சந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 29 (இன்று) தேசிய விளையாட்டு தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. தேசிய விளையாட்டு தினமான இன்று காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் (டிவிட்டர்) சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடீயோவை பதிவிட்டுள்ளது. அதில், காங்கிரஸ் இளம் […]
டெல்லி : காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஒரு குழப்பம். இன்னும் அவர் தனது பாதையை தேர்ந்தெடுக்காமல் இருக்கிறார் என பாஜக எம்பி கங்கனா ரனாவத் கூறியுள்ளார். நடிகையும், பாஜக எம்.பியுமான கங்கனா ரனாவத் அவ்வபோது தனது சர்ச்சை கருத்துக்களால் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறிவிடுகிறார். சில சமயம் சொந்த கட்சியினரே அதிருப்தி தெரிவிக்கும் நிலையில் இவரது கருத்துக்கள் அமைந்து விடுகிறது. அண்மையில் கூட விவசாயிகள் போராட்டத்தை வங்கதேச கலவரத்துடன் ஒப்பிட்டு பேசி சொந்த கட்சி தலைமையே […]
டெல்லி : ஜம்மு காஷ்மீர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் என ஒரு லிஸ்டை இன்று காலை வெளியிட்ட பாஜக, அதனை சில நிமிடங்களில் திரும்ப பெற்றது. அண்மையில் இந்திய தேர்தல் ஆணையம் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை அறிவித்து. அதன்படி, ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் […]
டெல்லி : மத்திய அரசு பணிகளில் நேரடி நியமன முறைகளுக்கான விளம்பரங்களை ரத்து செய்ய வேண்டும் என மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் யுபிஎஸ்சிக்கு கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசுத்துறை உயர் பொறுப்புகளில் பெரும்பாலும் பணி அனுபவம் சார்ந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் படித்து ஏற்கனவே அரசு பொறுப்புகளில் இருப்பவர்கள் மட்டுமே நியமிக்கப்படுவது வழக்கம். இதனை மாற்றி மத்திய அரசு “லேட்டரல் என்ட்ரி” மூலம் தனியார் நிறுவனங்களில் உயர் பொறுப்பில் இருக்கும் நிபுணர்களை நேரடியாக ஒப்பந்த அடிப்படியில் இணை […]
டெல்லி : மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ் ஆகிய காங்கிரஸ் தலைவர்கள் ராஜீவ் காந்தியின் நினைவுகளைப் பகிர்ந்துள்ளனர். மறைந்த முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாள் இன்று (ஆகஸ்ட் 20) கொண்டாடப்படுகிறது. இந்திராகாந்தி மறைவுக்குப் பின்னர், 40 வயதில் இந்தியப் பிரதமராகவும் , காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பொறுப்பேற்றார் ராஜீவ் காந்தி. இவரது ஆட்சியில் தான் வாக்களிக்கும் வயது 18ஆக குறைக்கப்பட்டது. பஞ்சாயத்து ராஜ் திட்டம் ஆகிய முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ராகுல் காந்தி மரியாதை : ராஜீவ் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், ராஜீவ் […]
டெல்லி : அதானி நிறுவனத்தில் பெரும் அளவிலான பங்குகளை செபி தலைவர் வாங்கியுள்ளார் எனவும் அதனால் அதானி குழும விசாரணை முறையாக நடைபெறுமா எனவும் ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட பொருளாதார ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க், கடந்த வருடம், இந்தியப் பங்குச்சந்தை நிலவரம் பற்றி ஓர் அறிக்கை வெளியிட்டது. அதில், அதானி நிறுவனம் முறைகேடாக பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்து வருகிறது என்றும், போலியாக பல்வேறு நிறுவனங்களை உருவாக்கி, பங்குச்சந்தையில் முறைகேடாக வளர்ச்சியைக் காண்பித்து தங்கள் (அதானி) நிறுவனப் பங்குகளை உயர்த்தி பல்லாயிரம் கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்து வருவதாக குற்றச்சாட்டை முன்வைத்தது. ஹிண்டன்பர்க்கின் இப்படியான குற்றச்சாட்டுகள் இந்தியப் பங்குச்சந்தை மட்டுமல்லாமல் […]
சென்னை : சுதந்திர தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்து நிகழ்வை காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், திமுகவின் நிலைபாடு என்ன என்பது கேள்விக் குறியாக உள்ளது. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் 78-வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில், தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படும் சுதந்திர தின விழா சென்னை ஜார்ஜ் கோட்டையில் வைத்து நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாட்டுப் […]