பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அரும்பாக்கத்தில் பேருந்து ஒன்றில் பட்டாக்கத்தியுடன் மாணவர்கள் மோதி கொண்டனர்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சென்னை காவல் இணை ஆணையர் சுதாகர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், மாணவர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் பட்சத்தில் தேவைப்பட்டால் குண்டர் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை அவர்களை மாணவர்கள் என்ற கோணத்தில் தான் நடவடிக்கை எடுத்துள்ளோம், இது தொடரும் பட்சத்தில் மாணவராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சிறையில் அடைக்கப்பட்டால் மாணவர்களின் எதிர்காலமே பாதிக்கப்படும் […]