#Breaking: எடப்பாடி தொகுதியில் தனது வாக்கை செலுத்தினார் முதல்வர் பழனிசாமி!

முதல்வர் பழனிசாமி, சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று, தனது வாக்கை செலுத்தினார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் மக்கள் சிரமமின்று வாக்களிக்க 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை முதலே பொதுமக்கள் பலரும் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். சில இடங்களில் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கிய நிலையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த நிலை … Read more

நடமாடும் அம்மா உணவகங்களை தலைமைச் செயலகத்தில் தொடங்கிவைத்தார் முதல்வர் பழனிசாமி.!

சென்னை மாநகராட்சியில் நடமாடும் அம்மா உணவகங்களை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.  இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள நடமாடும் அம்மா உணவகங்களின் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச்செயலகத்திலிருந்து தொடங்கி வைத்துள்ளார். அதன்படி, வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னைக்காக 3 நடமாடும் அம்மா உணவகங்களை தொடங்கி வைத்தார். மேலும், நாளடைவில் சென்னையில் ஒவ்வொரு மண்டலத்திலும் நடமாடும் அம்மா உணவகங்களை தொடங்க திட்டமிட்டுள்ளார்.

வடகிழக்கு பருவமழை – முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வருகின்ற 12-ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனிடையே அக்டோபர் மாதம் 3-ஆம் வாரம் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.வடகிழக்கு பருவமழை  தொடங்கவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக வரும் 12-ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.முதலமைச்சருடனான ஆலோசனையில் தலைமை செயலாளர் சண்முகம்,அமைச்சர்கள்,சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க … Read more

குழம்பிப் போய் நிற்கிறார் இபிஎஸ் பாவம் என்ன செய்ய?? ஸ்டாலின் கிண்டல்

இன்று நடைபெற இருந்த கிராமசபைக் கூட்டங்களை ரத்து செய்ததற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: இன்று நடைபெற இருந்த கிராமசபைக் கூட்டங்களை அரசு ரத்து செய்துள்ளது.ஆனால்திட்டமிட்டபடி திமுக ஊராட்சி மன்றத் தலைவர்கள் மக்களைச் சந்திப்பார்கள் என்று கூறிய அவர் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற நிலையை போல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுவதாக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில் உள்கட்சிப் பிரச்சினைகளின் உச்சாணிக் கொம்பில் இருந்து … Read more

குடியரசு தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர் பழனிசாமி!

இன்று தனது 75 ஆம் பிறந்தநாளை கொண்டாடும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்க்கு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்துக்கள் தெரிவித்தார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், இன்று தனது 75 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரின் பிறந்த நாள் கொண்டாடும் வகையாக, பல்வேறு தலைவர்கள் தங்களின் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தமிழக முதல்வர் பழனிசாமி, இன்று பிறந்தநாள் கொண்டாடும் குடியரசு தலைவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் எனவும், இன்னும் பல ஆண்டுகளுக்கு உடல்நலத்துடன் நாட்டிற்கு சேவை … Read more

“நீட் விவகாரத்தில் மாணவர்கள் தற்கொலைக்கு காரணம் முதல்வர் பழனிசாமிதான்!”- மு.க.ஸ்டாலின்.

நீட் விவகாரத்தில் மாணவர்கள் தற்கொலைக்கு காரணம் முதல்வர் பழனிசாமிதான் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, நாடு முழுவதும் நடந்தது. இதற்கு இடையில் தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் இதுவரை 13 பேர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில், 13 மாணவர்கள் மரணத்திற்கு திமுக தான் காரணம் என சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அதற்கு பதிலளிக்கும் விதமாக, சென்னை தேனாம்பேட்டை … Read more

சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி – முதல்வர் பழனிசாமி!

ஈரோடு மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி  வழங்கவுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகேயுள்ள புதுவலசு எனும் இடத்தில் கடந்த 3- ஆம் தேதி சிவகிரியிலிருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, எதிரே வந்த இரண்டு இரு சக்கர வாகனங்களும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குளூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகள் மோகம்புரி, அவருடைய மனைவி திருமதி பொங்கி … Read more

முதலமைச்சர் பழனிசாமி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆய்வு

இன்று முதலமைச்சர் பழனிசாமி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பே அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதனிடையே தமிழக முதலமைச்சர் பழனிசாமி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மாவட்ட ஆட்சியர்கள் ,அதிகாரிகளிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.மேலும் திட்டங்களையும் தொடங்கி வைத்து வருகிறார்.இந்நிலையில் இன்று முதலமைச்சர் பழனிசாமி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.மாவட்ட வளர்ச்சி பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, மாவட்ட … Read more

பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு தந்தால் கொரோனா குறையும் – முதலமைச்சர் பழனிசாமி

பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு தந்தால் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறையும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு, வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சேலத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை  மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில், பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு தந்தால் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறையும். கொரோனா காலத்திலும் நலத்திட்ட பணிகள் தொய்வின்றி நடைபெறுகின்றன. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் மூலம் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது. கொரோனா தொற்று குறைய, குறைய தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றது.மாநகராட்சிகளிலும் சிறிய … Read more

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்க அரசு பரீசீலனை-முதல்வர் பழனிசாமி

நாகையில் புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி.இதன் பின்னர் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,  நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்க அரசு பரீசீலனை செய்து வருகிறது.துரிதமாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.