சற்றுநேரத்தில் முதல்வரை சந்திக்கிறார் தலைமை செயலர்!!

சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் சற்று நேரத்தில் சந்திக்கவுள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை, தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன், சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் இன்னும் சற்று நேரத்தில் சந்திக்க உள்ளனர். கொரோனா குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசித்த விவரங்கள் பற்றி முதல்வரிடம் எடுத்துரைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

#BREAKING: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்.!

போதிய அளவு கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகத்தில் தினசரி 2 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில், கையிருப்பு வைக்கக்கூடிய வகையில் 20 லட்சம் டோஸ் தடுப்பூசியை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று முதல்வர் பிரதமருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். தினமும் 2 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த திட்டம் உள்ளதால், குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு தேவையான தடுப்பூசியை அனுப்புங்கள் என கோரிக்கை வைத்துள்ளார். உயிர் காக்கும் ரெம்டெசிவர் மருந்துகள் … Read more

கொத்துக் கொத்தாக மக்கள் மடிந்து வருகையில் மயில்களுக்கு உணவளித்துக் கொண்டிருக்கிறார் மோடி – கே.எஸ்.அழகிரி

கொரோனாவால் கொத்துக் கொத்தாக மக்கள் மடிந்து வருகையில் மயில்களுக்கு உணவளித்துக் கொண்டிருக்கிறார் மோடி என கேஎஸ் அழகிரி விமர்சனம். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கோவிட் உதவி மையத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி தொடங்கி வைத்தார். இதன்பின் பேசிய அவர், கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி அரசுகள் படுதோல்வி அடைந்துள்ளன என குற்றசாட்டியுள்ளார். கொரோனாவால் கொத்துக் கொத்தாக மக்கள் மடிந்து வருகையில் மயில்களுக்கு உணவளித்துக் கொண்டிருக்கிறார் … Read more

சீதையை மீட்டெடுத்த அனுமனைப் போல தமிழர்களை காப்பாற்ற நாங்கள் இருக்கிறோம் – இபிஎஸ், ஓபிஎஸ்!

நாட்டை கெடுப்பவர்கள் ஆட்சி அமைந்துவிடாமல், ஜெயலலிதாவின் வழியில் ஆட்சி தொடரட்டும் என முதல்வர், துணை முதல்வர் அறிக்கை. தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக, மநீம, அமமுக கூட்டணிகள், நாம் தமிழர் கட்சி என 5 முனை போட்டியாக களம் காண்கின்றனர். தேர்தல் பரப்புரையில் இறுதி நாளான இன்று அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அனல்பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்ட நிலையில், தேர்தலுக்கான பரப்புரை நிறைவு பெற்றது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனிடையே, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் … Read more

ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் வெல்ல முடியாது – முதல்வர் பழனிசாமி

திமுக வெற்றி பெறும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் பகல் கனவு கண்டுகொண்டியிருக்கிறார் என முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார். கோவையில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய முதல்வர், 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் பகல் கனவு கண்டுகொண்டு இருக்கிறார் என விமர்சித்தார். கோவை மாவட்டமே இங்கு குவிந்துள்ளதை பாருங்கள் … Read more

விவாதத்திற்கு தயார்…மக்களே நீதிபதி, அவர்களே தீர்ப்பு வழங்கட்டும் – முதல்வர் பழனிசாமி சவால்

சிறப்பான ஆட்சி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு தமிழக அரசு முன்மாதிரியாக திகழ்வதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து, பரப்புரை மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி, சிறப்பான ஆட்சி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு தமிழக அரசு முன்மாதிரியாக திகழ்கிறது என்றும் சட்ட – ஒழுங்கை சிறப்பாக நிர்வகிக்கக்கூடிய முதல் மாநிலம் எனவும் கூறியுள்ளார். திமுக ஆட்சியில் என்ன செய்தார்கள்? எதும் கிடையாது. நாட்டு மக்களையும் பார்க்கவில்லை, அரசாங்கத்தையும் … Read more

ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது… போனில் வாழ்த்து தெரிவித்த முதல்வர் பழனிசாமி.!

தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள ரஜினிக்கு முதல்வர் பழனிசாமி தொலைபேசியில் மூலம் பாராட்டு. நடிகர் ரஜினிகாந்த்திற்கு இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு சற்றுமுன் அறிவித்திருந்தது. நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளராக ரஜினியின் பங்களிப்பிற்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள ரஜினிக்கு முதல்வர் பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தாக கூறப்படுகிறது. தங்களது நடிப்பு … Read more

அவருக்கு அவருடைய கவலை… முதல்வர் என்ன சொல்ல போகிறார்? – ப.சிதம்பரம் கேள்வி

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு குறித்து காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக அரசு கடந்த சட்டமன்றத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஓதுக்கீடு வழங்கியதை அடுத்து, ஒருபக்கம் சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்திய பிறகே உள் ஒதுக்கீடு செய்யவேண்டும் என எதிர்ப்பு தெரிவித்தாலும், மறுபக்கம் இது தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. அதாவது, சமீபத்தில் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு அளித்திருப்பது இறுதியானது … Read more

அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்கள் – முதலமைச்சர் பழனிசாமி

அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்கள் என தாராபுரம் பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தாராபுரம் பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உலக அளவில் இந்தியாவின் பெருமையை உயர்த்திப் பிடித்தவர் பிரதமர் மோடி என்றும் தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை எல்லாம் கொடுத்து கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு எனவும் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் உழைப்பால் உலக அரங்கில் இந்தியா உயர்ந்து நிற்கிறது எனவும் புகழ்ந்துள்ளார். இந்தியாவை வல்லரசாக்கும் கனவை நிறைவேற்றி வருகிறார் பிரதமர் … Read more

தாராபுரம் பிரச்சார பொதுக்கூட்டம் மேடையில் பிரதமர் மோடி.!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார்.  கேரளாவில் பாலக்காடு தேர்தல் பிரச்சாரத்தை முடித்த பின், பிரதமர் மோடி திருப்பூர் மாவட்டம் தாராப்புரத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்தடைந்தார். உடுமலைப்பேட்டை சாலையில் உள்ள அமராவதி திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. பாஜக மாநில தலைவர் எல் முருகனை பிரதமர் மோடியை வெற்றி வேல், வீர வேல் என முழக்கத்துடன் வரவேற்றார். இந்த பொதுக்கூட்டம் தேசிய முற்போக்கு … Read more