சென்னை : 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் தொடங்கிய நிலையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றனர். பின், மக்கள் செலுத்திய வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி 600 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 70 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவையில் பெரும்பான்மையைப் பெற்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் […]
சென்னை : இரண்டு நாள் அரசு முறை பயணமாக நெல்லை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று 2வது நாளாக கள ஆய்வில் ஈடுபடுகிறார். பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை மைதானத்தில் நடைபெறும் விழாவில் 75,151 பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கி, பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். சென்னையில் அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம், சோத்துப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலையில் கடும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளது. […]
சென்னை : தமிழகம் முழுவதும் 9 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 36 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் நா.முருகானந்தம் வெளியிட்டார். இந்நிலையில், இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இந்தச் சந்திப்பின்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புதிய மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் உரையாற்றிய போது, இன்று முதல் மக்களுடன் நேரடி தொடர்பில் […]
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. நாளை (9ஆம் தேதி) முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் தொகுப்பு வழங்கவிருக்கிறது. காலை, மதியம் என தனித்தனியாக டோக்கனில் விநியோகிக்கப்பட்ட தேதிகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. அதாவது, நாளை (9ஆம் தேதி) முதல் 12ஆம் தேதி வரை டோக்கனில் குறிப்பிடப்பட்ட எண்களுக்கும், 13ஆம் தேதி விடுபட்ட அனைவருக்கும் வழங்க உள்ளது. இந்நிலையில், ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு […]
சென்னை: வடசென்னை உயர்கல்வித்துறை சார்பில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில், ரூ.1,383 கோடி மதிப்பீட்டில் 79 புதிய திட்டப் பணிகளை துவக்கி வைத்து, 29 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர், விழா மேடையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ” விடியலை தருவது தான் உதயசூரியன், சூரியனை பார்த்தால் கண் கூசுபவர்களுக்கு விடியல் தெரியாது. மெட்ராஸ் என்கிற பெயரை சென்னை என மாற்றியவர் கருணாநிதி, சென்னையின் அடையாளங்களை உருவாக்கியது” என்று கூறினார். தொடர்ந்து பேசிய […]
சென்னை: சென்னையில் ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது, தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் செல்வி நகர், GKM காலனி உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். இதனையடுத்து, கொளத்தூர், பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு, அங்கு சிகிச்சை பெரும் நோயாளிகளிடம் நலன் விசாரித்தார். இந்த ஆய்வின் போது அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். கொளத்தூரில் […]
சென்னை : அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாற்றுத்திறனாளிகளை குறித்து சர்ச்சைக்குரிய பேச்சை மேற்கொண்ட மகா விஷ்ணுவை போலீசார் கைது செய்ததோடு, அவரிடம் தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர். இவரது கருத்துக்கு பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், சிலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், திரைப்பட இயக்குனர் அமீர் இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக அரசை பாராட்டியும், திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் அறிமுக விழாக்களை கல்வி நிறுவன வளாகங்களில் நடத்த அரசு தடை […]
CM Stalin: தன்னுடைய பணிகள் மூலம் நம் உள்ளங்களை பெற்றுள்ளார் செந்தில் பாலாஜி என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு. மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஈரோடுக்கு வந்த நிலையில் இன்று ஈரோடு திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசும் போது, “செந்தில் பாலாஜி இங்கு இல்லை என்றாலும் தன்னுடைய பணிகள் மூலம் நம் உள்ளங்களை பெற்றுள்ளார், அவருக்கு நன்றிகள். நல்ல விமர்சனம் வைத்தால் அதை மாற்றலாம். ஆனால் வேண்டுமென்றே […]
M.K.Stalin: மாநில அரசு எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு தமிழ்நாடு தான் எடுத்துக்காட்டு. மத்திய அரசு எப்படிச் செயல்படக்கூடாது என்பதற்கு பாஜக தான் எடுத்துக்காட்டு என முதல்வர் பேச்சு. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து […]
M.K.Stalin: மோடி வடிக்கும் கண்ணீரை அவர் கண்களே நம்பாது என முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதி தராத மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என நாங்குநேரியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று திருநெல்வேலியின் நாங்குனேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கன்னியாகுமரி, நெல்லை வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். அவர் பேசும் போது, “நீங்கள் அளிக்கிற வாக்குதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக ஒரு […]
M.K.Stalin: மக்களவை தேர்தலுக்கான பரப்புரையில் ஈடுபட்டு வரும் முதல்வர் மு.க ஸ்டாலின். திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்காக தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து இன்று திருநெல்வேலியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை சந்திக்கும் வகையில் திமுக கட்சி காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்தநிலையில், தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான திமுக தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க […]
M.K. Stalin: மக்களவை தேர்தலுக்கான திருச்சி, பெரம்பலூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சி சிறுகனூரில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பிரசாரத்தை தொடங்கினார். திருச்சி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் பேசியதாகவது, “திருச்சி என்றாலே திமுக தான், திருச்சியில் இருந்து தொடங்கும் பாதை எப்போதும் வெற்றிப்பாதைதான். இந்தியாவில் திருப்புமுனையை ஏற்படுத்த திருச்சியில் ஒன்றிணைந்துள்ளோம். Read More – பாமக வேட்பாளர் பட்டியலில் அதிரடி மாற்றம்..! அன்புமணி ராமதாஸ் மனைவி தர்மபுரியில் போட்டி திருச்சி என்றாலே திருப்புமுனை, […]
DMK – Congress – மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் தலைமையின் கீழ் தனித்தனி கூட்டணிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் தற்போது வரையில் திமுக கூட்டணி மட்டுமே உறுதியாக தங்கள் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு விவரங்களை அடுத்தடுத்து அறிவித்து வருகிறது. Read More – எங்கள் தலைவர் ராகுல் காந்தியின் 5 உத்திரவாதங்கள் இதுதான்.! ப.சிதம்பரம் விளக்கம்.! முன்னதாக திமுக தலைமையிலான கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, முஸ்லீம் லீக் கட்சிகளுக்கு […]
DMK-VCK : மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம் லீக் கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு ஏற்பட்டுள்ள நிலையில், திமுகவின் பிரதான கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, மதிமுக ஆகிய கட்சிகள் இன்னும் இறுதி முடிவை எடுக்காமல் இருந்து வருகின்றன. Read More – புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்.! அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி.! இதில் விசிக சார்பில் 2 தனி தொகுதிகளும், ஓர் பொது […]
MK Stalin – மக்களவை தேர்தல் தொடங்க இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள், ஆளும் மத்திய மாநில அரசுகள் தேர்தல் வேலைகளில் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டால் புதிய திட்டங்களை அறிவிக்கவோ, செயல்படுத்தவோ தேர்தல் விதிகளில் அனுமதியில்லை. Read More – மநீம நிர்வாகிகள் கூட்டம் ஒத்திவைப்பு.. கமலின் பயணம் ரத்து? காரணம் இதுதானா? அதனால், பிரதமர் மோடி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் […]
MK Stalin – பிரதமர் மோடி கடந்த திங்கள் கிழமை அன்று சென்னையில் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் பேசுகையில், ஆளும் மாநில திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். 140 கோடி இந்தியர்களும் தனது குடும்பம் என்றும், Read More – ‘நீங்கள் நலமா?’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! திமுகவினர் குடும்ப ஆட்சி நடத்தி வருகின்றனர் என்றும் கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும், மத்திய அரசு நேரடியாக தமிழக மக்களுக்கு […]
CM Stalin கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். READ MORE- குலசையில் இருந்து விண்ணில் பாய்ந்தது ரோகிணி ராக்கெட்! இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் நீண்டகரை “ஆ” கிராமம், பிள்ளைத்தோப்பு கடற்கரைப் பகுதியில் கடந்த 25.02.2024 அன்று பிற்பகல் ஆலன்கோட்டை அரசுப்பள்ளியில் படித்துவரும் மாணவிகள் சஜிதா (வயது 13) மற்றும் தர்ஷினி […]
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் Umagine TN 2024 எனும் தகவல் தொழில்நுட்ப மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான துவக்க நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது முதல்வர் பேசுகையில், தமிழகத்தின் நவீன தகவல் தொழில்நுட்ப உலகின் சிற்பி கலைஞர் கருணாநிதி தான். அவரது ஆட்சி காலத்தில் தான் தமிழகத்தில் ஐடி துறை உருவாக்கப்பட்டது. அவரது காலம் எப்படி ஐடி துறைக்கு பொற்காலமாக இருந்ததோ, அதே போல் திராவிட […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறுபான்மையினர் நலத்துறை ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய முதல்வர் ” எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. கோரிக்கை வைத்தால் நடவடிக்கை எடுப்பது என்று இல்லாமல் மக்களுக்கு தேவையானதை பார்த்து பார்த்து திமுக அரசு செய்து வருகிறது. பிறப்பிற்கு பேதம் பார்க்கும் சித்தாந்தத்திற்கும் சொந்தக்காரர்களான அவர்கள் நம்மை பார்த்து பிரிவினைவாதிகள் என சொல்வது வேடிக்கையாக உள்ளது. திராவிட மாடல் பிரிவினையை தூண்டுவதாக கூறிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா […]
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தென் இந்திய மாநிலங்களுக்கு உரிய வரி பகிர்வு, சலுகைகள் அறிவிக்கப்படவில்லை என கூறி தமிழகம், கேரளா, கர்நாடகா மாநில அரசுகள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். அனைவருக்கும் வழிகாட்டியாக மன்மோகன் சிங் திகழ்கிறார்.! பிரதமர் மோடி புகழாரம்.! நேற்று கர்நாடக அரசு சார்பில அம்மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், கர்நாடக காங்கிரஸ் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் […]