தமிழகத்துக்கு தேவையான நிதியை வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தலைநகர் டெல்லிக்கு பிரதமர் நரேந்திர மோடியை புறப்பட்டார் முதலமைச்சர் பழனிசாமி .இந்நிலையில் இன்று டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார்.இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்றது. இதன் பின்னர் முதலமைச்சர் பழனிசாமி கூறுகையில், தமிழகத்துக்கு தேவையான நிதியை வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அண்ணா மற்றும் ஜெயலலிதாவிற்கு பாரத […]