ராணுவ தளபதி கருத்துக்கு சீனா இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ராணுவ தினத்தை முன்னிட்டு நேற்று டெல்லியில் ராணுவ வீரர்களின் அணி வகுப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தரைப்படடை தளபதி பிபின் ராவத், சீனாவிற்கும், பாகிஸ்தானுக்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசினார். எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி கவனத்தை திசை திருப்பிவிட்டு அந்த நேரத்தில் தங்கள் நாட்டு தீவிரவாதிகளை இந்தியாவிற்குள் ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து முயற்சித்து வருவதாகக் கூறினார். அவர்களுக்கு இந்திய வீரர்கள் […]