Big Breaking : நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரினார்  முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரினார்  முதலமைச்சர் நாராயணசாமி .காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளதென்றும்.முன்னாள் ஆளுநர் கிரண்பேடி தந்த நெருக்கடியை சமாளித்து ஆட்சி செய்துள்ளோம் .கடந்த ஆட்சியில் என்.ஆர்.காங்கிரஸ் விட்டுச்சென்ற பணிகளை நிறைவு செய்துள்ளோம் .புதுச்சேரி மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்று கடந்த நான்கு  ஆண்டுகால ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பற்றி பேசி வருகிறார்.

முதல்வர் நாராயணசாமி பெருபான்மையை நிரூபிக்க எதிர்க்கட்சியினர் கடிதம்..!

நாராயணசாமி தலைமையிலான காங்கிரசுக்கு இன்னும் மூன்று மாதம் பதவி காலம் உள்ளது. அதற்குள் அமைச்சர் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ், ஜான்குமார் ஆகிய நான்கு பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்தது   புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து தற்போது காங்கிரஸ் எம்எல்ஏக்களின் பலம் 10-ஆக குறைந்துள்ளது. அதே நேரத்தில் திமுக 3 , ஒரு சுயேட்சை எம்எல்ஏ ஆதரவுடன் ஆளும் காங்கிரசின் பலம் 14-ஆக உள்ளது. எதிர்க்கட்சிகள் என்ஆர் காங்கிரஸ்-7, … Read more

புதுச்சேரியை காப்பாற்ற பாஜகவை ஓட ஓட விரட்ட வேண்டும் – முதல்வர் நாராயணசாமி!

புதுச்சேரியை காப்பாற்ற பாஜகவை ஓட ஓட விரட்ட வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். உத்திரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் எனும் கிராமத்தில் 19 வயது பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் நான்கு உயர்ஜாதி ஆண்களால் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடுமையாக உயிரிழந்தார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், மத்திய அரசுக்கு விரோதமாகவும், உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்க்கு விரோதமாகவும் கண்டனம் தெரிவித்து … Read more

வெளி மார்க்கெட்டில் நிதி பெற்று மாநிலங்களுக்கு வழங்குங்கள் – பிரதமருக்கு புதுச்சேரி முதல்வர் கடிதம்.!

வெளி மார்க்கெட்டில் நிதி பெற்று மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம் அனுப்பியுள்ளார். ரிசர்வ் பேங்க் அப் இந்திய அல்லது வெளி மார்க்கெட்டில் இருந்து நிதி பெற்று மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், புதுச்சேரி மாநிலத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யக்கோரியும் முதல்வர் நாராயணசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே, சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொளி மூலம் நடைபெற்ற … Read more

ஜூன் 1 முதல் மதவழிபாட்டு தலத்தை திறக்க அனுமதிக்க வேண்டும் – புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி!

புதுச்சேரியில் ஜூன் 1 ஆம் தேதி அனைத்து மதவழிபாட்டு தலங்களையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள்.  கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பல லட்சக்கணக்கானோரை பாதித்துள்ளது. இந்தியாவிலும் ஒன்றரை லட்சத்தை  கடந்துள்ளது. இதனால், கடந்த 50 நாட்களுக்கு மேலாக இந்தியா முழுவதும் ஊரடங்கு சட்டம் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், மதவழிபாட்டு தலங்களை ஜூன் 1 ஆம் தேதியிலிருந்து புதுச்சேரியில் மதவழிபாட்டு தலங்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என பிரதமருக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி … Read more

புதுசேரியில் கள்ளத்தனமாக மது விற்பனை.! 100 கடைகளின் உரிமம் ரத்து.! 200 பேர் மீது வழக்குப்பதிவு.!

இன்னும் மதுபான கடைகள் திறக்காத புதுசேரியில், மது கணக்கு குளறுபடியாக இருந்ததாக சுமார் 100 கடைகளின் உரிமம் தற்காலிமாக ரத்து செய்யப்பட்டது. மேலும், 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட  தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால், புதுசேரி அரசு இன்னும் மதுக்கடைகள் திறப்பது தொடர்பாக எந்த முடிவையும் எடுக்காமல் இருக்கிறது.   இந்நிலையில் புதுசேரியில் கள்ளத்தனமாக அதிக விலையில் மது விற்கப்படுவதாக புதுசேரி ஆளுநர் கிரண்பேடிக்கு புதுசேரி … Read more

புதுச்சேரியின் நிலைப்பாடு என்ன ? இன்று ஆலோசனை

புதுச்சேரியில் இன்று ஊரடங்கின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக முதலில் ஏப்ரல் 14 -ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் பின்னர் ஊரடங்கு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இன்னும் 2 நாட்களில் ஊரடங்கு முடிவடையுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் இன்று ஊரடங்கின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளதாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.மேலும் இன்று முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. … Read more

புதுச்சேரியில் முதலமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா இல்லை – சுகாதாரத்துறை தகவல்

புதுச்சேரியில் முதலமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொற்று இல்லை என்று  புதுச்சேரி சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஆனால் போலீசார்,பத்திரிக்கைத்துறை உள்ளிட்டோருக்கு கடந்த சில நாட்களாவே ஒரு சிலருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதியாகியுள்ளது.இது சற்று பீதியடைய செய்துள்ளது. எனவே  தான்   புதுச்சேரி முதலமைச்சர்  நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் , அமைச்சர்களுக்கு  உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டது.இந்நிலையில் பரிசோதனை முடிவுகள் வந்த நிலையில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி முதலமைச்சர்  நாராயணசாமி உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை !

இன்று  புதுச்சேரி முதலமைச்சர்  நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் , அமைச்சர்களுக்கு  உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஆனால் போலீசார்,பத்திரிக்கைத்துறை உள்ளிட்டோருக்கு கடந்த சில நாட்களாவே ஒரு சிலருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதியாகியுள்ளது.இது சற்று பீதியடைய செய்துள்ளது. எனவே  தான் புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ்  புதிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.அதாவது,இன்று  புதுச்சேரி முதலமைச்சர்  நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் , அமைச்சர்களுக்கு  உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என அமைச்சர் … Read more

புதுச்சேரியில் தனியார் மருத்துவமனைகளை திறக்காவிட்டால் உரிமம் ரத்து -முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரியில் தனியார் மருத்துவமனைகளை திறக்காவிட்டால் உரிமம் ரத்து என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு மே 3 ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனாவால் இதுவரை 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், கொரோனா வைரஸ் பாதிப்பு புதுச்சேரியில் கடந்த 15 நாட்களாக இல்லை. மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் … Read more