சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகளிலிருந்து தென் தமிழகம் வரை ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று 7 மாவட்டங்களிலும் நாளை 10 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (மார்ச் 22) தென் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, […]
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று (மார்ச்.17) முதல் அடுத்த 6 நாட்களுக்கு ஒரு சில பகுதிகளில், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு தமிழ்நாட்டில் மாலை 4 மணி வரை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் […]
சென்னை: வடகிழக்கு பருவமழை 2024 ஆம் ஆண்டில் இயல்பைவிட 33% கூடுதலாக பதிவாகியுள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை எந்த மாவட்டத்திலும் இயல்பைவிடக் குறைவாக பெய்யவில்லை. இந்த ஆண்டு கடந்தாண்டைவிட 27 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியிருக்கிறது. 6 மாவட்டங்களில் மிக அதிகம், 23 மாவட்டங்களில் அதிக மழையும், 11 மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும் மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் […]
சென்னை: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர – வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில், அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக படிப்படியாக வழுவிழக்கக்கூடும் என்று சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. இதன் காரணாமாக, இன்று முதல் வரும் 31-ஆம் தேதி வரை வடதமிழக […]
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து, தூத்துக்குடி உட்பட 9 துறைமுகங்களில் நேற்று முன் தினம் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மேலும், கடல் பகுதியில் பலத்த காற்று வீச கூடும் என்பதால் துறைமுகத்தில் கப்பல்கள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும் மீன் பிடி துறைமுகத்தில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. தற்போது, வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுவிழந்ததை தொடர்ந்து, பலத்த மழை மற்றும் காற்று இல்லை […]
சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு இருக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. Satellite IR animation from INSAT 3DR (20.12.2024 0315-0945 IST) showing convective clouds associated with the well marked low pressure […]
சென்னை: தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் புகுதிகளில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்வதாலும், மழைநீர் சூழ்ந்து கிடப்பதாலும் மாணவர்கள் பாதுகாப்பு கருதி இன்று 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி […]
சென்னை: கனமழை எதிரொலியால் தஞ்சை, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விழுப்புரம், திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திண்டுக்கல், மதுரை, கடலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், விருதுநகர், சேலம், சிவகங்கை, தேனி, தருமபுரி, நாகை, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக பூண்டி ஏரியில் இருந்து தற்போது விநாடிக்கு 12,760 கன அடி நீர் […]
சென்னை: கனமழை காரணமாக பூண்டி ஏரி வேகமாக நிரம்பி வரும் நிலையில் இன்று மதியம் 1.30 மணிக்கு திறக்கப்படுகிறது. 35 அடி கொண்ட ஏரியில் தற்போது 34.05 அடி நீர் உள்ளது. இதனால், மதியம் 1.30 மணிக்கு விநாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது என திருவள்ளூர் ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனால், கரையோர மக்களுக்கு இன்று முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருவண்ணாமலை சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. […]
திருவள்ளூர்: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய காலை பெய்ய தொடங்கிய கனமழை இன்னும் பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியின் மொத்த அடியான 35 அடியின் 34.05 அடியை எட்டியதால், இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஏரியிலிருந்து 1,000 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், ஏரிக்கு வரும் […]
சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழை பெய்தது. தற்பொழுது, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், தி.மலை, வேலூர், கடலூர், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும் விடாது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சேலம், தூத்துக்குடி, திருப்பத்தூர், கரூர், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, அரியலூர், சென்னை, விழுப்புரம், […]
சென்னை: ஃபெஞ்சல் புயல் எதிரொலி காரணமாக கனமழை பெய்ததால் பல்வேறு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விழுப்புரத்தில் பெய்த கனமழை காரணமாக ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், இன்று (டிசம்பர் 2) சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல இருந்த 10க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், வந்தே பாரத் ரயில், தேஜஸ் விரைவு ரயில், சோழன் விரைவு ரயில், குருவாயூர் விரைவு ரயில், பாண்டிச்சேரி MEMU ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே […]
சென்னை: சென்னையில் ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது, தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் செல்வி நகர், GKM காலனி உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். இதனையடுத்து, கொளத்தூர், பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு, அங்கு சிகிச்சை பெரும் நோயாளிகளிடம் நலன் விசாரித்தார். இந்த ஆய்வின் போது அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். கொளத்தூரில் […]
சென்னை : சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 140 கிமீ தொலைவில் மையம் கொண்டிருக்கும் புயலின் தீவிரம் இப்போதே தெரியத் தொடங்கியிருக்கிறது. சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்படுகிறது. பலத்த காற்றினால் மரங்கள் அங்கும் இங்கும் ஆடுகின்றன. புயல் கரையைக் கடக்கும் வரை இப்படியான தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், சென்னையில் கடந்த 5 மணிநேரத்தில் 6 இடங்களில் 10 […]
சென்னை : ஃபெஞ்சல் புயல் நாளை கரையைக் கடப்பதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. பெஞ்சல் புயல் இன்று பிற்பகல் கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம். மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அதிகனமழையுடன் 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் , புயல் கரையை கடக்கும் போது கிழக்கு கடற்கரைச் சாலை […]
சென்னை : வங்கக்கடலில், உருவாகி இருக்கும் ஃபெஞ்சல் புயல், சென்னைலியிருந்து 140கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது, 12கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், இன்று மதியம் அல்லது மாலையில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெஞ்சல் புயலின் எதிரொலியாக சென்னை உட்பட பல மாவட்டங்களில் கனமழையானது கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் வெள்ள அபாய சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு தலா 30 பேர் […]
சென்னை : வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி கடற்கரையில் கரையை கடக்கவுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்திருந்தது. எனவே, இந்த மாவட்டங்களில் மின்தடை ஏற்படக்கூடிய விவரம் பற்றிய தகவலையும் தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி… கோவை : மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலங்கொம்பு, ஜடையம்பாளையம், தேரம்பாளையம் அன்னூர், படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம், கடலூர் : தட்டாஞ்சாவடி, திருவதிகை, […]
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் சென்னை மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நாளையும் சென்னையில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த பகுதியில் மின்தடை ஏற்படும் என்பது பற்றிய தகவலையும், தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி,… மின்தடை […]
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றே புயலாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் புயலாக மாறுவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், அடுத்த 12 மணி நேரத்தில் ஃபெங்கல் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தனியார் வானிலை ஆய்வாளரான டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர், ‘நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் எனவும் மக்கள் யாரும் அச்சப் பட வேண்டாம் எனவும்’ அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். […]
சென்னை : வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து இன்று பிற்பகல் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இந்த வானிலை நிலவரம் குறித்து இந்திய வானிலை மற்றும் சென்னை வானிலை மைய இயக்குனரகம் அவ்வப்போது தகவல் தெரிவித்து வந்தாலும், தனியார் வானிலை ஆர்வலர்களும் தற்போதைய வானிலை […]