கடும் கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம்.! ட்ரோன் மூலம் காவல்துறை கண்காணிப்பு.!

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு டிசம்பர் 31 அன்று இரவு சென்னையில் 368 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது எனவும், இதுவரை டிசம்பர் 25 முதல் 360 வாகனங்கள் விதிகளை மீறியதால் சீஸ் செய்யப்பட்டது எனவும், ரேஸில் ஈடுபடும் வாகனங்களை கண்காணிக்க தெளிவாக இரவில் படம்பிடிக்க கூடிய டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்படும் என காவல் ஆணையர் தெரிவித்தார்.   மேலும், 18 … Read more

சிம் ஸ்வாப் முறையில் மோசடி – 4 பேர் கைது!

கூகுள் பே மூலம் பல லட்சம் ரூபாய் கொள்ளையடித்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என சென்னை காவல் ஆணையர் தகவல். சிம் ஸ்வாப் என்ற முறையில் கூகுள் பே மூலம் பல லட்சம் ரூபாய் கொள்ளையடித்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். வடமாநில கொள்ளை கும்பலை சேர்ந்த 4 பேரை காவல்துறை கைது செய்து சென்னை அழைத்து வரப்பட்டது என்றும் கூறினார். அதாவது, மற்றொரு … Read more

விடைபெற்றார் ஏ.கே.விஸ்வநாதன்.. பொறுப்பேற்ற மகேஷ் குமார்!

சமீபத்தில் சென்னை மாவட்ட காவல் ஆணையரான ஏ.கே.விஸ்வநாதன் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக, தமிழக ஆபரேஷன் பிரிவு டிஜிபியாக இருந்த மகேஷ் குமார் அகர்வால் சென்னை மாவட்ட காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட நிலையில், சென்னை மாவட்ட காவல் ஆணையரான ஏ.கே.விஸ்வநாதன், தமிழக செயலாக்கம் பிரிவு டிஜிபியாக நியமிக்கப்பட்டார். புதிய காவல் ஆணையர் மகேஷ் குமாரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விடைபெற்றார் ஏ.கே.விஸ்வநாதன். சென்னையின் 107-வது காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

#Breaking: சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இடமாற்றம்!

சென்னை மாவட்ட காவல் ஆணையரான ஏ.கே.விஸ்வநாதன் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக, தமிழக ஆபரேஷன் பிரிவு டிஜிபியாக இருந்த மகேஷ் குமார் அகர்வால் சென்னை மாவட்ட காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டார். மேலும் மகேஷ் குமார் அகர்வால், கொரோனா தடுப்பு பிரிவு சிறப்பு குழுவில் சென்னை வடக்கு மண்டல சிறப்பு ஐபிஎஸ் அதிகாரியாகவும் உள்ளார். இந்நிலையில் சென்னை மாவட்ட காவல் ஆணையரான ஏ.கே.விஸ்வநாதன், தமிழக செயலாக்கம் பிரிவு டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.

சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ்க்கு சம்மன்..!

சென்னை காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ், வரும் 13ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. அப்பல்லோ மருத்துவர்கள் விக்ரம், ராஜ் மாதங்கி ஆகியே இருவரும் 14ம் தேதி ஆஜராக வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன், ஐஏஎஸ் அதிகாரி ராமலிங்கம் ஆகியோர் வரும் 16ம் தேதி மறுவிசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அன்றைய தினம் குறுக்கு விசாரணை நடத்துவதற்காக அப்பல்லோ நீரழிவு … Read more